1. கேள்வி: 'எதற்காக எப்படி ஜெபிப்பது என்று நமக்கு தெரியாது என்பது தேவனுக்கு தெரியும். அப்படியிருக்கும் பொழுது தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
விடை: 'நமக்கு ஜெபிக்க தெரியாது என்று சொல்லுகிறோம். உண்மைதான் ஆனால் நம் தீழ்ப்பான நிலையை நம்மால் உணரமுடிகின்றதா? சட்டத்தின் தண்டனைக்குள்ளாக வாழ்கிறோமென்று தேவன் நமக்கு காட்டியிருக்கிறாரா? அப்படி யிருக்குமானால் நீ கவலைப்படவேண்டியதில்லை. உன் இருதயத்தில் தேவன் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. ஜெபம் உன் வாழ்வில் கண்டிப்பாக பலமாக வெளிப்படும். உன் பெருமூச்சுகள் உன் வீட்டின் பல பாகங்களிலிருந்து பரலோகத்திற்கு சென்றிருக்கிறது. ரோமர் 8:26), உன் இருதயம் உன் கண்ணீரை நன்கு அறியும். உன் இருதயம் இன்னொரு உலகத்தின் காரியங்களை வாஞ்சித்து, இவ்வுலக காரியங்களை மறக்கும்படி செய்திருக்கின்றதா? (யோபு 23:12) வசனத்தை வாசித்துப்பார். 'குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை'
- கேள்வி: நான் ஒரு தனி இடத்தை நாடிச் சென்று என் இருதயத்தை தேவனுக்கு முன்பாக ஊற்றவேண்டுமென்று விரும்பினாலும், என்னால் ஒரு வார்த்தை கூட சொல்ல முடிவதில்லை. ஏன்?
விடை : தேவன், ஜெபத்தில் நீ சொல்லும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் உன் இருதயத்தின் நொறுங்குண்ட தன்மையை உற்று கவனிக்கிறார். அதுமட்டுமே அவருடைய இரக்கத்தை நமக்குக்கொண்டுவரும். தேவனே. நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17)
சில சமயங்களில், நமது பேசமுடியாத நிலை, மிகுந்த துன்பத்தால் ஏற்படக்கூடும். 'நான் பேசமாட்டாதபடி சஞ்சலப் படுகிறேன் (சங். 77:4). இதனால் துன்பப்படுகிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் ஏற்படக்கூடும். நம்முடைய வாயின் வார்த்தைகள் வராவிட்டாலும், ஆவியானவர் நம் உள்ளங்களில் பெருமூச்சோடு விண்ணப்பம் செய்ய உதவுகிறார்.
தேவனுக்கு முன்பாக நாம் நின்று பேசவேண்டுமானால், முதலாவது, நமது தீழ்ப்பான நிலையை உணரவேன்டும். இரண்டாவது, தேவனது வாக்குத்தத்தங்களை நினைவு கூரவேண்டும். மூன்றாவது கிறிஸ்துவின் இருதயத்தை நோக்கி பார்க்கவேண்டும். நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுத்திகரிக்குமென்று நம்பவேண்டும். நம்மைப் போன்ற பாவிகளுக்கு, கிறிஸ்து உதவியிருக்கிறாரென்று அறியவேண்டும். அவர் இரக்கத்தின் ஐசுவரியத்தை நம் இருதயத்தில் நினைவுகூரவேண்டும். வார்த்தைகளால் மட்டும் தேவனிடம் ஜெபிக்கக்கூடாது. அவ்வார்த்தைகளோடு நம் முழு இருதயமும் சேர்ந்திருக்கவேண்டும். அப்படியிருக்குமானால் நிச்சயம் ஜெபிக்கும்பொழுது தேவனைக் கண்டுக் கொள்ளுவோம். (எரேமியா 29:13)
- தடை: ஆவியானவர் உதவியில்லாமல், வேறு எந்த வகையிலும் நாம் ஜெபிக்க முடியாதென்று சொல்லும்பொழுது, எப்படி ஜெபிக்க வேண்டுமென்று ஏதாவது ஆலோசனை கூற முடியுமா?
விடை: நாம் ஒருவரையொருவர் ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் இப்படித்தான் ஜெபிக்க வேண்டுமென்று வலியுறுத்த அவசியமில்லை. பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டுமென்று சொல்லலாமேயொழிய, ஒரு குறிப்பிட்ட ஜெபங்களை மட்டும் ஜெபிக்க வேண்டுமென்று சொல்லுவது தவறு. பவுல் அப்போஸ்தலன் பொதுவாக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லுகிறார். (எபேசியர் 6:8) (ரோமர் 15:30-32)
- தடை: ஆனால் சில எழுதப்பட்ட ஜெபங்களை நாம் உபயோகிக்காவிட்டால், நம் பிள்ளைகளுக்கு எப்படி ஜெபிக்க கற்றுக்கொடுப்பது?
