அந்நியபாஷை குழப்பம்

பாஷைகள் உருவாக்கப்பட்ட சரித்திரம்:

அந்நியபாஷைகளைப்பற்றி அறியும்முன் இதன் ஆரம்ப சரித்திரத்தை வாசகர்கள் அறியவேண்டியது அவசியம். அப்போதுதான் பெந்தேகோஸ்தே சபையினர் பேசும் போலியான அனுபவ விவரங்களை விளங்கிக்கொள்ளமுடியும்.

உலகமெங்கும் ஒரே பாஷையும் ஒரேவிதமான பேச்சும் இருந்தது. ஆதி 11:1

மேலே வாசித்தப்படி நோவா காலத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ள அழிவுக்கு பிறகு அழிவில் காப்பாற்றப்பட்ட நோவா குடும்பம் பலுகி பெருகி பெருத்த கூட்டமாக வாழ்ந்தார்கள். நடந்த வெள்ள அழிவுக்கு காரணம் தங்கள் மூதாதையர் செய்த பாவம், கர்த்தருக்கு கீழ்ப்படியாமை ஆகியவற்றால்தான் ஏற்பட்டது என்பதை இந்த மக்களும் மறந்து மறுபடியும் மக்கள் கர்த்தரின் மனம்வேதனைப்படும் அளவு கர்த்தருக்கு கீழ்படியாமல் தங்கள் மனம்போனப்படி நடந்தார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேவனுக்கு பெருமை சேர்க்காத செயலை செய்தார்கள். அவர்கள் தங்களுக்கு பேரும்,பெருமையும் உண்டாகத்தக்க தாக ஒரு நகரத்தை உண்டாக்கி அதில் வானத்தை தொடும்அளவு மிக உயரமான கோபுரத்தையும் பணிய தொடங்கினார்கள். இந்த முட்டாள்தனமான இவர்கள் முயற்சியை அறிய கர்த்தர் பூமிக்கு இறங்கிவந்து அவர்கள் கட்டும் கோபுரத்தையும் கண்டார். தாங்கள் கட்ட நினைத்ததை யாராலும் தடுக்கமுடியாது என்றும் அவர்கள் கூறிக்கொண்டார்கள்.

தேவ கோபம் வந்தது:

உடனே கர்த்தர் அவர்கள் பேசின பாஷையை தாறுமாறாக்கினார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதுபோனாது. பின்னும் கர்த்தர் அவர்களை அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். யார் யார் எந்தெந்த பாஷை பேசினார்களோ அவர்கள் எல்லோரும் கூடிபேசி உலகின் பல இடங்களில் சென்று குடியேறினார்கள்.

காலங்கள் கடந்துப்போனது. சரித்திரம் மாறினது. ஆபிரகாம் காலம், யோசேப்பின் காலம் இப்படி காலங்கள் கடந்துப்போக யெகோவாவை நேசித்த ஜனங்களை மட்டும் கர்த்தர் நேசித்தார். ஆனால் அவர்கள் பாவம் செய்தபோது அவர்களை திருத்துவதற்காக சத்துருக்களிடம் கர்த்தரே தன் ஜனத்தை ஒப்படைத்தார். அப்படியாகத்தான் பார்வோனிடம் அடிமைகளாக இஸ்ரவேல் மக்கள் பல காலம் வாழ்ந்தார்கள்.சில வருடங்களில் மக்கள் மனந்திரும்பினார்கள். உண்மை தெய்வத்தை தேடினார்கள். தங்களை விடுவிக்க அவரிடம் கெஞ்ஜினார்கள். கர்த்தரும் மனம்இறங்கி மோசே மூலமாக தன்னை நேசித்த மக்களை கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்தார். எகிப்தியர் கையிலிருந்து அவர்களை 40 வருடங்கள் வழிநடத்தி கானான் தேசத்துக்கு கொண்டுவந்து சேர்த்தார். நியாதிபதிகள் காலம்:

கர்த்தர் தன் மக்களை நியாதிபதிகளை கொண்டு நியாயம் தீர்த்து வழிநடத்தினார்.

