படிப்புகள்: 126
Print

      (எண்ணாகம் 31:14-18): இந்த வேதபகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண்களை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இது அப்பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்லுகிறார். இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு தானே?

மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தார் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை உருவ வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்கள். எனவே இவர்களைப் பழிவாங்கும் வகையில் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண். 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டார்கள், அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக இஸ்ரவேல் மக்களில் 24,000 பேர்களை ஒரு கொள்ளை நோய்யை அனுப்பிக் கொலை செய்தார். இந்த கொள்ளை நோயானது இஸ்ரலேர்கள் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது. (எண் 25:9). ஆகவே, மிதியானியர்களின் தவறான சூழ்ழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களுக்குப் பிரச்சினை வராதபடிக்கு ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயம் தீர்க்கும்படி கட்டளையிட்டார்.

எண்ணாகமம் 31:14-18. இந்த வேதபகுதி திருமணமாகாத கன்னிப் பெண்கள் தவிர அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. கன்னிப் பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது, ஒருவேளை இந்த இளம் கன்னிப் பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான் அவர்கள் திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுடன் அவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே எந்தபொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களை கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால் போர் நிபந்தனைகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று கூறமுடியும். மேலும் அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழங்கி வருகிற அடிமை தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய நாட்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுகிறதோ அதைக் குறித்த அச்சத்தால் எழுகிற கருத்தாகும் இது.

மேலும், எண்ணாகமம் 25:7,8 -இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானிய பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய சட்டம் கற்பழிப்பைக் கண்டனம் செய்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அது மரண தண்டனையும் வழங்குகிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப் பெண்களைத் தப்பவிடுவதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). கற்பழிப்போ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே உடலுறவு குறித்த காரியத்தில் இவ்வளவு கெடுபிடிகள் சட்டங்களால் கொடுக்கப்பட்டுள்ளதால், அமலேக்கிய இனத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்களை பலாத்காரம் இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையாலும் பொருளற்ற வாதம் ஆகும்.