<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>WCV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 110</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/tsk-tamil-reference-bible/biblerss/wcv/19/110/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/19-சங்கீதம்/110-chapter.html?ord=091626" />
  <id>tag:/truthintamil.com,2026-09-16:20260916</id>
  <updated>2026-09-16T03:03:26+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 110</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/19-சங்கீதம்/110-chapter.html?ord=091626" />
          <id>tag:/truthintamil.com,2026-09-16:20260916</id>
          <updated>2026-09-16T03:03:26+00:00</updated>
          <summary>
				ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
				வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்: உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
				நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்: வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
				'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
				என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.
				வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்பவார்: பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
				வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்: ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>