அந்நியபாஷை குழப்பம்

வெளிப்படையான பல விஷயங்களை பெந்தேகோஸ்தே பாஸ்டர்களும், பொது மேடையில் அல்லது TVயில் பேசும் ஊழியர்களும் மறந்துவிடுகிறார்கள். நம் எல்லாருடைய கைகளிலும் இருக்கும் இந்த வேதத்தை முதன்முதல் உலகத்தின் அனைத்து மொழிகளிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மொழி பெயர்த்த அந்த தேவ மனிதர்களான அந்த மிஷனரிகள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லையே?. சீகன்பால்க்,வில்லயம்கேரி இவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வருடக்கணக்கில் மணலில் தங்கள் விரல்வைத்து தமிழ் அட்சரங்களை எழுதி விரலில் இரத்தம் பீறிட்டு வர தமிழ் மொழிகளை கற்றார்களே?

அதன்பின் தான் அந்த கடின சூழ்நிலையிலும், தாங்க முடியாத சீதோஷ்ண நிலையிலும் அவர்கள் நமக்கென்று நம் தமிழில் வேத புத்தகத்தை மொழி பெயர்த்து தந்தார்களே அந்த மிஷனரிகள் யாரும் அந்நியபாஷை பேசவில்லையே. ரிங்கல் தொபே, போன்ற மிஷனரிகள் எந்த அந்நியபாஷை பேசினார்கள். பாஸ்டர்கள் கையில் பிடித்திருக்கும் இந்த வேத புத்தகத்தின் சரித்திரமாவது இந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களை உணர்த்தவில்லையா?

கொஞ்சம்கூட மனசாட்சியற்றவர்களாக இல்லாத ஒன்றை இருப்பதுபோல கூறி சபை மக்களை அந்நியபாஷகளை பேச சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்றபோகிறார்கள். கர்த்தர் அவர்களை கணக்கு கேட்பார்கரே .

திருநெல்வேலியிருந்தும், கன்னியாகுமரியிலிருந்தும் மிஷனரி ஊழியம் செய்ய இன்றைக்கு ஆயிரம் ஆயிரமாக மிஷனரிகள் புறப்பட்டு காட்டை நோக்கி, மலைகளைத்தேடி ஆத்துமாக்களுக்கு இயேசுவை அறிவிக்க போயிருக்கிறார்களே. ஆனால் பெந்தேகோஸ்தே சபையிருந்து ஏதாவது ஒரே ஒரு மிஷனரி அனுப்ப மனமில்லாமல் போனதென்ன? CSI சபைகளிலிருந்து மிஷனரிகளாக சென்றவர்கள் வடஇந்திய கோடியில் மலைகளில் ஆங்காங்கு 17000 சபைகளை உருவாக்கி ஆதிவாசிகளுக்கு காட்டுவாசிகளுக்கு இயேசுவே தெய்வம் என்று அறிவித்ததால் அவர்கள் வீட்டில் உள்ள எல்லா விக்கிரகங்களையும், பிசாசு சம்பந்தமான பொருள்களையும் வீசி எறிந்து இன்று இயேசுவுக்கு ஜீவனுள்ள சாட்சியாக விளங்குகிறார்கள். ஒவ்வொரு ஆதிவாசிகளும் சபைகளில் தங்கள் சாட்சிகளை ஆராதனைகளில் வாரம் தவறாமல் கூறுகிறார்களே எப்படி?

பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கிளில் ஒருவராவது அல்லது பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகள் ஒருவராவது அந்த காட்டு பகுதி சபைகளை போய் நேரில் பார்த்துண்டா? இந்த நாட்டில் உள்ள CSI, லூத்தரன் சபைக்கு அருகிலேயே தெருவுக்கு 5 பெந்தேகோஸ்தே சபைகளை ஆரம்பித்து கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க காத்திருக்கிறவர்களாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

இந்த பெந்தேகோஸ்தே சபையில் உள்ளவர்கள் மிஷனரி பணிதளத்துக்கு போகாது இருப்பதே மேல் என்று நினைக்கிறேன். அவர்கள் ஆதிவாசிகள் மத்தியில் க்க்ரோ புக்கரேஷிரபலா என்று அந்நியபாஷையில் பேசியிருந்தால் அத்தனை ஆதிவாசிகளும் காட்டுக்குள் ஓடிபோயிருப்பார்கள். அவர்கள் யோசிப்பார்கள் நம் ஆராதித்த பிசாசின் ஆவியைபோலவே இவர்களும் நடுங்குகிறார்களே துள்ளுகிறார்களே , ஆடுகிறார்களே, உளருகிறார்களே, பிசாசின் பிடியிலிருந்து நாம் விடுப்பட்ட மாதிரி இந்த பெந்தேகோஸ்தே மக்களும்,பாஸ்டர்களும் தங்கள் உளருவதை நிறுத்தமாட்டார்களா என்று நினைப்பார்கள்.

பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தான் எழுதிய கடிதத்தில் சகல காரியங்களும் இரண்டு, மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும் என்று பவுல் எழுதியதை தன் வாதத்துக்காக எடுத்துக்கொண்டார்.

அந்நியபாஷையில் பேசாதவர்கள்:

ஆனால் இவரின் முதல் சாட்சியே அடிப்பட்டுவிட்டது, இது பொய்யான சாட்சியாகிபோனது. சமாரியர் விசுவாசிகளானபோது பேதுருவும், யோவானும் அவர்களிடம் வந்து கைகளை வைத்து ஜெபித்தனர். அப் 8:18. இங்கு நடந்த பரிசுத்த ஆவியானவரின் நிகழ்ச்சியில் அந்நியபாஷையில் யாரும் பேசவில்லையே. சமாரியர் பரிசுத்த ஆவியானவரை பெற்றபோது யாரும் அந்நியபாஷை பேசவில்லை என்பதை கவனிக்கவும்.

