8
மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
9
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10
“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன்.ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது.ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்.எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.