1 | மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு |
2 | நான் என்னுடைய சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன். |
3 | அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். |
4 | பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. |
5 | அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: |
6 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து |
7 | எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது: |
8 | பாரோஷின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். |
9 | செபத்தியாவின் வம்சத்தினர்கள் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். |
10 | ஆராகின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். |
11 | யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுபேர். |
12 | ஏலாமின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர். |
13 | சத்தூவின் வம்சத்தினர்கள் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். |
14 | சக்காயின் வம்சத்தினர்கள் எழுநூற்று அறுபதுபேர். |
15 | பின்னூயியின் வம்சத்தினர்கள் அறுநூற்று நாற்பத்தெட்டுபேர். |
16 | பெபாயின் வம்சத்தினர்கள் அறுநூற்று இருபத்தெட்டுபேர். |
17 | அஸ்காதின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர். |
18 | அதோனிகாமின் வம்சத்தினர்கள் அறுநூற்று அறுபத்தேழுபேர். |
19 | பிக்வாயின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர். |
20 | ஆதீனின் வம்சத்தினர்கள் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். |
21 | எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று எட்டுபேர். |
22 | ஆசூமின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்தெட்டுபேர். |
23 | பேசாயின் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபத்துநான்குபேர். |
24 | ஆரீப்பின் வம்சத்தினர்கள் நூற்றுப்பன்னிரண்டுபேர். |
25 | கிபியோனின் வம்சத்தினர்கள் தொண்ணூற்று ஐந்துபேர். |
26 | பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் நூற்று எண்பத்தெட்டுபேர். |
27 | ஆனதோத்தூர் மனிதர்கள் நூற்று இருபத்தெட்டுபேர். |
28 | பெத்அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் நாற்பத்திரண்டுபேர். |
29 | கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். |
30 | ராமா, காபா ஊர்களின் மனிதர்கள் அறுநூற்று இருபத்தொருபேர். |
31 | மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் நூற்று இருபத்திரண்டுபேர். |
32 | பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் நூற்று இருபத்துமூன்றுபேர். |
33 | வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் ஐம்பத்திரண்டுபேர். |
34 | மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர். |
35 | ஆரீம் வம்சத்தினர்கள் முந்நூற்று இருபதுபேர். |
36 | எரிகோ வம்சத்தினர்கள் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். |
37 | லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் எழுநூற்று இருபத்தொருபேர். |
38 | செனாகா வம்சத்தினர்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர். |
39 | ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். |
40 | இம்மேரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். |
41 | பஸ்கூரின் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். |
42 | ஆரீமின் வம்சத்தினர்கள் ஆயிரத்துப் பதினேழுபேர். |
43 | லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் எழுபத்துநான்குபேர். |
44 | பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் நூற்று நாற்பத்தெட்டுபேர். |
45 | வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக நூற்று முப்பத்தெட்டுபேர். |
46 | ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள் |
47 | கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள் |
48 | லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள் |
49 | ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள் |
50 | ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள் |
51 | காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள் |
52 | பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபிஷசீமின் வம்சத்தினர்கள் |
53 | பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள் |
54 | பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள் |
55 | பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள் |
56 | நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள் |
57 | சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள் |
58 | யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள் |
59 | செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள். |
60 | ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். |
61 | தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: |
62 | தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். |
63 | ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கிலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள். |
64 | இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். |
65 | ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். |
66 | சபையார்கள் எல்லோரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராக இருந்தார்கள். |
67 | அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். |
68 | அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. |
69 | ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. |
70 | வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான். |
71 | வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு இருபதாயிரம் தங்கக்காசுகளையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். |
72 | மற்ற மக்கள் இருபதாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள். |
73 | ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள். |