விடை : நாம் சில வேளைகளில் நமது பிள்ளைகளுக்கு ஜெபிப்பதற்கு தவறான முறைகளை கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் பிள்ளைகளுக்கு தங்களுடைய தீழ்ப்பான நிலையை உணரும்படி செய்யவேண்டும். ஆதி பாவத்தினாலும், செயற்பாவத்தினாலும், தேவ கோபாக்கினையின் கீழிருக்கிறார்களென்று எடுத்துகாட்ட வேண்டும். இதன் மூலம் நம் பிள்ளைகள் விரைவில் தாங்களே ஜெபிக்க கற்றுக்கொள்ளுவார்கள். இதற்குப் பதிலாக அவர்கள் பாவ நிலையை அவர்களுக்கு எடுத்துக்காட்டாமல், சில எழுதப்பட்ட ஜெபங்களை மட்டும் கற்றுக்கொடுத்தால், அவர்களை நாமே சபிக்கப்பட்ட மாய்மாலக்காரர்களாக, பெருமையோடு சுற்றித்திரிய தூண்டுவதுபோல காணப்படும். எனவே பிள்ளைகளுக்கு. அவர்களுடைய அவலநிலையை எடுத்துக்காட்ட வேண்டும். பாவத்தினால் ஆக்கினைகுள்ளாகி நரகத்திற்கு போக வேண்டும். அதே சமயம் எப்படி மன்னிப்பு பெற்று வெற்றியோடு வாழமுடியுமென்று அவர்களிடம் சொல்ல வேண்டும். அப்படி செய்யும் பொழுது அவர்கள் கண்களில் கண்ணீர்வரும். இருதயத்தில் பெருமூச்சும் ஏற்படும். மேலும் யாரிடம். யார்மூலம் ஜெபிக்கவேண்டுமென்று சொல்லவேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களையும். அவருடைய கிருபையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
தேவனே அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். எனவேதான். தாவீது 'பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.' என்று சொல்லுகிறார். (சங்கீதம் 34:11) உங்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுப்பேன் என்று சொல்லாமல், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்கு போதிப்பேன் என்று சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம், நாம் நம்முடைய பாவநிலையை உணர்ந்து சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்கமுடியும். அந்த நம்பிக்கையின் மூலம், ஆவியானவர் நமக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறார். இவ்வகை போதனையினால் அவர்கள் தேவனிடம் ஜெபிக்கும்படி பழகிக்கொள்வார்கள். தேவன் அப். பவுலை அவர் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும்வரை, ஒரு ஜெபிக்கின்ற மனிதனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று பார்க்கிறோம். அதேபோல் நாமும் கூட (அப்போஸ்தலர் 9:11)
- தடை: ஆனால் சீஷர்கள் தங்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுக்கக் கேட்டபொழுது கிறிஸ்து, கர்த்தருடைய ஜெபத்தை சொல்லிக் கொடுத்தாரல்லவா?
விடை: அவர்கள் மட்டுமல்ல, நாமுங்கூட கிறிஸ்துவால் போதிக்கப்பட விரும்புவோம். தற்சமயம் அவர் சரீரத்தில் இல்லாததால், நமக்கு வார்த்தையாலும், ஆவியானவர் மூலமாயும் கற்றுக்கொடுக்கிறார். நமக்கு போதிக்க, ஆவியானவரை அனுப்ப வேண்டுமேன்று சொன்னதிற்கு இணங்க அவரை நம்மிடையே அனுப்பி இன்றும் போதிக்கிறார். (யோவான் 14:16; 16:7)
மேலும், பரமண்டல ஜெபம் மத்தேயு 6 -ல் இருப்பதை விட லூக்கா 11 -ல் வித்தியாசப்படுவதைப் பார்க்கலாம். மேலும் சீஷர்கள், நாம் எல்லாருமே ஒரே வகை ஜெபத்தை செய்யும்படி சொல்லவில்லை. அவர்களும் அப்படி செய்யவில்லை. மேலும் நிருபங்களிலும், நாம் விசுவாசத்தை முக்கியமாக முயற்சிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.
