10
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்: கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.
11
பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்: சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்: மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
12
அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்: அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.