யாத்திராகமம் 19:12-19 - WCV
12
மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு.உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்.மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.
13
அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும்.அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள் மலைமேல் ஏறிவரட்டும்” என்றார்.
14
மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார்.மக்களைத் தூய்மைப்படுத்தினார்.அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.
15
அவர் மக்களை நோக்கி, “மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள்.மனைவியோடு கூடாதிருங்கள்” என்றார்.
16
மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது.மின்னல் வெட்டியது.மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது.எக்காளப் பேரொலி எழுந்தது.இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர்.
17
கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார்.அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள்.
18
சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார்.அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது.மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19
எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று.மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.