பவுல் தான் அதிகமான பாஷைகளை பேசினதாக 1 கொரி 14:18ல் கூறுவதை பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் சுட்டிகாட்டுகிறார். மற்ற அப்போஸ்தலர்கள் யூதர்கள் மத்தியில் மட்டும்தான் சுவிசேஷம் அறிவித்தார்கள். ஆனால் பவுல் மட்டும் பல தேசங்களில் சுற்றிதிரிந்து பாஷைகளை கற்று சுவிசேஷபணி செய்து அவர்கள் பாஷைகளை கற்றுக்கொண்டு அங்குள்ளவர்களோடு பேசி அவர்கள் பாஷையில் அவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தார். ஆகவே மற்ற எல்லா சீஷர்களைவிட மிக அதிகமான பாஷைகளை பவுல் பேசிய பழக்கம் உண்டு. அதைத்தான் அந்த வசனத்தில் குறிப்பிடுகிறார். தான் பரிசுத்த ஆவியினால் நிறைந்து மிக அதிகமான அந்நிய பாஷைகளை மற்றவர்களை காட்டிலும் பேசியதாக அவர் கூறவில்லையே?

அப்போஸ்தலர் நடபடிகைகளில் பிதா-குமாரன்-பரிசுத்தாவி என்று எங்கும் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதுபோலவே மேலே குறிப்பிட்ட இடத்தில் எல்லாம் அந்நியபாஷையில் பேசாததால் அந்நியபாஷை இல்லை என்று கூறவிடமுடியாது என்கிறார். இல்லாததை எதற்கு இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணவேண்டும். தெளிவாக எழுதப்பட்டதை மட்டும் செயல்படுத்தலாம் அல்லவா? எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் என்று பவுல் கூறுகிறார் (1 கொரி 4:6). காணாதவைகளில் துணிகரமாக நுழையகூடாது என்றும் பவுல் கூறுகிறார் (கொ 2:19).

அப் 8:18ல் சமாரியர் இயேசுவை மேசியாக ஏற்றுக்கொண்டு விசுவாசிகள் ஆனார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரை பெறவில்லை. உடனே பேதுரு அவர்களிடம் சென்று பரிசுத்தாவியனவரைப்பற்றி அவர்களிடம் விசாரித்து பேசி தன் கைகளை அவர்கள்மேல் வைக்கிறார். உடனே பரிசுத்தாவியானவர் இறங்கினார் என்று எழுதியிருக்கிறது.

அந்நியபாஷை பேசவில்லையே?

ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் யாரும் அந்நியபாஷை பேசவில்லையே? பரிசுத்தாவி பெற்றவர் அனைவரும் அந்நியபாஷை பேசினால்தான் ஆவியானவரை பெற்றதற்கு அடையாளம் அப்போதுதான் அவர்கள் AOG சபையில் சேர்க்கபடுவார்கள் என்கிற தவறான உபதேசம் உடைய AOG, IPC,TPM சபையிலும் அல்லது பாஸ்டர்.ராஜாமணி அவர்களின் மதுரை AOG சபையிலும்; அந்நியபாஷை பேசாத அதேசமயம் பரிசுத்த ஆவியானவரை பெற்றவர்களான சமாரியரை இந்த பெந்தேகோஸ்தே சபையினர் யாரும் தங்கள் சபைகளில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆண்டவர் தம் புதிய ஏற்பாட்டு சபையில் சமாரியரை சேர்த்துக்கொண்டார். சமாரியர் பரிசுத்தஆவியானவரை பெற்றபோது அந்நியபாஷை பேசவில்லை என்பதைக்குறித்து எந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும் வாயே திறப்பதில்லை. காரணம் அவர்களின் தறவான உபதேசத்துக்கு அந்த சம்பவம் சாதகமாக இல்லை. இது மாய்மாலம் அல்லவா? மோகன்.சி.லாசரஸ் அவர்களின் தவறான அனுபவமும் தவறான உபதேசமும்:

பெரிய ஊழியர்கள் தங்கள் அனுபவத்தை மக்களுக்கு கூறும்போது அது வசன அடிப்படையிலாக அமைந்திருக்கவேண்டும். அல்லவென்றால் ஒரு பெரும் கூட்டத்தை அவரைப்போல் தவறான வழியில் நடத்தி செல்லபவர்களாக இருப்பார்கள்.

மோகன்.சி.லாசரஸ் - வாலிபர் உலகம் ஆகஸ்ட் 2013 (பக்கம் 6). அன்று ஒரு நாள் முழுவதும் என்னால் ஜெபிக்கவோ வேதம் வாசிக்கவோ முடியவில்லை. மனதில் அதிகமான பாரம் அழுத்தியது. அப்பொழுது நான் வழக்கமாக ஜெபிக்கும் தேறிக்காட்டிற்கு சென்றேன். அங்கு சென்றபின் நான் ஆவியானவரால் நிரப்பப்பட்டேன். நான் ஒரு வார்த்தைக்கூட தமிழில் ஜெபிக்காமல் முழுவதுமாக அந்நியபாஷையிலேயே ஜெபிக்க ஆரம்பித்தேன்.

நான் ஜெபிப்பது என்னவென்று எனக்கே தெரியவில்லை. அதேசமயத்தில் நான் தமிழில் ஜெபிக்க முயன்றும் என்னால் தமிழில் ஜெபிக்க முடியவில்லை. ஆவியானவரே எனக்கு பதிலாக ஜெபத்தை செய்தார் என் மனபாரம் எல்லாம் நீங்கியது என்று எழுதியுள்ளார். மோகன் சி.லாசரஸ்க்குள் இருக்கும் தமிழ் தெரியாத ஆவியானவர் யார்? என்று இப்போது இதை வாசிக்கிற உங்களுக்கு விளங்குகிறதா? இப்படிப்பட்ட ஆவியானவருக்கு மற்ற பாஷைகள் எப்படி விளங்கும்? என்னப் பரிதாபமான அனுபவம். அந்த ஒரு மணி நேரம் மோகன் சி.லாசரஸ் ஜெபித்தது வீண் என்று விளங்கவில்லையா? உள்ளத்தின் நினைவுகள் வாய் பேசும் என்று ஒரு பழமொழி உண்டு. அப்படியானால் அன்று இவர் உள்ளத்தில் இருந்த பாரம் என்ன? எதற்காக கடவுளிடம் ஜெபிக்க போனார் என்று மோகன்.சி.லாசரஸ் அவர்களுக்கே விளங்கவில்லையே? பின் எதற்காக ஜெபிக்க தேறிக்காடு நோக்கி போகவேண்டும்? வேதத்தில் உள்ள ஒரே ஒரு வசனத்தை மனதில் கொண்டு குழம்பிபோய், கர்த்தரரோடு தன் தாய் பாஷையில் உறவாடும் இன்பத்தை இவர் இழந்துவிட்டாரே. வாசிக்கிறவர்கள் மோகன்.சி.லாசரஸ் கூறும் இப்படிப்பட்ட கற்பனை அனுபவத்தை உண்மை என்று எண்ணி ஜெபித்த முறையையும் இவர் உபதேசத்தையும் பின்பற்றிவிட வேண்டாம்.