இராஜாக்களின் காலம்:

இப்போது ஜனங்கள் நியாதிபதிகள் வேண்டாம் என்றும், தங்களை ஆள எங்களுக்கு ராஜா வேண்டும் என்றார்கள். அப்படியே சவுல் முதல் பல ராஜாக்களை கொண்டு கர்த்தர் தம் மக்களை வழி நடத்தினார். ஆனால் ராஜாக்களும் கர்த்தரை விட்டுவிலகினார்கள்.

தீர்க்கதரிசிகளின் காலம்:

இராஜாக்களும் மக்களோடு சேர்ந்து விக்கிரங்களை வணங்குவதும் பாவம் செய்வதுமாக வாழ்ந்து தேவனை தொடர்ந்து வேதனைப்படுத்தினார்கள். அதனால் பல தீர்க்கதரிசிகளை கர்த்தர் எழுப்பி தீர்க்கதரிசிகள் மூலமாக கர்த்தர் தன் மக்களையும், ராஜாக்களையும் எச்சரித்துவந்தார். ஆனாலும் மக்கள் தேவனைவிட்டு விலகுவதும்,கீழ்ப்படியாமல் போவதும் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில்தான் கர்த்தர் மிகவும் மனம் வெறுத்து உலகத்தையும், உலகத்தில் வாழும் மக்களையும் முற்றுமாய் அழிக்கதிட்டமிட்டார். நோவா காலத்தில் முழு உலகத்தையும் தண்ணீரால் அழித்ததுபோல இந்த முறை அக்கினியினால் உலகம் முழுவதையும் அழிக்க திட்டமிட்டார். இது உலகத்துக்கு இரண்டாம் அழிவு என்றாலும், இதுவே கடைசி அழிவாகவும் இருக்கும் என்றார். இதற்கு மேலும் மக்கள் பூமியில் வாழ சந்தர்ப்பம் கொடுக்கமாட்டார். அப்படியே பிசாசை முழுவதுமாக அழிக்கவும் திட்டமிட்டார் மேலும் இரக்கம் உள்ள தேவன் தான் ஆசையாய் உண்டாக்கிய மனிதர்களை முற்றிலும் அழிக்காதபடி, தான் உண்டாக்கிய மனிதர்களை தன் பரலோகத்தில் தன்னோடு வைத்துக்கொள்ள மனஉருக்கமுள்ளவரானர். அப்படி மானுட வர்க்கம் பரலோகம் செல்லவேண்டுமானால் அவர்கள் பாவம் மன்னிக்கப்படவேண்டும். ஆகவே இந்த மக்களின் பாவம் மன்னிக்கப்பட்டு அவர்களை பரிசுத்தமாக்கி பரலோகத்தில் சேர்த்துக்கொள்ள பிதாவால் வகுத்த திட்டம்தான் பரிசுத்த இரத்தம் பூமியில் சிந்துதல் மூலம் மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்ற திட்டமாகும். இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை. எபி 9:22. இந்த திட்டத்தின்படி மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட மனிதர்களுக்கு கடைசி சந்தர்ப்பமாக மேசியாவை உலகத்துக்கு அனுப்பி அவரை பலிகடாவாக்கி அவரை கொல்ல வைத்து கொல்லப்படும்போது அவர் சிந்தும் இரத்தம்மூலம் மக்களின் பாவவிமோசனத்துக்கு வழிவகுத்தார். அந்த திட்டத்தின்படி ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக மேசியா பூமியில் பிறப்பதைக்குறித்து தன் மக்களுக்கு ஏசா 7:14. எச்சரிப்பின் அறிவிப்பை கொடுத்தார். பிதா அனுப்பும் மேசியாவை ஏற்றுக்கொண்டு அவர் சிந்திய இரத்தத்தை யார் ஒருவன் தன் பாவம் கழுவப்பட அது ஒன்றுதான் வழி என்று யார் நம்புகிறார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்றார். அந்த மேசியா யார் என்பதை நாங்கள் எப்படி அறிவோம் என்ற கேள்விக்குத்தான் ஏசா 7:14ல் கன்னிகை கர்ப்பவதி ஆவாள் இதுவே உங்களுக்கு அடையாளம் என்றார். கன்னிகை கர்ப்பவதியாவது கூடாத காரியம். உலகத்தில் நடந்திராத அதிசயமும் ஆகும். கணவன் இல்லாமல் ஆண் தொடர்பு இல்லாமல் கன்னி மரியாள் தேவ திட்டப்படி கர்ப்பம் தரித்து மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவை பெற்றெடுத்தாள்.

