24
வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.
25
அவர்களின் செயலை அவர் அறிவார்: ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்: அவர்களும் நொறுக்கப்படுவர்.
26
அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர் மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.
27
ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்: அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை:
28
ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்: அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.