கடந்த முறை பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் அந்நியபாஷை உண்மை என்பதற்காகமூன்று சாட்சிகளால் ஒரு விஷயம் உறுதிப்படும் என்ற வசனத்தை காட்டி தன் கடிதத்தை எழுதி கொண்டு வருகிறார். அதில் ஒரு சாட்சி பொய்யானது என்று உறுதியாகிவிட்டது. அப்படியாக அவர் குறிப்பிட்ட முதல் சாட்சி தூள்தூள் ஆனது.

இனி நான் எழுதபோது அடுத்த அவருடைய 2 சாட்சிகளும் புஸ்வானம் மாதிரி ஆகப்போவதை கவனியுங்கள்.

திறவுகோல்:

இந்த திறவுகோல் விஷயத்தை அறியும்முன் இதைப்பற்றிய மிகவும் முக்கிய சரித்திர பின்னியை நீங்கள் அறியவேண்டும்.

பேதுருவுக்கு இயேசுகிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட திறவுகோலைப்பற்றி அறியவேண்டும். திறவுகோல் என்றால் பூட்டை திறக்க உபயோகிக்கும் சாவி அல்ல. சகோ.தினகரன் ஊழிய பண வியாபாரத்துக்காக அறிமுகப்படுத்திய தங்க சாவி யைப்பற்றி கேள்விபட்டீர்கள் அல்லவா? அதைக்குறித்து ஜாமக்காரனிலேயே நான் எழுதியிருக்கிறேன். இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையிலும் அதைக்குறித்து வாசித்திருப்பீர்கள். கர்த்தர் தன்னிடம் ஒரு தங்க சாவியை உண்டாக்க சொன்னாராம். அதை ஒரு லட்சரூபாய் கொடுக்கும் பணக்கார வியாபாரிகளுக்கு விற்றால், அதை வாங்கும் அந்த வியாபாரி அல்லது Car company முதலாளி தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் பின்பக்கம் உள்ள சுவரில் மாட்டி வைத்தால் அவர்கள் வியாபாரம் பன்மடங்கு செழிக்கும். கம்பெனி விருத்தியாகும் என்று விளம்பரம் செய்தார். அதை ஒரு சில வியாபாரிகள் மட்டும் வாங்கி தன் அலுவலக அறையில் தான் அமரும் ஆசனத்தின் பின்பக்கம் மந்திரவாதி கொடுத்த தாயத்து கட்டிவைப்பதுபோல தங்கசாவியை மாட்டி வைத்தார்கள். இவர் கூறியதை அப்படியே நம்பின கிறிஸ்தவ முட்டாள் வியாபாரிகள், முட்டாள் நிறுவன முதலாளிகள் சிலர் அந்த சாவியை வாங்கினார்கள். ஆனால் அந்த சாவி வாங்கின பலரின் வியாபாரங்கள் நஷ்டமடைந்தன. நிறுவனங்கள் படுத்துவிட்டன. சகோ.தினகரனின் சாவி வியாபாரமும் படுத்துவிட்டது. அதன்பின் சகோ.தினகரன் அந்த சாவி வியாபாரத்தை நிறுத்திவிட்டார். நான் குறிப்பிடுவது இப்படிப்பட்ட சாவிகள் அல்ல. இயேசுகிறிஸ்து பேதுருவிடம் கொடுத்தது. சாவி என்ற பொருள் அல்ல, அதற்கு ஆவிக்குரிய அர்த்தம் உண்டு.

இயேசுகிறிஸ்து ஒருநாள் பேதுருவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பேதுருவும் சரியான பதிலை கூறினான். மத் 16:19 கிறிஸ்துவைப்பற்றி சரியான அறிவு தனக்கு உண்டு என்பதை அந்த பகுதியில் பதிவுசெய்தான். இயேசுகிறிஸ்து பேதுருவின் பதிலில் மிகவும் திருப்தி கொண்டார். உடனே அந்த சூழ்நிலையில் தான் இயேசு பேதுருவிடம் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்கு தருவேன் என்றார். திறவுகோல் என்றால் அதிகாரம்(authority) மத் 16:13-19. நீ பேதுருவாய் இருக்கிறாய்(பேதுரு என்றால் பாறை என்று அர்த்தம்) (பத்ரோஸ். Peter- பேதுரு) இந்த கல்லின்மேல் (இந்த பாறையின் மேல்) என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்கு தருவேன். பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் நீ கட்டவிழ்க்கிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

இந்த வார்த்தை முழுவதும் ஆவிக்குரிய அர்த்தம் அடங்கியதாகும். மத் 18:18ம் வசனத்தில் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது என்று ஒரு சிலர் கூறுவார்கள். அவர்கள் இது சம்பந்தமாக வேறு சில முக்கிய வார்த்தைகளை கவனிக்காமல் கூறுவார்கள். இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது திறவுகோல் இந்த வார்த்தை எல்லா அப்போஸ்தலர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பதை முக்கியமாக மனதில் கொள்ளவேண்டும். இந்த திறவுகோல் என்ற வார்த்தை பேதுருவுக்குமட்டுமே உரியது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒரு கட்டிடத்தை திறந்து வைக்க சிறப்பு நபர் ஒருவரை அழைக்கிறோமே அதைப்போலவே பேதுருவுக்கு திருச்சபை சரித்திரத்தில் இந்த சிலாக்கியத்தை கர்த்தர் அவருக்குமட்டும் அருளி செய்தார். இயேசுவை உலகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிவிக்க செய்து அவர்களை பரலோகம் செல்லும் பாக்கியத்தை பேதுரு மூலம்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும் என்பதே தேவனின் திட்டமாக இருந்தது. சுவிசேஷம் உலகம் அனைத்திற்கும் சொல்லப்படவேண்டும். ஆனால் பழைய ஏற்பாட்டு சரித்திரம் முடிந்தவுடன், புதிய ஏற்பாட்டு சரித்திரம் தொடங்கும்போது சுவிசேஷம் அறிவித்து பரலோக வாசலுக்குள் கடக்க மூன்றுவித கூட்டத்தினருக்கு ஆண்டவர்கூறிய வரிசையின்படி கர்த்தர் கொடுத்த திறவுகோல்களை கொண்டு (அதிகாரத்தைக் கொண்டு) பேதுரு மூன்று கூட்டத்தினரை பரலோகத்துக்குள் பிரவேசிக்க தகுதிப்படுத்தி அந்த மூன்று கூட்டத்தினரையும் அதனதன் வரிசைப்படி பேதுரு உட்பிரவேசிக்க பண்ணினான்.

