<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>ERV</title>
  <subtitle>எரேமியா அத்தியாயம் 45</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/erv/24/45/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/24-எரேமியா/45-chapter.html?ord=082226" />
  <id>tag:/truthintamil.com,2026-08-22:20260822</id>
  <updated>2026-08-22T15:46:09+00:00</updated>
  	<entry>
      	<title>எரேமியா அத்தியாயம் 45</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/24-எரேமியா/45-chapter.html?ord=082226" />
          <id>tag:/truthintamil.com,2026-08-22:20260822</id>
          <updated>2026-08-22T15:46:09+00:00</updated>
          <summary>
				யோயாக்கீம் யோசியாவின் மகன். யூதாவில் யோயாக்கீமின் நான்காவது ஆட்சியாண்டில் தீர்க்கதரிசியான எரேமியா நேரியாவின் மகனான பாருக்கிடம் இவற்றைச் சொன்னான். பாருக் ஒரு புத்தகச் சுருளில் இவற்றை எழுதினான். எரேமியா பாருக்கிடம் சொன்னது இதுதான்:
				“இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொல்வது:
				‘பாருக், நீ, இது எனக்கு மிகவும் கொடூரமானது. கர்த்தர் எனக்குத் துக்கத்தை வேதனையோடு கொடுத்திருக்கிறார் நான் மிகவும் களைத்துப் போனேன். எனது கஷ்டத்தால் நான் தோய்ந்து போனேன். நான் இளைப்பாற முடியவில்லை’” என்று சொன்னாய்.
				கர்த்தர் சென்னார்: “எரேமியா, பாருக்கிடம் இதனைச் சொல். ‘இதுதான் கர்த்தர் கூறுகிறது. நான் கட்டியவற்றை இடித்துப்போடுவேன். நான் நாட்டியிருக்கின்றவற்றையே பிடுங்கிப் போடுவேன். யூதாவின் எல்லா இடங்களிலும் நான் இதனைச் செய்வேன்.
				பாருக், நீ உனக்காக பெருஞ் செயலுக்காக எதிர்பார்த்திருக்கிறாய். ஆனால் அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்” கர்த்தர். ‘பல இடங்களுக்கு நீ போக வேண்டியிருக்கும். ஆனால், நீ எங்கே போனாலும் உன்னை உயிரோடு தப்பிக்கும்படி நான் செய்வேன்’” என்று கூறினார்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>