<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>IRV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 87</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/irv/19/87/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/87-chapter.html?ord=083026" />
  <id>tag:/truthintamil.com,2026-08-30:20260830</id>
  <updated>2026-08-30T02:50:03+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 87</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/87-chapter.html?ord=083026" />
          <id>tag:/truthintamil.com,2026-08-30:20260830</id>
          <updated>2026-08-30T02:50:03+00:00</updated>
          <summary>
				கோராகின் மகன்களுடைய பாடல் அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
				கர்த்தர் யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
				தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
				என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
				சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
				கர்த்தர் மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
				எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>