சங்கீதம் 50:16-21 - WCV
16
ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்: “என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்: என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.
18
திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்: கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.
19
உங்கள் வாய் உரைப்பது தீமையே: உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.
20
உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்: உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.
21
இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்: நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்: ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்: உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.