படிப்புகள்: 53
Print
ஆசிரியர்: ஸ்டீவன் ஹாக்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

 

The Christ of the Arminians

      ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று பார்த்தால் இருக்க முடியாது என்பது தான் பதில். ஏனென்றால், கடைசி நாட்களில் நானே கிறிஸ்து என்று சொல்லிக்கொள்ளும் பல கள்ள கிறிஸ்துகள் வருவார்கள் என்று வேதம் முன்னதாகவே எச்சரிக்கிறது. “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.” (மத்தேயு 24:4,5). கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். பிறரிடம் ஏமாறாமல் இருக்கும்படியாக நாம் மிகவும் கவனமாக இருப்பது மிக அவசியம். வேத சத்தியத்தின் படியான ஒரே கிறிஸ்துவை விசுவாசிக்கவும், நேசிக்கவும், அவரை பின்பற்றவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்முடைய சமகாலத்தில் அனேக கள்ள கிறிஸ்துகளுடன் நமக்கு எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. சில வேறு பிரிவை சார்ந்த அல்லது வேற்று மதத்தில் சொல்லப்பட்ட கிறிஸ்துவை குறித்து நமக்கு தெரியும். அவர் ஒரு மாபெரிய மனிதர் என்றும், சிறந்த தீர்க்கதரிசி என்றும், தேவனின் முதன்மையான படைப்பு, அவர் ஒரு சிறந்த ஆத்துமா, அவர் ஒரு தெய்வீக சித்தமாக இருக்கலாம், மற்றும் அவர் உண்மையான தேவன், ஆனால் நித்திய தேவன் அல்ல. அவர் தன்னை விட பெரியவரிடமிருந்து தனது தேவத்துவத்தை பெறுகிறார். அத்தகைய நபர் வேதம அறிவிக்கும் இயேசுகிறிஸ்து அல்ல. அப்படிபட்டவரால் நாம் எமற்றபடுவோம். அவர் ஒரு பொய்யான கிறிஸ்து. ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துவை நாம் அறிவோம்.

கத்தோலிக்கர்கள் நம்பும் கிறிஸ்து உண்மையான தேவன் என்று கூறுவார்கள். மனிதர்களுடைய பாவ மன்னிப்புக்காக அவர் துன்பப்பட்டு மரித்து, மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறி சென்றார், மிண்டும் திரும்பி வருவார். ஆனால் அவர் முழுமையான இரட்சகர் அல்ல. ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்து பாவிகளை அவர்களின் நீதியின் செயல்கள் மற்றும் குருக்களின்  அதாவது (பாதிரியார்களின்) பரிந்துரை இல்லாமல் இரட்சிக்க முடியாது. அத்தகைய நபர் வேதத்தின் கிறிஸ்து அல்ல. அப்படிபட்டவரால் நாம் ஏமாற்ற படுவோம். அவர் ஒரு பொய்யான கிறிஸ்து. இந்த குழப்பமான பிரிவுகளும் மற்றும் ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துவை விட ஆபத்தான மற்றொரு கிறிஸ்து இருக்கிறார். பல ஆண்டுகளாக இருந்து பலாயிரக் கணக்கான மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறார். இவர் எவ்வளவு ஆபத்தானவர் என்றால், “கூடுமானால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிபான்.” (மத்தேயு 24:24).

இவர் தான் அர்மீனியர்களின் கிறிஸ்து. இந்த பொய்யான கிறிஸ்துவுக்கும், வேதத்தின் உண்மையான கிறிஸ்துவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதுப்போல் தோன்றும். ஆதனால் தான் இந்த பொய்யான கிறிஸ்து மிகவும் ஆபத்தானவர், ஏனென்றால், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு இவர் சமமான உண்மையான தேவன் என்று சொல்வார்கள். அந்த பொய்யான கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க சிலுவையில் மரித்தார் என்று அறிவிக்கிறார்கள். மேலும் அவர் மனித செயல்பாடுகள் இல்லாமல், அவரது கிருபையால் மட்டுமே இரட்சிக்கிறார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இவருக்கு அந்த வேற்று பிரிவுகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கம் போன்றோர்களிடம் எந்தவித சம்மந்தம் இல்லமால் போகலாம், எனவே எச்சரிக்கை மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும், அர்மீனியர்களின் கிறிஸ்து வேதத்திலுள்ள உண்மையான கிறிஸ்து அல்ல. மோசம் போகதிருங்கள்!