மேலும், கிறிஸ்து, பரமண்டல ஜெபத்தின் மூலம், நாம் ஜெபத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், பரலோகத்திலிருக்கிற தேவனிடம், விசுவாசத்தோடு, அவருடைய சித்தத்திற்கு உகுந்த காரியங்களுக்காக, ஜெபிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அந்த ஜெபத்தையே ஏறெடுங்கள். அல்லது அந்தமாதிரியில் ஜெபியுங்கள் என்று கூறியுள்ளார் என்று அறியலாம்.
- தடை: கிறிஸ்து, தமது சீஷரை பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கச் சொல்லுகிறார். அதாவது பரிசுத்த ஆவியைப்பெறாமலே ஒருவர் ஜெபிக்க முடியும் என்று அர்த்தப்படும். அது சரியா? (லூக்கா 11:9-13) பார்க்கவும்)
விடை : தேவன் நம்மிடம் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிறவர்களுக்கு அதைக் கொடுப்பார் என்று கிறிஸ்து சொன்னார். அதாவது, அதிக அளவு பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று அர்த்தப்படும். அவர்கள் ஏற்கனவே, ஓரளவு பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட அதிக அளவு பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப் பட்டுள்ளது. ஓரளவு பரிசுத்த ஆவியை நாமும் பெற்றிருக்கிறோம்.
- கேள்வி: கிறிஸ்துவின் சீடரென்று தங்களை அறிந்தவர்கள் மட்டுந்தான் ஜெபிக்கமுடியுமா?
விடை: இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்ற யாராயிருந்தாலும் சரி, அவர்கள் ஜெபிக்கலாம். ஆனால் ஜெபிக்க ஆரம்பித்தவுடன் தன்னை கதேவனுடைய பிள்ளையென்று நினைத்துவிட முடியாது. தேவனுடைய இரக்கம் உனக்கு காட்டப்பட்டால், இயற்கையாகவே ஜெபிக்க ஆரம்பிக்கலாம். கிறிஸ்தவன் என்பதற்கு முதல் அடையாளம் அவன் ஜெபிக்கிறவனாயிருப்பான் (அப்போஸ்தலர் 9:11). தேவனை கிறிஸ்துவாக பார்க்க முற்படுகின்றான்.
அ. கிறிஸ்துவை அவரது பரிசுத்தம், அன்பு, ஞானம், வல்லமை இவற்றிற்காக தேடுகின்றான். சரியான ஜெபம், கிறிஸ்துவின்மூலம் தான் தேவனிடம் செல்லவேண்டும். எனவே, ஜெபம், கிறிஸ்துவையே மையமாக கொண்டிருக்க வேண்டும். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு. பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை' (சங்கீதம் 73:25).
ஆ. நம் ஆத்துமா கடவுளோடு தொடர்ந்து சம்பந்தத்தில் ஈடுபடவேண்டும். 'நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்' (சங்கீதம் 17:15) ''நம்முடைய பரம வாசஸ்தலத்தை தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்'' (2 கொரிந்தியர் 5:2).
இ. சரியான ஜெபம், ஜெபிக்கப்படுகின்ற காரியத்துக்காக காத்திருக்க நம்மைத் தூண்டுகிறது. "எப்பொழுது விடியுமென்று விடியற்காலத்திற்கு காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது" (சங்கீதம் 130:6). ''நான் எழுந்து, என் ஆத்தும நேசரைத் தேடினேன்" (உன்னதப்பாட்டு 3:2) இங்கே நம்மை ஜெபத்திற்கு தூண்டுகிற இரு காரியங்களைப் பார்க்கிறோம். ஒன்று, இவ்வுலக காரியங்களிலும், பாவத்தின் மேலும் வெறுப்பு; மற்றொன்று, பரிசுத்த நிலையில் தேவனோடு தொடர்பு கொள்ள ஒரு அடக்கமுடியாத ஆவல். இவற்றோடு, மக்கள் பொதுவாக ஏறெடுக்கின்ற ஜெபங்களை ஒப்பிட்டு பார்த்தால், அவை கேலி ஜெபங்களாகவும், வெறுக்கப்படத்தக்க ஆவியின் பெரு மூச்சாகவும் காணப்படுகின்றது. அநேகர் ஏறெடுக்கின்ற ஜெபங்கள், ஜெபங்களே அல்ல: அவை, கடவுளையும், உலகத்தையும் ஏமாற்றுவதுபோல் அமைகின்றது. அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் ஜெபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர்கள் ஜெபிக்கிற காரியங்களுக்காக, வாழ்க்கையில் அவர்கள் வாஞ்சிப்பதில்லை. அவர்களது மாய்மாலம் இதில் விளங்குகிறது.