சங்கீதம் 87:3-6 - WCV
3
கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)
4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்: பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, 'இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும்.
5
'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்: உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.
6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, 'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். (சேலா)