முதல் உரிமை யாருக்கு, இரண்டாவது உரிமை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக்குறித்து இயேசுகிறிஸ்து கூறி, அதன்பின் உலக மனைத்துக்கும் சுவிசேஷம் என்ற தன் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த மூன்று என்பது அப்போஸ்தலர் 1:8ன்படி யூதர்,சமாரியர்,பின் உலக ஜாதிகள் என்பதாகும்.

முதல் உரிமை யூதருக்கு:

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு மற்ற எல்லா சீஷர்களோடு நின்று கொண்டுஇருக்கும்போதுதான் முதன்முறையாக பரிசுத்த ஆவியானவரின் இறக்கம் உண்டானது. அந்த முதல் இறக்கம் யூதர்களாகிய பேதுருவுக்கும் அவர்கூட இருந்த சீஷர்கள் யாவரின் மேலும் உண்டானது.

அப்படி யூதருக்கு பரிசுத்த ஆவியானவரின் அனுபவம் முதலில் உண்டாக கர்த்தர் பேதுருவை திறவுகோலாக பயன்படுத்தினர். அதன்மூலம் முதல் சபை உருவானது.

இரண்டாவது உரிமை சமாரியருக்கு:

இரண்டாவதாக சமாரியர் யூதர்களின் வழியாக வசனத்தைக்கேட்டு இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த சம்பவம் நடந்த இடத்தில் பேதுரு இல்லை என்பதை கவனிக்கவேண்டும். இரண்டாவதுமுறை பேதுரு சமாரியரிடத்தில் வந்தபோதுதான் பரிசுத்த ஆவியானவரின் இறக்கம் உண்டானது. இது ஆண்டவரின் திட்டப்படி இரண்டாம் திறவுகோல் உபயோகிக்க பேதுரு பயன்பட்டார். எல்லாராலும் ஒதுக்கப்பட்டவர்களானவர்களும், கலப்பு இன மக்களுமான சமாரியருக்கு மனந்திரும்புதலும் பரிசுத்த ஆவியானவரின் இறக்கம் அவர்கள்மேல் உண்டாகி தெய்வம் இப்படிப்பட்டவர்களையும் நேசிக்கிறார் என்பதை விளக்க கர்த்தரின் திட்டமான இரண்டாம் திறவுகோல் பேதுரு மூலமாக பயன்படுத்தப்பட்டது.

மூன்றாவது உரிமை:

யூதர் அல்லாத புறஜாதியினருக்கு உரிமையாகும். இயேசுகிறிஸ்துவின் திட்டப்படி பரலோகத்துக்கு தகுதியாக்கும் மூன்றாவது பட்டடியலில் புறஜாதிகள் இடம் பெறுகிறார்கள். அப் 10 ம் அதிகாரத்தில் புறஜாதியானான கொர்நெல்லியூஸ் சுவிசேஷம் கேட்கவும் இயேசுவை விசுவாசிக்கவும் வழிஉண்டாக்க கொர்நெல்லியூஸ் வீட்டுக்கு பேதுரு வரவழைக்கப்பட்டான். மற்றபடி பேதுரு புறஜாதிகளுக்கு பரலோகம் கிடையாதுஎன்ற தவறான எண்ணத்தில் இருந்தவன். கர்த்தர் துப்பட்டியில் தீட்டுள்ள மிருகங்களை காட்டி அதன்மூலம் தான் இயேசுவாகிய நான் எல்லாருக்கும் தெய்வமாயிருக்கிறேன். புறஜாதிகளையும் நான் நேசிக்கிறேன் என்பதை அந்த தரிசனம்மூலம் கர்த்தர் பேதுருவுக்கு உணர்த்தி கொர்நெல்லியூஸ் வீட்டுக்கு போக சொன்னார்.

அந்த வீட்டாரோடு மற்ற நண்பர்களும் உறவினரும் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பேதுருவின் முன்னிலையில் புறஜாதிகளுக்காக மூன்றாவது திறவுகோல் உபயோகிக்கப்பட்டு அங்கிருந்த அத்தனை பேர் மேலும் பரிசுத்தாவியானவர் இறங்கியதையும் அவர்கள் அந்நியபாஷையில் பேசியதையும் பேதுருவை கண்டு ஆச்சரியப்பட்டான். பேதுருவை உணர்த்த இந்த சம்பவம் பயன்பட்டது. இயேசுவின் திட்டப்படி இப்போது 3 திறவு கோல்களும் உபயோகப்படுத்தப்பட்டது.

பேதுருவின் முன்னிலையில் அப் 2ம் அதிகாரத்தில் யூதருக்கும் அப் 8ம் அதிகாரத்தில் சமாரியருக்கும் அப் 10 அதிகாரத்தில் புறஜாதிகளுக்கும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவு உண்டாகி, இப்போது வேதம் கூறிய 3 பிரிவினரும் ஒரே சபையாக இணைக்கப்பட்டார்கள். கர்த்தரின் இந்த கிருபையுள்ள திட்டம் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது.

