2
உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்: என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட “எசுரூன்” அஞ்சாதே!
3
ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்: வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்: உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்: உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்:
4
அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.