11
ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்: அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.
12
உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால் அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்.”
13
ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்: அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14
“இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்: இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.
15
இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்: அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன்.
16
இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்: இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.
17
இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்: நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.