ஏசாயா 33:20-22 - WCV
20
நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்: அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.
21
ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்: அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது: துடுப்புப் படகு அங்குப் போவதில்லை: மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.
22
ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்: ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்: ஆண்டவரே நமக்கு வேந்தர்: அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.