1
மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதிமொழிகளாவன:
2
ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்: அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.
3
இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்:”இஸ்ரயேலின் பாறை” எனக்கு கூறினார்.
4
விடியற்கால ஒளியென திகழ்கிறான்: முகிலற்ற காலை கதிரவனென ஒளிர்கிறான்: மண்ணின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகிறான்.
5
குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ? அனைத்திலும், திட்டமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டு, என்றும் நிலைக்கும் உடன்படிக்கை அவர் என்னோடு செய்து கொண்டார். என் அனைத்து மீட்பும் விருப்பும் அவரால் உயர்வு பெறாதோ?