மேலே வாசித்த மூன்று இடங்களில் மூன்று பிரிவினருக்கு பரிசுத்தாவியானவர் அருளப்பட்டப்பின் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் சுவிசேஷம் கேட்டு விசுவாசிகளாகி ஆயிரக்கணக்கில் சபையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் யாரும் அந்நியபாஷை பேசியாதாகவோ, குறிப்பிட்ட இந்த மூன்று சம்பவங்களை தவிர மற்ற எந்த ஒரு இடத்திலும் சீஷர்கள் அந்நியபாஷையில் பேசியதாக வேதத்தில் ஒரு நிருபத்திலும் பதிவு செய்யப்படவில்லை. சபைகள் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்ற கட்டளையோ உபதேசமோ புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் எங்கும் கூறப்படவும் இல்லை

மேலே குறிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் மட்டுமே ஆவியானவர் வருகையைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவியானவர் பிரத்தியட்சமாக வந்ததை அப் 2,8,10,19 அதிகாரங்களில் மட்டுமே வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்று இடங்களில் மட்டும் அந்நியபாஷை பேசினதை குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான கருத்து:

ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டபின் இரண்டாவது அனுபவமாக ஆவியானவரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பெந்தேகோஸ்தே சபையினர் கூறுவதை நாம் அறிவோம். இவர்கள் இதற்கு ஆதாரமாக இரண்டு அதிகாரங்களை காட்டுவார்கள்.
1). அப் 8ம் அதிகாரத்தில் சமாரியர் பெற்ற அனுபவத்தையும்
2). அப் 19ம் அதிகாரத்தில் எபேசு பட்டிணத்தில் யோவானுடைய சீஷர்கள் 12 பேர் பெற்ற அனுபவத்தையும் குறிப்பிடுவார்கள்.

இவைகளைக்குறித்தும் நீங்கள் தெளிவு பெறுவது நல்லது. அப் 8ம் அதிகாரத்தில் சமாரியர் பெற்றுக்கொண்ட அனுபவ விவரங்களைக்குறித்து ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

எபேசு பட்டிண அனுபவம்:

இனி அப் 19ம் அதிகாரத்தில் நடந்த சம்பவத்தை கவனிப்போம். இந்த அதிகாரத்தில் அப்போஸ்தலானாகிய பவுல் எபேசு பட்டிணத்துக்கு வந்ததாக வாசிக்கிறோம். இங்கு பவுல் யோவானுடைய சீஷர்களை கண்டார். இந்த இடத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்த காலத்தை கவனிக்கவேண்டும். அது முக்கியம்.

இந்த சீஷர்கள் அப் 19:7ல் கூறப்பட்டபடி இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்தெழுதல், பரிசுத்த ஆவியானவரின் இறக்கம் ஆகியவைகள் நடைபெறுவதற்கு முன்பான கால கட்டத்தில் யெகோவாவை விசுவாசித்தார்கள். அப்போது இவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை பெற்றவர்கள் ஆகும்.

அப்போது யோவான் தன் சீஷர்களிடம் கூறும்போது என்னை நீங்கள் பெரிய குருவாக ஞானியாக காண்கிறீர்கள். ஆனால் எனக்கு பின்னே ஒருவர் வருகிறார் அவர்தான் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கும் ராஜாவாக வரப்போகிறார். அவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் மனந்திரும்பவேண்டும் என்று பிரசங்கம் பண்ணினான். அதை ஏற்றுக்கொண்டு விசுவாசித்து ஏராளமானவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அந்தகூட்டத்தில் இருந்தவர்கள்தான் எபேசுவில் கண்ட 12 சீஷர்கள். இவர்களுக்கு இயேசுவின் மரணம், உயிர்தெழுதல், பரிசுத்த ஆவியானவரின் அருளப்படுதல் இவைகளைக்குறித்து ஒன்றும் தெரியாது. ஆகவேதான் நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா? என்று பவுல் கேட்டபோது பரிசுத்த ஆவியானவரைப்பற்றி நாங்கள் யாரும் கேள்விப்படவேயில்லை என்றார்கள். அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என்று கேட்டார். அந்த 12பேர் இதுவரை இரட்சிப்பின் சுவிசேஷத்தை கேட்டதில்லை என்பதை பவுல் புரிந்துக்கொண்டார். எபேசு 1:12ல் கூறியுள்ளபடி நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக்கேட்டு விசுவாசிகளானபோது வாக்குதத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்டீர்கள் என்று இந்த நிகழ்ச்சிகளுக்குப்பிறகுதான் எபேசு சபைகளுக்கு நிருபம் எழுதியிருக்கிறார். ஆகவே இந்த 12 பேர் இரட்சிப்பின் சுவிசேஷம் கேட்டிராதவர்கள்.

அதனால்தான் 1 கொரி 15:3,46ல் இந்த சுவிசேஷம் எது என்று அந்த வசனங்களில் விளக்குகிறார். கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்ற சுவிசேஷத்தை அறிவித்தார். இவர்களிடம் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்ட பவுலின் கேள்வியில் வேறொரு விஷயம் இருக்கிறது. இயேசு உயிர்தெழுந்து பரமேறிபோகும்முன் கொடுக்கப்பட்ட கட்டளையில் நீங்கள் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கட்டளையிட்டார் அல்லவா? மத் 28:19. இயேசு கூறிய அந்த ஞானஸ்நானம் எடுத்திருந்தால் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி அறிந்திருக்கவேண்டும். ஆனால் இவர்கள் அதை அறியவில்லை. இயேசுவைப்பற்றியும் இயேசு திரியோகத்தில் ஒருவரானவர் என்பதையும் இவர்கள் அறியாத காரணத்தால் இங்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்.

ஆரம்பத்தில் இந்த 12பேர் இயேசுவை புதிய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்போகிறவர் என்று மட்டுமே விசுவாசித்திருந்தார்கள். ஆனால் பவுலின் பிரசங்கத்திற்கு பிறகு இயேசு மரித்து, உயிர்தெழுந்த கிறிஸ்துவாக இரட்சிக்கிறவராக விசுவாசித்தார்கள். இயேசுவின் இரத்தம் மூலமாக மட்டுமே பாவங்கள் நீங்கி கழுவப்பட முடியும் என்பதை விசுவாசித்தார்கள். அதன்பின்தான் இவர்களும் சபையில் சேர்க்கப்பட்டார்கள். இவர் சபையில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு அடையாளமாக பவுல் இவர்கள் மேல் கைகளை வைத்தபோது அவர்களும் பரிசுத்த ஆவியானவரை பெறவும், அதற்கு அடையாளமாக ஆரம்பத்தில் அப் 2ல் அப்போஸ்தலர்கள் ஆவியில் நிரப்பப்பட்டுபோது பாஷைகளை பேசினதுபோன்ற அடையாளம் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதற்காக மட்டுமே இவர்களை அந்நியபாஷையை பேச வைத்தார். இதைத்தவிர மற்ற எந்த நபருக்கும் சபைக்கும் அந்நியபாஷை பேசும்படி கட்டளை கொடுக்கப்படவில்லை என்பதை அறிய வேண்டும்.

