<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>IRV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 121</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/irv/19/121/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/121-chapter.html?ord=071026" />
  <id>tag:/truthintamil.com,2026-07-10:20260710</id>
  <updated>2026-07-10T07:07:14+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 121</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/irv/19-சங்கீதம்/121-chapter.html?ord=071026" />
          <id>tag:/truthintamil.com,2026-07-10:20260710</id>
          <updated>2026-07-10T07:07:14+00:00</updated>
          <summary>
				ஆரோகண பாடல் எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
				வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
				உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
				இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
				கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
				பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
				கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
				கர்த்தர் உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>