நினைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பெண்
படிப்புகள்: 102
Print
ஆசிரியர்: ஜே. சி. ரைல்
வாசிப்பதற்கான நேரம்: 23 நிமிடங்கள்

 லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள் (லூக். 17:32).

தனது வருகையின் நாளிலே அதற்கு ஆயத்தமில்லாமல் இருக்கப்போகிற மக்களைப் பற்றிப் பேசும்போது, இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிட்டார். தனது வருகைக்கு ஆயத்தமில்லாத, இரட்சிப்படையாத ஆத்துமாக்களைப் பற்றிப் பேசும்போது, இயேசு லோத்தின் மனைவியைக் குறித்துப் பேசுவது கவனிக்கத்தக்கது.

மேலும், இங்கே இயேசு தம்மை வெறுத்த பரிசேயரிடமோ வேதபாரகரிடமோ பேசாமல், தமது சீஷர்களிடம் பேசுகிறார் என்பதைக் கவனிக்கும்போது, இந்த எச்சரிப்பை நாம் இன்னும் கருத்துடன் சிந்திக்க வேண்டும். 'லோத்தின் மனைவியைப் போல இருக்காதீர்கள்' என்று அவர் குறிப்பிடாமல், 'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்' என்று குறிப்பிடுகிறார். நாம் இந்தப் பாடத்தை மறந்துவிடக் கூடாது என்பதுபோலப் பேசுகிறார். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல; நமது சோம்பலான நினைவுகளைத் தட்டி எழுப்பும் வார்த்தைகளாகும்.

இதைக் குறித்து நாம் சில காரியங்களைச் சிந்திக்கலாம்:

  1. லோத்தின் மனைவி அனுபவித்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் நாட்களில் மெய்யான, இரட்சிப்பிற்கேதுவான தேவபக்தி அரிதாகவே இருந்தது. அந்நாட்களில் வேதாகமம் இல்லை; ஊழியர்கள் இல்லை; திருச்சபைகளும் இல்லை. தேவனைப் பற்றிய அறிவு சில குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்தது. உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஆவிக்குரிய இருளிலும், அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், பாவத்திலுமே வாழ்ந்தார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது லோத்தின் மனைவிக்கு அதிக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இருந்தன.

அவளது கணவன் ஒரு நீதிமான்; அவளது மாமனார் (உறவினர்) விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம். லோத்தின் மனைவி விசுவாசத்தைக் குறித்தும், விசுவாசமுள்ள இந்த மனிதர்களின் தேவபயத்தையும் ஜெபங்களையும் குறித்தும் நிச்சயம் அறிந்திருந்தாள். ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையே ஆபிரகாம் பலிபீடம் கட்டியபோது அவள் அங்கேதான் இருந்திருப்பாள் (ஆதி. 12:8). தேவதூதர்கள் வந்து அவளது கணவனிடம் சோதோமை விட்டு ஓடச் சொன்னபோது அவள் அங்கிருந்தாள் (ஆதி. 19). அந்தக் குடும்பத்தின் கைகளைப் பிடித்து நகரத்திற்கு வெளியே தேவதூதர்கள் கொண்டுபோய் விட்டபோதும் அவள் அங்கே இருந்தாள் (ஆதி. 19:16).

இந்த நன்மைகளைப் பெற்றிருந்தும் அவளுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. அவள் கிருபையைப் பெறாமலும், தேவனற்றவளாகவும், மனந்திரும்பாதவளாகவும், அவிசுவாசியாகவுமே மரித்தாள். ஒருவேளை வெளிப்படையாக அவள் தனது கணவனுடைய தேவபக்திக்கு ஒத்துப் போயிருக்கலாம்; ஆனால், அவளது உள்ளான இருதயமோ பொருளாசை உள்ளதாகவும், தேவனின் பார்வையில் அருவருப்பானதாகவும் காணப்பட்டது. லோத்தின் மனைவியை நினைப்பதன் மூலம் பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:

  1. லோத்தின் மனைவி செய்த பாவம் என்ன? லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் (ஆதி. 19:26) என்று வாசிக்கிறோம். அது ஒரு சிறிய பாவமாகத் தோன்றுகிறதா? சிலர் அப்படி நினைக்கலாம். ஆனால், மேலோட்டமாகத் தெரிவதைவிடப் பல காரியங்கள் அதிலுண்டு.