இதே ஆண்டவரைத்தான் இவர்கள் முன்பும் விசுவாசித்தார்கள். ஆனால் அப்போது ஆவியானவர் இவர்களுக்கு ஏன் அருளப்படவில்லை என்ற சந்தேகம் எழலாம். இந்த 12 சீஷர்கள் விசுவாசிகளான காலம் வேறு என்பதை கவனிக்கவேண்டும். யோ 7:39ல் இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படி சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதபடியால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஆகவே இந்த குறிப்பிட்ட சரித்திர கால கட்டங்களையும்,சம்பவங்களையும் காலங்களையும் அறிந்துக்கொண்டதால் இங்கு மட்டும் ஏன் இரண்டாவது அனுபவமாக பரிசுத்த ஆவியானவரின் நிறைவைப்பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். மற்றப்படி இப்போதுள்ள எந்த சபைக்கும் பரிசுத்தாவியின் இரண்டாவது அனுபவம் என்பது கிடையாது என்பதை அறியவேண்டும்.

புதிய ஏற்பாட்டில் அந்நியபாஷை அனுபவம்:

அப்போஸ்தலர் நடபடிகளில் மொத்தம் நான்கு இடங்களில் அந்நியபாஷை பேசிய சம்பவம் காணப்படுகிறது.
அ). அப் 2ம் அதிகாரத்தில்
1)பலத்த காற்று அடிப்பதுபோன்ற முழக்கம்(சத்தம்)
2). வீடு முழுவதும் நிரம்பிய அனுபவம்
3). அக்கினிமயமான நாவுகள் காணப்பட்டது
4). ஆவியால் நிரப்பப்படுதல்
5). வெவ்வேறு பாஷைகளை பேசினார்கள் என்பது சம்பவித்தது.
ஆ)அப் 8ம் அதிகாரத்தில்
1).விசுவாசித்தார்கள்
2). ஞானஸ்நானம் பெற்றார்கள்
3). இங்கு ஆவியை பெறவில்லை என்று எழுதியிருக்கிறது
4). அப்போஸ்தலர் வந்து ஜெபம் செய்தார்கள்
5). கைகளை வைத்தார்கள்
இ). அப் 10ம் அதிகாரத்தில்
1). சுவிசேஷம் கேட்டார்கள்
2). பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
3). பல பாஷைகளை பேசினார்கள்
ஈ). ஞானஸ்நானம் பெற்றார்கள்
4). 19ம் அதிகாரத்தில்
1). சுவிசேஷம் கேட்டார்கள்
2). விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
3). பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்.
4). பல பாஷைகளை பேசினார்கள்.

மேலே காணப்பட்ட நான்கு இடங்களிலும் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டதை காணலாம். இதை வாசிக்கிற பெந்தேகோஸ்தே சபையினர் எதை மாதிரியாக தெரிந்துகொள்வீர்கள். இவைகள்யாவும் தனிதனி அனுபவங்கள் ஆகும். இவைகளை யாரும் உபதேசமாக கூறக்கூடாது. உண்மையான திருச்சபை மக்கள் அப்போஸ்தலர்கள் நிருபங்கள் வழியாக எழுதி கொடுத்த ஆலோசனைகளையே கவனித்து பின்பற்ற வேண்டும்.

3 சாட்சிகள்:

பாஸ்டர்.ராஜமணி அவர்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல 2 கொரி 13:1ஐ சுட்டிக்காட்டி சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலவரப்படும். அதுபோல வேதத்தில் 3 சாட்சிகளை இவர் கண்டுபிடித்தார். அந்நியபாஷை சபை மக்கள் எல்லாரும் பேசவேண்டும் என்பதற்காகவும் வேறு சாட்சிகள் வேதத்தில் எங்கும் இல்லாததாலும்; அப் 2,10,19 ஆகிய அதிகாரங்களில் பேசப்பட்ட பாஷைகளைக்குறிப்பிட்டு இந்த மூன்று சாட்சிகள் போதும் இனி எல்லாரும் அந்நியபாஷை பேசலாம் என்கிறார். அந்த 3 சாட்சிகளைக்குறித்தும் அந்த மூன்று இடங்களில் மட்டும் பேசப்பட்ட அந்நியபாஷைகளைப்பற்றியும் ஒவ்வொன்றாக விளக்கி எழுதினேன்.

இவர் குறிப்பிட்ட சாட்சிகள் யாவும் ஒரு கொலைக்காரனை - அவன் கொலை செய்யவில்லை என்று நிரூபிப்பதற்கு வக்கீல்கள் பல பொய் சாட்சிகளை நீதிபதிமுன் நிறுத்துவார்கள். அதுபோலவே அந்நியபாஷை சபை மக்கள் பேசவேண்டும் என்று உறுதிப்படுத்த பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் அந்நியபாஷை உபதேசத்திற்கு சம்பந்தமில்லாத 3 பொய் சாட்சிகளை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஞானமுள்ளவர்கள் நான் எழுதியதையும் - அவர் எழுதியதையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்து முடிவெடுங்கள்.

இவர் கூறிய மூன்று சாட்சிகளுக்கும் இப்போது பெந்தேகோஸ்தே சபையில் பேசும் அந்நியபாஷைக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவாக விளக்கிவிட்டேன். அந்நியபாஷையை தேவன்தான் பேசவைக்கிறார் என்று பாஸ்டர்.ராஜாமணிகூறுகிறார். அந்நியபாஷையை தேவன்தான் பேசவைக்கிறார் என்பதை எந்த வேத ஆதாரமும் இன்றி பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் கூறி அவரும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.

