24
கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே: யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.
25
பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்: மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்: ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்:
26
என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்: என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்: எருசலேமை நோக்கி, “நீ குடியமர்த்தப் பெறுவாய்” என்றும் யூதா நகர்களிடம், “நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்” என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்” என்றும் கூறுகின்றேன்.