தற்காலத்தைப் போல (ஆசிரியர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) எந்தக் காலத்திலும் பரிசுத்தமற்ற உலகச் சிந்தையைக் குறித்த எச்சரிக்கை கிறிஸ்தவர்களுக்கு அதிகம் தேவைப்பட்டதில்லை என்று நான் கருதுகிறேன். லோத்தின் மனைவி ஒரு கொலைகாரியாகவோ, விபசாரியாகவோ, திருடியாகவோ இருக்கவில்லை; ஆனாலும், உலகத்தைத் திரும்பிப் பார்த்தாள். இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், உலகத்தின் பொருளாசைக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆகவே, லோத்தின் மனைவி செய்த பாவத்தை நினைவுகூரத்தக்க நேரம் இதுதான் என்பது உறுதி.

ஆனால், நமது ஆரம்ப வருடங்களில் காணப்பட்ட அதே ஆழமான இரக்கமும், மகா பெரிய வல்லமையும் கர்த்தராகிய இயேசுவில் இன்றும் மாறாமல் காணப்படுகின்றன! ஒவ்வொரு விசுவாசியும் நிச்சயமாக அவரை நம்பலாம்.

நமது இருதயத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தவிர, மிகப் பொருத்தமான இரட்சகரைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இயேசுவை விட அவரின் தாயாகிய மரியாளும் மற்ற பரிசுத்தவான்களும் நம்மைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள் என்ற கருத்துக்குச் செவிகொடுக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தன்மையைக் குறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது என்ற அறியாமையினாலேயே அவ்வாறு கூறப்படுகிறது. தேவமனிதனாகிய கர்த்தராகிய இயேசுவில் ஆறுதலைப் பெற்றுக்கொண்ட மனிதனுக்கு, வேறு பரிசுத்தவான்களிடத்திலிருந்தோ, தேவதூதர்களிடத்திலிருந்தோ, கன்னி மரியாளிடத்திலிருந்தோ எந்த ஆறுதலும் தேவையில்லை.

  1. மெய்யான கிறிஸ்தவர்களது வாழ்விலும் பெரிய பலவீனம் அவர்களது விசுவாசத்தில் காணப்படலாம். கடலில் புயல் வீசியபோது சீஷர்கள் நடந்துகொண்டதைவிட இதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை? 'நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?' என்று கூறி, பயத்தினால் இயேசுவை எழுப்பினார்கள். அவர்கள் பொறுமையற்றவர்களாக இருந்தார்கள்; இயேசு எழும்பும்வரை அவர்களால் பொறுத்திருக்க முடியவில்லை. அவர்கள் அவிசுவாசம் உள்ளவர்களாக இருந்தார்கள்; இயேசு தங்களோடு இருக்கும்போது தாங்கள் எப்படி மடிய முடியும் என அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள்; 'உமக்குக் கவலையில்லையா?' என்று கதறினார்கள்.

அவர்கள் பயப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது அன்பும் இரக்கமும் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததே இல்லையா? நாம் பயப்படும்போது ஞாபக சக்தியை இழந்துவிடுவோம்! பல கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருப்பார்கள் என்று நான் அறிவேன். அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக நம்புவதாக நினைக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத சோதனை, பயம், சந்தேகம் வரும்போது, அவநம்பிக்கை வெள்ளம் போல அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.

