<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>BSI</title>
  <subtitle>யோசுவா அத்தியாயம் 12</subtitle>
  <link href="https://truthintamil.com/component/zefaniabible/biblerss/bsi/6/12/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/bsi/6-யோசுவா/12-chapter.html?ord=060926" />
  <id>tag:/truthintamil.com,2026-06-09:20260609</id>
  <updated>2026-06-09T22:24:14+00:00</updated>
  	<entry>
      	<title>யோசுவா அத்தியாயம் 12</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/bsi/6-யோசுவா/12-chapter.html?ord=060926" />
          <id>tag:/truthintamil.com,2026-06-09:20260609</id>
          <updated>2026-06-09T22:24:14+00:00</updated>
          <summary>
				யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
				அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
				சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல் மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
				இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,
				எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.
				அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.
				யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
				யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:
				எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,
				எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
				யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
				எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
				தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
				ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
				லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
				மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
				தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
				ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
				மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
				சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
				தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
				கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
				தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,
				திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>