ஆதியாகமம் 41:38-40 - WCV
38
பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, “இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ?” என்றான்.
39
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, “இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்.உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.
40
எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்.உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும்.அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்” என்றான்.