பொன்மொழிகள்

ஆர்தர் பிங்க்

ஜெபம் என்பது நம்முடைய தேவைகளை
தேவனிடம் தெரிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல!
மாறாக,
நம்முடைய தேவைகளை நாம் அறிந்திருக்கிறொம் என்பதை
அவரிடம் அறிக்கை செய்வதாகும். 

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

prayer confession knowledge

பெரிய நதிக்கு பதிலாக,
இன்றைக்கு இருந்து நாளை வற்றிப்போகும் நீரோடையையே
அடிக்கடி தேவன் நம்முடைய வாழ்க்கையில் தருகிறார்.
ஏன்?
நாம் ஆசீர்வாதத்தின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்குப் பதிலாக,
ஆசீர்வதிப்பவரின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்காக!

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

rest on the blesser

உலகப்பொருட்களில் ஏழையாக இருந்தாலும்,
தனக்கு அன்பானவர்களை இழந்து தவித்தாலும்,
சரீர வேதனையை அனுபவித்தாலும்,
பாவத்தாலும், சாத்தானாலும் துன்பப்படுத்தப்பட்டாலும்,
உலகத்தால் பாடுபடுத்தப்பட்டாலும்,
தேவனுக்குள் மகிழ்ச்சியாயிருத்தல் என்பது,
ஒரு கிறிஸ்தவனின் கடமை மற்றும் பாக்கியம்! 

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

rejoice in the lord

தேவனின்,
ஆவிக்குறிய இரட்சிப்பின் அறிவே
ஒவ்வொரு மனிதனின்
மாபெரும் தேவை…

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

salvation knowledge

சோம்பேறிக்கு,
வேதாகமத்தின் எந்த ஒரு வசனமும்
தன்னுடைய அர்த்தத்தை வெளிப்படுத்துகிறதில்லை!

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

no scripture meaning to lazy

மனிதனில் வாழும் பாவத்தை வேர் அறுக்க 
முதல்முறை இயேசு வந்தார்…
பாவத்தில் வாழும் மனிதரை வேர் அறுக்க 
இரண்டாம்முறை இயேசு வரப்போகிறார்…

-ஆர்தர் வால்கிங்டன் பிங்க்

Christ first second coming

உங்கள் இருதயம் தேவனுடையவைகளில் சரியாக இல்லாவிட்டால்,
உங்கள் வெளிப்பிரகாரமான செய்கைகள் அனைத்தும் வீண்!

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

set your heart right with god

தான் பாவி என்பதை ஒத்துக்கொள்ளுவதல்ல,
பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புதலே
ஒரு தேவனுடைய பிள்ளையை உலகத்தாரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

mourning for sin

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.