இந்த சந்தோஷ செய்தியை கர்த்தர் நேசிக்கும் (யூதர்களுக்கு) இஸ்ரவேல் மக்களுக்கு முதலாவது அறிவிக்கப்பட்டது. யூதர்களிலேயே பலர் விக்கிரகத்தின் பின்னே போனாலும் பெரும்பாலான யூதர்கள் ஒரே தெய்வமாகிய யெகோவாவை(யாவே) ஆராதிப்பதில் வைராக்கியமாக இருந்தனர். ஆகவே முதல் இரட்சிப்பு யூதரிலிருந்து தொடங்கும் என்றார்.

ஆனால் இந்த யூதர்கள் இயேசுதான் மேசியா என்பதை நம்ப மறுத்தார்கள். தான் தான் மேசியா என்று மோசே எழுதிய நியாயபிரமாண புத்தகமும், தீர்க்கதரிசிகள் எழுதியதில் தன்னைப்பற்றி குறிக்கப்பட்டதை சுட்டிக்காட்;டி இயேசு பிரசங்கித்தார். என்றாலும் அவர் பேசுவதை தேவ தூஷணம் என்று கூறி இயேசுவை பிடித்து சிலுவையில் அறைந்தார்கள். மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியதை யூதர்கள் நம்பாமல்போனாலும், தான் செய்த அற்புத கிரியைகளை கண்டாவது தான்தான் மேசியா என்று நம்பவைக்க இயேசுகிறிஸ்து எவ்வளவே முயன்றார். என்றாலும் முரட்டாட்டம் உள்ள அந்த மக்கள் மேசியாக வந்த இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அவர் மரித்துமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். தான் உயிரோடு இருப்பதை பல திருஷ்டாந்தங்கள்மூலமாக எல்லாருக்கும் வெளிப்படுத்தினார். அப் 1:3.

பற்பல பாஷைகள்:

இந்த அற்புதமான பிதாவின் ஏற்பாடுகள் யாவும் முடிந்தபின் பிதா அனுப்பிய மேசியா இயேசுதான் என்பதை அறிவிக்கவும் பரிசுத்த ஆவியானவரை(பிதா) தான் வாக்கு செய்தபடி உலகத்திற்குள் மாம்சமான யாவர்மேலும் இறக்கவும் செய்த அந்த திட்டத்தின்படி ஆவியானவரின் முதல் இறக்கமாக எருசலேமில் உள்ள ஒரு வீட்டில் மேல்அறையில் காத்திருந்த தன் சீஷர்களும்;,அப்போஸ்தலர்களும் ஆவியானவரின் நிறைவை அனுபவிக்க எருசலேமில் மேல் அறையில் காத்திருக்க கட்டளையிட்டார். அப்படியே யாவரும் காத்திருந்தார்கள். அந்த ஒரு இடத்தைத்தவிர வேறு எந்த இடத்திலும் பரிசுத்த ஆவியானவரின் வருகைக்காக நிறைவுக்காக காத்திருக்கும்படி ஆண்டவர் எங்கும் சொன்னதில்லை. அப்படி செய்தததும் இல்லை. ஆனால் சீஷர்களுக்காக பரிசுத்தாவியின் இறக்கத்துக்காக எருசலேமில் காத்திருக்க சொன்ன தெய்வம் வேறு எந்த இடத்திலும், புதிய ஏற்பாட்டு சபைகளில் எங்கும் எந்த ஊரிலும் காத்திருக்க கூறியதில்லை. TPM பாஸ்டர்.ராஜன் அவர்களின் கடிதத்தில் எழுதியதைப்போல காத்திருந்துதான் ஆவியானவரை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற உபதேசம் வேதத்தில் இல்லாத பிழையான உபதேசம் ஆகும். அது கள்ள உபதேசமாகும். வேதத்தில் வேறு எங்கும் சீஷர்களோ, சபையோ,ஆவியானவருக்காக காத்திருந்ததாக வேதம் நமக்கு போதிக்கவில்லை. ;

சிதறடிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம்:

