1
கலகக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்: என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்: இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர்.
2
என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்: பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும் எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.
3
பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு மானக்கேட்டைக் கொணரும்: எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.