வேதாகமத்தை வாசி

எஸ்தர் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
2பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
3யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.