20
உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் “இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது: நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்” என்பர்.
21
அப்போது நீ, “இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வாய்.
22
என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'வேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்: மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்: அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்: உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.
23
அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்: அவர்கள் அரசியர் உங்கள் செவிலித் தாயர் ஆவர்: முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அவர்கள் உன்னை வணங்குவர்: உன் காலடிப் புழுதியை நக்குவர்: நானே ஆண்டவர் என்பதையும், எனக்காகக் காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும் அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.