ஏசாயா 33:11-14 - WCV
11
நீங்கள் பதரைக் கருத்தாங்கி, வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்: உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.
12
சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்: முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.
13
தொலையில் உள்ளோரே, நான்செய்வதைக் கேளுங்கள்: அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.
14
சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்: இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்? என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?