இவ்வுலக வாழ்வில் யாருமே பரிபூரண கிறிஸ்தவர்களாக வாழ முடியாது என்பதுதான் உண்மை. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமே எகிப்தியருக்குப் பயந்ததினால், தனது மனைவியைச் சகோதரி என்று சொல்லச் சொன்னான். கோலியாத் என்னும் இராட்சதனை எதிர்கொள்ளத்தக்க விசுவாசமுள்ள தாவீது, சவுல் தன்னைக் கொலை செய்யத் தேடினாலும், ஒருநாளில் இஸ்ரவேலுக்குத் தான் தேவனாலேயே அரசனாக ஏற்படுத்தப்படுவான் என்பதை விசுவாசித்தான். ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டு, 'நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினாலே மடிந்துபோவேன்' (1 சாமு. 27:1) என்று அஞ்சினான்.

எந்த விசுவாசியாவது எல்லாப் பிரச்சினைகளிலும் கிறிஸ்துவில் அசையாத அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்க முடியுமா? அப்படியானால் அது நல்லது! ஆனால், உங்கள் விசுவாசம் எப்போதாவது மெய்யான சோதனையைச் சந்தித்திருக்கிறதா என்று நான் கேட்க விரும்புகிறேன். சோதனையில்லாமல் உங்கள் பலவீனத்தை அறிந்துகொள்வது எளிதான காரியமல்ல. எசேக்கியாவின் பலவீனங்கள் என்ன என்பதைக் காட்டவே, கர்த்தர் அவனைச் சோதித்தார் (2 நாளா. 32:31).

இளம் கிறிஸ்தவர்கள் தங்களில் இவ்விதமான காரியங்களைக் காணமுடியும் என்பதால், இந்த எச்சரிப்பை நான் கொடுக்க விரும்புகிறேன். தங்கள் பலவீனத்தைக் கண்டு அவர்கள் சோர்ந்துபோவதை நான் தடுக்க விரும்புகிறேன். இளம் விசுவாசிகள் மெய்யான விசுவாசத்தையும் கிருபையையும் பெற்றிருந்தாலும், சிலவேளைகளில் பயத்தையும் சந்தேகத்தையும் அடைவார்கள் என்பதை உணர வேண்டும். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மெய்யான சீஷர்களாக இருந்தாலும், பயமே இல்லாத அளவிற்கு அவர்கள் பூரண ஆவிக்குரியவர்களாகக் காணப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற விசுவாசிகளிடத்தில் சிலவேளைகளில் காணப்படக்கூடிய பலவீனங்களுக்காக, அவர்களை மிகத் தீவிரமாக நியாயந்தீர்த்துவிடக் கூடாது என்பதைக் கிறிஸ்தவர்கள் உணர வேண்டும். தங்கத்திலே மாசுகள் கலந்திருப்பதால் அது மதிப்பற்றதாகிவிடுமா? இந்தப் படகிலே இருந்த சீடர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள்; அவரை விசுவாசித்தவர்கள்; அவரை நேசித்தவர்கள். ஒருவன் எல்லாவற்றையும் விட்டுக் கிறிஸ்துவைப் பின்பற்றினாலும், சிலவேளைகளில் பயத்தினாலும் சந்தேகத்தினாலும் மேற்கொள்ளப்படுவது சாத்தியமே.

  1. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இயேசு இருந்த படகின் மீது அலைகள் வந்து மோதின. சீஷர்கள் பயந்தார்கள். சிருஷ்டிகர் மட்டுமே செய்யக்கூடிய வல்லமையான அற்புதத்தை இயேசு செய்தார். உங்கள் வாழ்விலும் சிலவேளைகளில் நீங்கள் புயலைச் சந்திக்கலாம். அந்த நேரத்தில் இயேசுவின் வல்லமையைத் தெளிவாக அறிந்திருப்பது நல்லது. இரட்சகர் வல்லமையுள்ளவர் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருக்க வேண்டும். நமது மீட்பர் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாக இருக்கிறார். இயேசுவின் வல்லமையைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ளுங்கள்:

