ஏசாயா 44:21-23 - WCV
21
யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்: நீ என் ஊழியன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ தான் என் அடியான்: இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.
22
உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
23
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: ஆண்டவர் இதைச் செய்தார்: மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்: மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்: ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்: இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.