1.அர்மீனியர்களின் கிறிஸ்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் நேசிக்கிறார், அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், வேதத்தில் உள்ள கிறிஸ்து நிபந்தனையின்றி தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மட்டுமே நேசித்து, அவர்களின் இரட்சிப்பை மட்டுமே எதிர்ப்பார்கிறார். “வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.” (சங்கீதம் 5:5), “அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.” (சங்கீதம் 7:11), “துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” (சங்கீதம் 11:5), “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.” (மத்தேயு 11:27), “நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்;” (யோவான் 17:9-10),

“இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.” (அப்போஸ்தலர் 2:47) “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.” (அப்போஸ்தலர் 13:48) “ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.”

(ரோமர் 9:10-13), “மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாய் இருந்தாரானால் உனக்கென்ன? அவர் யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.” (ரோமர் 9:21 – 24), “தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,” (எபேசியர் 1:3,4)

  1. ஆர்மினியர்களின் கிறிஸ்து இரட்சிப்பு என்ற சலுகையை அனைவருக்கும் வழங்கி அனைவரையும் இரட்சிக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இரட்சிப்பு என்ற சலுகையை மறுப்பதினால், அவரது முயற்சியை குறைத்து மதிப்பிடுகிறார்கள். வேதத்தில் உள்ள கிறிஸ்து, தெரிந்துக் கொண்டவர்களை மட்டுமே திறம்பட அழைத்து, தம்முடைய சர்வ வல்லமையால் அவர்களை இரட்சிக்கிறார். அவர்களில் ஒருவர் கூட இரட்சிப்பை பெற்றுக்கொள்ளாமல் போவதில்லை. “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11), “குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.” (யோவான் 5:21), “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.” (யோவான் 6:37-40),

“நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” (யோவான் 10:25-30), “நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்த படியே,” (யோவான் 17:2), “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” (பிலிப்பியர் 2:13)

  1. ஒருவன் தன்னுடைய சுய சித்தத்ததோடு ஆதாவது சுதந்திர விருப்பத்துடன் தேவன் தேர்ந்தெடுக்காத ஒரு பாவியை ஆர்மினியர்களின் கிறிஸ்துவால் மீண்டும் உயிர்ப்பித்து இரட்சிக்க முடியாது. ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவைத் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது. மனிதர்களின் அந்த சுய சித்தத்தின் மீது ஆர்மினியர்களின் கிறிஸ்துவுக்கு எந்த பங்குமில்லை. ஆனால், வேதத்திலுள்ள கிறிஸ்து தனது இறையாண்மை அதிகாரத்தால் அழைக்கப்பட்ட ஒரு பாவியை தனது தீர்மானத்தின் படி எந்தவித காரணமின்றி மீண்டும் உயிர்பித்து இரட்சிக்கிறார். ஏனென்றால், ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் உள்ள ஒருவன் மீண்டும் உயிரடையாமல் இயேசுகிறிஸ்து எனக்கு வேண்டும், வேண்டாம் என்று தீர்மானிப்பது முடியாத காரியம், இரட்சிப்பில் விசுவாசம் என்பது மனித பங்கு அல்ல, அது அவனுடைய மறுபிறப்பில் இயேசுகிறிஸ்து தன்னுடைய இறையாண்மையால் அவனுக்கு வழங்கும் பரிசு.

