6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்: நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்: அவர்களை அச்சம் மேற்கொள்ளாது: இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.
9
அவர்கள் வாரி வழங்கினர்: ஏழைகளுக்கு ஈந்தனர்: அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.