மறுபடியும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலுள்ள வேதப்பகுதியைப் பாருங்கள். உங்கள் இருதயம் எந்த வகையான பயத்தினாலும் கவலையினாலும் நிறைந்திருந்தாலும், உங்கள் இருதயத்தைப் பார்த்து 'இரையாதே, அமைதலாயிரு' என்று சொல்லக்கூடியவராக இயேசு இருக்கிறார். நீங்களும் சீஷர்களைப் போல இயேசுவிடம் அமைதிக்காகக் கதறுகிறீர்களா? நீங்கள் தேவனோடு சமாதானமாக இருந்தும் ஏழ்மை, வலி, முதுமை, அன்பானவரின் மரணம் ஆகியவற்றினால் உங்கள் இதயம் பாரமடைந்திருக்கிறதா? 'இரையாதே, அமைதலாயிரு' என்று இயேசு உங்கள் இருதயத்திடம் சொல்லமுடியும்.

நீங்கள் கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றிய சரியான அறிவுடையவராக இருக்க வேண்டும். நீங்கள் எதைப்பற்றிச் சந்தேகப்பட்டாலும், கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றி மட்டும் சந்தேகிக்கக் கூடாது. "தம்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபி. 7:25).

  1. விசுவாசிகளின் பலவீனங்களில் இயேசு அவர்களை எவ்வளவு பொறுமையாகக் கையாளுகிறார். பயந்த சீஷர்களிடம் நமது கர்த்தர் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. 'ஏன் பயப்பட்டீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசமில்லையா?' என்று கேட்டார். அவர்களைக் கடுமையாகக் கடிந்துகொள்ளாமல், இரண்டு சாதாரண கேள்விகளைக் கேட்டார். அவற்றிலிருந்து நமது கர்த்தரின் கருணையைக் கண்ணாரக் காண்கிறோம். சீஷர்களோடு நமது இரட்சகர் நடந்துகொண்ட விதம் முழுவதையும் நாம் கருத்துடன் கவனிக்க வேண்டும்.

எப்பொழுதுமே கர்த்தருடைய போதனைகளைச் சீஷர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தங்களது எஜமானாகிய கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை எளிமையான வார்த்தைகளினாலும் தெளிவான கூற்றுகளினாலும் அவர் எடுத்துக்கூறியும், அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை. சிலவேளைகளில் தங்களில் யார் பெரியவன் என்பதற்காகத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், இரண்டு சீடர்கள் இயேசுவைப் புறக்கணித்த ஒரு கிராமத்தின் மீது வானத்திலிருந்து நெருப்பு வந்து அழிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இயேசு கைது செய்யப்பட்டபோது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓடிவிட்டார்கள். பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்தான்.

இவ்விதமான சீடர்களின் நடக்கைகளை இயேசு எவ்வாறு எதிர்கொண்டார்? அவர்களை அவர் முட்டாள்கள் என்று கடிந்துகொள்ளவோ, கோழைகள் என்று புறக்கணிக்கவோ இல்லை. எப்போதுமே அவர்களை மென்மையாக நடத்தினார். அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய காரியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் போதித்தார். அவரது போதனைகள் எப்போதும் இரக்கமும், ஆறுதலும், உணர்வுபூர்வமானவையுமாக இருந்தன.

கர்த்தராகிய இயேசு இரக்கமே உருவானவர் என்பதை முழு உலகமும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தமது சீஷர்களில் பலமுள்ளவர்களைப் பராமரிப்பதைப் போலவே, சிறியவர்களையும் பராமரிக்கிறார். எல்லா விசுவாசிகளையும் பிதா அவரிடம் கொடுத்திருக்கிறார். அவர்களது பலவீனங்கள் மத்தியிலும் அவர்களை அவர் பரலோகத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னதையே திரும்பச் சொல்லி முடிக்கிறேன். எனது வாசகர்கள் சுவிசேஷங்களுக்கும், இந்த அத்தியாயத்தின் ஐந்து பிரிவுகளுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறியவேண்டும், நன்றாக அறிய வேண்டும். அவரால் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அதிகமதிகமாக அறிந்துகொள்வதே பரிசுத்தம் ஆகும்.