சங்கீதம் 94:20-23 - WCV
20
சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ?
21
நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்: மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.
22
ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்: என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.
23
அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்: அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்: நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.