எருசலேமில் அப் 2:4ல் சம்பவித்ததின் விவரம்: ஆதியாகமம் 11ம் அதிகாரத்தில் நாம் வாசித்த சம்பவத்தில் கோபுரம் பணிந்ததினால் தேவகோபம் ஏற்பட்டு பல பாஷைகளை ஏற்படுத்தி அதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாகங்களில் யூதர்கள் சிதறிடிக்கப்பட்டார்கள். அந்த யூதமக்கள் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்கு வந்து தங்கி எருசலேம் தேவாலயத்தில் ஜெபித்துபோவது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படி சிதறடிக்கப்பட்ட அந்த யூதர்களுக்கு மேசியா என்பவர் இயேசுகிறிஸ்துதான் என்பதை அறிவிக்க பிதா ஏற்பாடு செய்த தேவ திட்டம் தான் இங்கு எருசலேமில் நிறைவேற்றப்பட்டது ஆகும்.

இவர்கள் யாவரும் மேசியா வருவார் என்பதை தீர்க்கதரிசன ஆகமங்கள்மூலமாக அறிந்திருந்தார்கள், ஆனால் அது இயேசுதான் என்பதும், இயேசுவின் இரத்தத்தை நம்பி பாவ அறிக்கை செய்தால் பாவமன்னிப்பு இந்த உலகத்தில் மனிதன் உயிரோடு இருக்கும்போதே பாவமன்னிப்பு கிடைத்துவிடும் என்ற சந்தோஷ செய்தி இங்குதான் அரங்கேறினது. பஸ்கா பண்டிகையின் 50வது நாளில் அந்த அற்புத சரித்திர சம்பவம் அரங்கேறப்போகிறது என்பதை அந்த இராத்திரி யாரும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் ஆவியானவர் முதலாவது சீஷர்கள்மேலும், அப்போஸ்தலர்கள்மேலும் இறங்கி அவர்கள் வாய்வழியாக இயேசுகிறிஸ்துதான் பிதா அனுப்பிய மேசியா என்று அறிமுகப்படுத்தும் அற்புத சம்பவம் நடந்தது. அன்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மூன்று சம்பவங்கள் நடந்தது.

பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கத்துக்காக எருசலேமில் உள்ள மேல் வீட்டில் சீஷர்கள் காத்திருந்தார்கள் அப்போது 3 சம்பவங்கள் நடந்தேறியது.

முதலாவது: பலத்த காற்று வந்தது. வீடுமுழுவதையும் அது நிரப்பிற்று. காற்று பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக பழைய ஏற்பாடுகளில் எழுதப்பட்டதை அறிவீர்கள். பரிசுத்த ஆவியானவரின் வரவுக்காக காத்திருந்த சீஷர்கள் பலத்த சத்தத்துடன் காற்று வீசி வீட்டை நிரப்பியபோது ஆவியானவர் வந்துவிட்டார் என்று அறிந்துக்கொண்டார்கள். ஆவியானவரை என்றென்றுமாய் நம்மோடு கூட இருக்கும்படி வாக்கு அருளிய இயேசுகிறிஸ்து அந்த வாக்கை இங்கு நிறைவேற்றினார். அதன்படி ஆவியானவர் முதல் இறக்கம் இங்கு சம்பவித்தது.

சடுதியாய் உண்டான முழக்க சத்தம்:

இந்த சத்தம் உண்டாக காரணம்: பஸ்கா பண்டிகைக்காக எருசலேம் வந்து தங்கியிருந்தவர்களுடன் உலகின் பல்வேறு இடங்களில் சிதறடிக்கப்பட்ட தேவ பக்தியுள்ள யூதர்களையும் மேல்அறை வீட்டுக்கு முன்பாக கூட்டி சேர்க்க பிதாவினால் ஏற்படுத்தப்பட்ட சத்தமாகும். அந்த சத்தத்தை கேட்டவர்கள் யாவரும் உறக்கத்திலிருந்து எழுந்து சத்தம் எந்த வீட்டிலிருந்து உண்டானதோ? அந்த வீட்டுக்கு முன்பாக யூதர்களோடு, திரளான ஜனங்களும்கூடி நின்றார்கள். இப்போது அறையிலிருந்த சீஷர்கள் வெளியே வந்து நிற்கிறார்கள். அப்போதுதான் பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார் என்று வாசிக்கிறோம்.

