<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>ERV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 47</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/erv/19/47/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/47-chapter.html?ord=082226" />
  <id>tag:/truthintamil.com,2026-08-22:20260822</id>
  <updated>2026-08-22T12:24:45+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 47</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/47-chapter.html?ord=082226" />
          <id>tag:/truthintamil.com,2026-08-22:20260822</id>
          <updated>2026-08-22T12:24:45+00:00</updated>
          <summary>
				சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
				உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். பூமியெங்கும் அவர் பேரரசர்.
				பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
				தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந் தெடுத்தார். தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
				எக்காளமும் கொம்பும் முழங்க, கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
				தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
				அகில உலகத்திற்கும் தேவனே அரசர். துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
				பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
				ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>