15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்: உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது.
16
தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்: உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்: இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.
18
கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும்.