ஆண்டவர் மற்றவர்களுக்கு விளங்காத பாஷையை கொடுப்பார் என்பதை உறுதிப்படுத்த எசேக்கியல் புத்தகத்தில் நான்கு ஜீவன்கள் நான்கு முகங்கள், சக்கரங்கள், சக்கரத்துக்குள் சக்கரம்,சூரியனைப் அணிந்த ஸ்தீரி சமுத்திரத்திலிருந்து எழும்பினமிருகம், இப்படி விளங்காத புரிந்துக்கொள்ள இவைகள் எல்லாம் எதற்கு ஆண்டவர் கூறவேண்டும். எந்த மனிதனுக்கும் இவைகள் விளங்காது இதை உதாரணமாக்கி அந்நியபாஷைக்கு ஆதாரமாக இவைகளை கூட்டிக்காட்டுகிறார். இது மிகவும் சிறுபிள்ளைகள் பேசுவது போல இருக்கிறது. எசேக்கியல்,வெளிப்பாடு புத்தகம் இவைகள் யாவும் தீர்க்கதரிசனம் அந்நியபாஷைக்கு இதை இவர் ஏன் உதாரணத்துக்கு எடுக்கிறார்?

அடுத்து (தானி 5:25-30) பெல்ஷாத்சார் ராஜாவை எச்சரிக்க சுவரில் ஒரு கை MN MN TKL UPRS என்ற எழுத்துகளை எழுதியது. இதை அந்நியபாஷைக்காக உதாரணப்படுத்துகிறார். பாபிலோனில் எந்த பண்டிதருக்கும் இது விளங்கவில்லை. ஆனால் தானியேல் ஆவியானவரின் உதவி பெற்று அதன் அர்த்தத்தை கூறிவிடுகிறார். இந்த வார்த்தை அரமேய பாஷையாகும். இது உயிரெழுத்து இல்லாமல் வெறும் மெய் எழுத்தினால் விடுகதைப்போல எழுதப்பட்டது.

தானியேல் இந்த வார்த்தையோடு உயிரெழுத்தை சேர்த்து ஒரே வார்த்தையாக அமைத்துவிடுகிறார். MENE MENE TEKEL UPARSIN என்ற வார்த்தை தெளிவாகிறது. உடனே அதன் அர்த்தத்தையும் கூறிவிடுகிறார். அங்குள்ள யாவருக்கும் விளங்கிக்கொண்டு பாபிலோனிய பண்டிதர்களும் அர்த்தத்தை ஒத்துக்கொள்கிறார்கள். இப்போது பாஸ்டர்.ராஜமணி அவர்கள் எங்கள் சபைமக்கள் பேசும் பாஷையும் இப்படித்தான் கர்த்தரே பேச வைப்பதாகும் என்கிறார். யாருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. ஆவியானவருக்கு மட்டுமே அதன் அர்த்தம் தெரியும்.

பாபிலோனிய ராஜாவுக்கு எதற்காக விளங்காத பாஷையை சுவரில் எழுதவேண்டும் என்று நாம் கேட்க முடியுமா? என்கிறார் பாஸ்டர்.ராஜாமணி அதைப்போல ஏன் கர்த்தருக்குதான் தமிழ் தெரியுமே, எதற்கு அந்நியபாஷையை கர்த்தர் நம் வாயில் பேச வைக்கிறார் என்று கேள்வி கேட்க முடியும்? என்று வேதம் அறியாதவர்போல பேசுகிறார்.

முன்பு TPM பாஸ்டர்.ராஜன் அவர்கள் அர்த்தம் இல்லாத கேள்விகளை, வேத சம்பந்தம் இல்லாத விளக்கங்களை கூறினாரோ அதுபோல இவரும் வசனத்தின்படி தன் கருத்தை விளக்காமல் மெனே மெனே தெக்கே என்ற வார்த்தையும் வேதத்தில்தான் இருக்கிறது என்று சம்பந்தம் இல்லாமல் பேசி நேரத்தை வீணாடிக்கிறார். இது வெறும் வாக்குவாதம் தான் தவிர வேத ஆதாரம் உள்ள விளக்கம் அல்ல. ஆகவே இனி பாஸ்டர்.ராஜாமணி அவர்களின் கடிதத்தில் காணப்படும் அர்த்தமில்லாத விதண்டா வாதத்துக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
கேள்விக்கு பதில் சொல்லலாம் - வாக்குவாதத்திற்கு பதில் சொல்லக்கூடாது.
தெரியாதவன் கேள்வி கேட்பான் - ஒத்துக்கொள்ளாதவன் வாக்குவாதம் செய்வான்.
வாக்குவாதத்துக்கு நாங்கள் வரமாட்டோம் என்று பவுல் கூறுவதை வேதத்தில் வாசித்துள்ளோம். என்றாலும் பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் எழுதிய கடைசி உளரலுக்கும் பதில் கூறி முடித்துவிடுகிறேன். மேலே வாசித்தது பாபிலோனிய ராஜாவுக்கு கர்த்தர் கொடுத்த எச்சரிப்பு ஆகும்.

எபிரேயர்கள் பேசும் பாஷையில் தான் கர்த்தர் எழுதினார். நடுவில் சில வார்த்தைகளை விட்டு ஏதோ விளங்காத இரகசியம் போன்று காணப்படவைக்கிறார். இதில் இரண்டு காரியங்களை நடப்பிக்க கர்த்தர் விரும்பினார். பாபிலோனிய பண்டிதர்களையும், ஞானிகளையும் மட்டம்தட்டி கைதியாக பிடித்துவந்த தன்னை நேசிக்கும் தானியேலை ஞானமுள்ளவனாக்கி காண்பித்து அதே அரசாங்கத்தில் நாட்டை ஆளும் உயர்ந்த அந்தஸ்தில் தானியேலை அமர செய்ய தேவன் வகுத்த திட்டம் ஆகும். மேலும் ராஜாவுக்கு கொடுக்கும் பயங்கர எச்சரிப்பு இந்த எழுத்தில் அடங்கியிருக்கிறது.

