ஆதியாகமம் 12:11-13 - WCV
11
அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.
12
எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது”இவள் அவனுடைய மனைவி” எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்: உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.
13
உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு” என்றார்.