அக்கினிமயமான நாவுகள் (தீ ஜீவாலை):

இப்போது (அக்கினிமயமான நாவுகள்) நெருப்பு ஜீவாலை ஒவ்வொரு சீஷர்கள்மேலும் அமர்ந்தது. அந்த சம்பவம் விவரிக்க முடியாத அற்புத சம்பவம் ஆகும். ஒரு மனிதனின் சரீரம் முழுவதும் நெருப்பு ஜீவாலை சூழ்ந்திருக்க கண்டால் எப்படியிருக்கும்?கற்பனை செய்து பாருங்கள். அந்த நெருப்பு ஜீவாலை சீஷர்களை சுட்டெரிக்கவில்லை. அப்படியாகியிருந்தால் கரிகட்டையாகியிருப்பார்கள். நெருப்பு ஜீவாலை சீஷர்களை மறைக்காமல் நெருப்பு ஜீவாலைக்குள் சீஷர்களின் உருவத்தை மக்கள் பார்க்கிறார்கள். எத்தனை ஆச்சரியமான காட்சியிது.

இத்தகைய காட்சிக்கும் விசேஷ காரணமுண்டு. கூடி நின்றவர்களுக்கு குறிப்பாக தேவ பக்தியுள்ள யூதர்களுக்கும் கர்த்தர் பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்தி மேல் வீட்டனரயின் முன் நிற்கும் சீஷர்கள் நம் தேவனை ஆராதிக்கிறவர்களும், நம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த நடந்த அற்புத சம்பவமாகும். யூதர்கள் மதிக்கிற முற்பிதாக்களின் தலைவனான மோசேயுடன் அன்று கர்த்தர் எரியும் அக்கினி ஜீவாலையின் நடுவே நின்று கொண்டுதான் பேசினார் (யாத் 3:2-4). நெருப்பு எரிகிறது. அப்போது வசனம் கூறுகிறது. மோசே உற்றுபார்த்தானாம். நெருப்பில் எரிந்துக்கொண்டிருந்த அந்த முட்செடி வெந்துபோகாமல் அதாவது கரிகட்டைபோல் ஆகாமல் அப்படியே உயிருள்ள முட்செடியாகவே இருந்தது. நெருப்பு ஜீவாலை முட்செடி முழுவதையும் எரித்துக்கொண்டிருந்த நிலையை மோசே கண்டான். இது ஒரு ஆச்சரியமான விஷயம். தூதன் வேஷத்தில் வந்த கர்த்தரின் உடல் முழுவதும் நெருப்பு ஜீவாலையில் எரிந்துக்கொண்டிருக்கிறது. ஜீவாலையின் நடுவே தூதனையும் மோசே பார்க்கிறான். இப்போதுதான் தேவ செய்தியனாது நெருப்பு ஜீவாலையின் நடுவே நிற்கும் தூதன் வழியாக வருகிறது.

தீ ஜீவாலை வழியாக கர்த்தர் பேசின இந்த அற்புத சம்பவம் குறித்து தலைமுறை தலைமுறையாக தங்கள் சந்ததியுடன் கூறி தேவனை புகழ்வது யூதர்களின் வழக்கம் ஆகும். ஆகவே தங்கள் முற்பிதாக்கள் கூறிய அதே சம்பவத்தை போல இப்போது மேல் அறை வீட்டின் முன்பாக நிற்கும் சீஷர்கள்மேல் எரியும் நெருப்பு ஜீவாலையையும் மோசேயுடன் கர்த்தர் பேசின சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அதே சம்பவம் அதே நெருப்பு ஜீவாலை, அன்று முள்செடி எரிந்து கருகவில்லை. அப்படியே இங்கு சீஷர்களும் ஜீவாலையில் எரிந்து கருகவில்லை.

இதன்மூலம் இயேசுவின் சீஷர்கள் யாவரும் கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை இந்த ஜனங்கள் உறுதிப்படுத்த இது கர்த்தரால் நடத்தப்பட்ட ஏற்பாடாகும். அந்நியபாஷையில் பேசவில்லை அப் 8:18. இந்த குறிப்பிட்ட வசனங்களில் பேதுரு கைவைத்து ஜெபித்தபோது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் யாரும் அந்நியபாஷையில் பேசவில்லை.