பாஸ்டர்.ராஜமணிக்கு என் தனிப்பட்ட வேண்டுகோள்:

பாஸ்டர்.ராஜாமணி அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் மேலே குறிப்பிட்ட வார்த்தையை அந்நியபாஷை என்று விளங்காத பாஷை என்றும், அர்த்தம் கர்த்தருக்கு மட்டுமே தெரியும், உலக மக்களுக்கு தெரியாது என்பதைப்போல காட்ட விரும்புகிறீர்களே, பாபிலோனிய ராஜா அரண்மனை சுவரில் எழுதியது இது என்ன என்று? இத்தனை வருட அனுபவம் உள்ள உங்களுக்கு உண்மையாகவே தெரியாதா? அல்லது ஒரு பொய்யை உண்மையாக்க விரும்பி கல்லாதவர்போல நடிக்கிறீர்களா? யாரை திருப்திப்படுத்த இந்த மாய்மாலம் காட்டுகிறீர்கள். நிச்சயம் கர்த்தரை அல்ல - அந்நியபாஷை பேசும் உங்கள் பெந்தேகோஸ்தே சபையினருக்கு தெளிவு உண்டாக்கிவிடக்கூடாதே என்பதற்காக உண்மையை மறைத்து அந்நியபாஷைக்கு வக்காலத்து வாங்க இப்படி எழுதுகிறீர்களா? நீங்கள் இப்படி உண்மையை மறைப்பது ஆவியானவருக்கு விரோதமான செயல் என்று அறியீர்களா? ஜாக்கிறதை ஐயா. ஆவியானவரோடு விளையாடாதீர்கள் .

மெனே, மெனே தெக்கே என்பது ஒரு பாஷை. எந்த ஒரு பாஷைக்கும் அர்த்தம் உண்டு. 1 கொரி 14:8-10. இது ஆண்டவரின் கை எழுதியதால் இது பரலோக பாஷை அல்ல - சில பத்திரிக்கைகளில், கட்டங்களில் எழுத்துக்களால் நிரப்பும் விளையாட்டை அறிந்திருப்பீர்கள். ஒரு பொருளின் ஆரம்ப வார்த்தையின் முதல் இரண்டு வார்த்தைகளை எழுதியிருப்பார்கள். மீதி கட்டங்கள் காலியாக இருக்கும். அதை சரியான வார்த்தைக்கொண்டு நிரப்பினால் முழு வார்த்தையும் வெளிப்படும். அதைப்போலவே நடுவில் உயிர் எழுத்தை மறைத்து மெனே மெனே தெக்கே என்று மட்டும் கர்த்தர் எழுதினார். தானியேலுக்கு ஞானத்தை அளித்து இதன் இரகசியத்தை உணர்த்தினார். உடனே அது எபிரேயர்கள் உபயோகிக்கும் சாதாரண அரமேய வார்த்தைதான். அதற்கு அர்த்தமும் இருந்தது. அதன் விளக்கத்தையும் அதன் அர்த்தத்தையும் தானியேல் கூறுகிறான். கர்த்தர் அர்த்தமுள்ள பாஷையில்தான் எச்சரிப்பை எழுதி காட்டினார். அந்த சின்ன சம்பவத்தின் விளக்கம் பாஸ்டர்.ராஜாமணிக்கு எப்படி விளங்காமல் போனது?.

இன்னொரு பெந்தேகோஸ்தே பாஸ்டர் எழுதினார் இயேசுவும் அந்நியபாஷை பேசினார். சிலுவையில் ஏலி ஏலி லாமா சபக்தானி என்று அந்நியபாஷையில் பேசினார் என்றார். இப்படிப்பட்ட முட்டாள் பாஸ்டர்கள் தங்கள் சபை மக்களை வசனத்தில் எப்படி நடத்துவார்கள்? யாரோ சில பாஸ்டர்கள் செய்யும் தவறு என்று இப்படிப்பட்ட முட்டாள் தனத்தைக்காட்டி இவர்கள் சமாளிக்காதபடியிருக்க, இரண்டு கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் மேலும் இரண்டு பாஸ்டர்கள் இதே சம்பவத்தை குறிப்பிட்டு இயேசு அந்நியபாஷை பேசினார். ஆகவே நாமும் அந்நியபாஷை பேசவேண்டும் என்று வெளிப்படையாக இவர்கள் எழுதும்போது வாசிக்கிறவர்கள் எல்லாரையும்; முட்டாளாக்குகிற இவர்களை நாம் ஏன் இவர்களை முட்டாள்கள் என்று கூறக்கூடாது? அதே சுவிசேஷ பாகத்தில் ஏலி ஏலி லாமா சபக்தானி என்பதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாம் என்று எத்தனை தெளிவாக விளக்கமும் எழுதியிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள். மெனே மெனே தெக்கே என்பது அந்நியபாஷை ஆவியானவருக்கு மட்டுமே அது தெரியும் என்று கூறும் பாஸ்டர்.ராஜாமணி அவர்களுக்கும், ஏலி ஏலி லாமா சபக்தானி என்று இயேசுவும் அந்நியபாஷையில் பேசினார் என்று கூறிய, எழுதிய அந்த பாஸ்டர்களுக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள் என்று ஏன் கூறக்கூடாது?.

ஆகவே பாஸ்டர்.ராஜாமணி அவர்களின் கடிதத்துக்கு நான் கொடுத்த இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன். பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் கடிதத்தில் அந்நியபாஷையை உறுதிப்படுத்த எழுதிய மற்ற உதாரணங்களை வாசித்து நான் விளக்கம் கொடுத்தால் அவரின் நல்மதிப்புக்கு மிகவும் குந்தகம் உண்டாகும். இனி நான் வசனத்தின்படி அந்நியபாஷை - வரம் இவைகளைக்குறித்து பெந்தேகோஸ்தே சபைக்காரர்கள் மற்றவர்களை குழப்பும் வசனங்களுக்கு வேத வசன அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்போகிறேன்.

என் 52 வருட ஊழியத்தின் அனுபவத்தில் ஒவ்வொரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள், விசுவாசிகள் அல்லது கன்வென்ஷன் பிரசங்கிமார்கள், TV பிரசங்கிமார்கள் வேதாகம கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் இவர்கள் அந்நியபாஷை பேசுபவர்களாக இருந்தால் என் சிறிய அனுபவத்தில் அவர்கள் உள்ளத்தின் அடிதளத்தில் பொய்யும்- மாயமாலமும் உண்டு என்பது உறுதி. கூடியவரை இவர்களை நம்பவேண்டாம். இப்படி எழுதுவது எனக்கு மனவேதனையை அளிக்கிறது. என்றாலும் எனக்குள் இருக்கும் ஆவியானவர் எனக்கு அளித்த ஆவியை பகுத்தறியும் கிருபையை ஆதாரமாக வைத்து சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்தி இதை எழுதுகிறேன்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.