சங்கீதம் 73:4-8 - WCV
4
அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை: அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.
5
மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
6
எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது: வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.
7
அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன: அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.
8
பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்: இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.