“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (யோவான் 3:3), “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்.” (யோவான் 6:44,65), “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.” (யோவான் 15:16),

“ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி,” (அப்போஸ்தலர் 11:18), “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” (ரோமர் 9:16), “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.” (எபேசியர் 2:1), “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” (எபேசியர் 2:8-10), “ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.” (பிலிப்பியர் 1:29), “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:2)

  1. ஆர்மினியர்களின் கிறிஸ்து எல்லாருக்காகவும் சிலுவையில் மரித்தார், இதனால் அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கு சாத்தியமானது. ஆனால், மனிதனுடைய தீர்மானம் சிலுவையின் பக்கமாக வரும்வரை அந்த சிலுவை மரணம் யாரையும் இரட்சிக்காது. இதன் காரணமாக, அவர் யாருக்காக மரித்தாரோ அவர்களில் பலர் இரசிக்கபடாமலே போகிறார்கள். ஆனால், வேதத்திலுள்ள கிறிஸ்து தேவனால் அழைக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்து, அவர் யாருக்காக மரித்தாரோ அவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பை சம்பாதித்து வைத்தார். அவரது மரணம் அழைக்கப்பட்ட தேவனுடைய மக்களின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கு பதிலாக தேவனின் நீதியை நிறைவேற்றியது.

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” (லூக்கா 19:10), “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.” (யோவான் 10:14,15,26), “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை.” (அப்போஸ்தலர் 20:28), “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப் பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.” (ரோமர் 5:10), “அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,” (எபேசியர் 5:25), “தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.” (எபிரேயர் 9:12), “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” (1பேதுரு 3:18)

  1. அர்மீனியர்களின் கிறிஸ்து தாம் இரட்சித்த பலர் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காததினால் இரட்சிப்பை இழக்கிறார்கள், ஒருவேளை அவர்களுக்கு நித்திய பாதுகாப்பைக் கொடுத்தாலும், அந்த மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது எடுக்கப்பட்ட முடிவைப் பொறுத்தது. ஆனால், வேதத்திலுள்ள கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்ட அனைவரையும் அவர் இறுதிவரை விசுவாசத்தில் வளரும்படி பாதுகாப்பார். அவர் அவர்களை தேவனின் ஏற்பாட்டிலும், அவருடைய மரணத்தின் வல்லமையினாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதளினாலும் அவர்களை அவர் இரட்சிக்கிறார்.

“என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 5:24), “நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.” (யோவான் 10:26-29),

“தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” (ரோமர் 8:29,30) “உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:35-39),

“பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப் படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” (1பேதுரு 1:2-5), “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.” (யூதா 24-25)

நாம் இதுவரை பார்த்தபடி ஆர்மினியன்களின் கிறிஸ்துவும் வேதத்தின் கிறிஸ்துவும் ஒரே நபராகத் தோன்றினாலும், அவர்கள் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அர்மீனியர்களின் கிறிஸ்து, மற்றொருவர் மெய்யான கிறிஸ்து. அர்மீனியர்களின் கிறிஸ்து பலவீனமானவர், உதவி செய்ய முடியாதவர், மனிதனின் சுய சித்தத்திற்க்கு உட்பட்டவர். ஆனால் வேதத்தின் படியான கிறிஸ்து தன்னுடைய சுய சித்தத்தின்படி அனைத்தையும் செயல்ப்படுத்துகிற கர்த்தர். அன்பான சகோதரனே! சகோதரியே! நீ விசுவாசித்து பின்பற்றுவது அர்மீனியர்களின் கிறிஸ்துவை வேதத்தின் கிறிஸ்துவை அல்ல என்ற உண்மையை நீ அங்கீகரிக்க வேண்டும். இனியும் ஏமாற்றப்படாதே வேதத்தை ஆராய்ந்து உண்மையான கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மனந்திரும்பி, வேதத்தின் கிறிஸ்துவை உன்னுடைய ஆண்டவராக விசுவாசிபாதற்கான கிருபைக்காக தேவனை நோக்கி ஜெபியுங்கள்.