<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
	<atom:link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/irv/19/29.raw" rel="self" type="application/rss+xml" />
	<image>
	  <url>https://truthintamil.com/media/com_zefaniabible/images/bible_100.jpg</url>
	  <title>IRV</title>
	  <link>https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/29-chapter.html?ord=042926</link>
	</image>
	<title>IRV</title>
	<link>https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/29-chapter.html?ord=042926</link>
	<generator>Zefania Bible</generator>
	<language>en-gb</language>
	<copyright>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</copyright>
	<description>சங்கீதம் அத்தியாயம் 29</description>
	<item>
		<title>சங்கீதம் அத்தியாயம் 29</title>
		<link>https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/29-chapter.html?ord=042926</link>
		<guid>https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/29-chapter.html?ord=042926</guid>
		<pubDate>Wed, 29 Apr 2026 14:01:23 +0000</pubDate>
		<description>
				தாவீதின் பாடல் தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
				கர்த்தருடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
				கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
				கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
				கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
				அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
				கர்த்தருடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
				கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
				கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் கர்த்தருக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
				கர்த்தர் பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
				கர்த்தர் தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
		</description>
	</item>
</channel>
</rss>