பவுல் பேசிய அந்நியபாஷை:

1கொரி 14:18ல் உங்கள் எல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளை பேசுகிறேன் என்று பவுல் கூறினார். இதை பவுல் எந்த இடத்தில் கூறினார். கொரிந்து சபையில் கொரிந்து சபை மக்களுக்கு முன் பேசுகிறார். கொரிந்து சபையில் சுமார் 16 அந்நியபாஷை பேசுகிற பாஷைக்காரர்கள் ஆராதனையில் இருந்தார்கள். அவர்களிடம் பாஷை பிரச்சனைகள் உண்டானபோது 1 கொரி 14ம் அதிகாரம் முழுவதிலும் அந்த சபை மக்களுக்கு பாஷை பிரச்சனை உண்டானதை சரிப்படுத்த விளக்கம் கொடுக்கும் வகையில் பேசின வார்த்தைதான் 8,9,10 வசனங்களில் வாசிக்கிறோம்.

அந்த வரிசையில் கூறப்பட்ட வார்த்தைதான் அப் 8:18ல் நான் உங்களில் அதிகமாக பாஷைகளை பேசுகிறேன் என்றார். காரணம் பேதுரு, யோவான் போன்ற மற்ற சீஷர்கள் யாவரும் யூதர்களுக்கு மத்தியிலே மட்டும் அதிகம் ஊழியம் செய்தவர்கள். ஆனால் பவுலோ தன் தொழிலாகிய கூடாரபணி செய்துகொண்டே பல விதமான பாஷைகள் பேசும் புறஜாதிகள் மத்தியில் அதிகம் ஊழியம் செய்தவர் ஆகும். கூடாரபணி செய்து அந்தந்த ஊர் பாஷைகளை கற்றுக்கொண்டு அந்த பாஷையில் சுவிசேஷம் அறிவித்து ஊழியம் செய்ததால் பவுல் மட்டுமே பல பாஷைகளில் பேசுபவராக இருந்தார். ஆகவேதான் கொரிந்து சபைக்கு வந்த போது உங்களைவிட மற்ற சீஷர்களைவிட மிக அதிகமான பாஷைகளில் பேசுகிறேன் என்றார். அதை பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு அடையாளமாக பவுல் கூறவில்லை.

இயேசுகிறிஸ்து மற் 16:17 ல் கூறும்போது விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களானவன அவர்கள் நவமான பாஷைகளில் பேசுவார்கள். இது ஒரு வரம் ஆகும்.

கேரளாவில் தோமா பேசிய மலையாளம்:

இயேசுவின் சீஷன் தோமா கேரள கடற்கரையில் சிடங்கனூர் என்ற ஊரில் வந்து இறங்கி அங்குள்ள இந்துக்கள் ஆலயத்தில் படுத்திருந்தபோது அதிகாலையில் (பிரமணர்கள் என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படும் உயர் ஜாதியினரைப்போல்) கேரளத்தில் நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் உயர் ஜாதியினர் சூரிய நமஸ்காரம் செய்ய குளத்தில் இறங்கி தண்ணீரை அள்ளி சூரியன் உதிக்கும் திசைநோக்கி வீசி தொழுதுகொள்ளும்போது தோமா அறிவித்த சுவிசேஷத்தாலும் அவன் மூலமாய் நடப்பித்த அற்புதத்தாலும் அந்த உயர்குல நம்பூதிரிகளுக்குத்தான் கேரளத்தில் முதன்முதல் சுவிசேஷத்தை அறிவித்தார். தோமாவுக்கு மலையாளம் கற்க நேரம் இல்லையே. எப்படி மலையாளத்தில் சுவிசேஷம் அறிவித்தார். அதுதான் Gift of the Holy Spirit பரிசுத்த ஆவியானவரின் வரம். அந்த வரம் கர்த்தரால் கொடுக்கப்படவேண்டியது. நாம் கேட்டுபெற்றுக்கொள்வது அல்ல. அதனால்தான் அந்நியபாஷை வரம் வேண்டும்,சுகமளிக்கும் வரம் வேண்டும் ஆவியானவர் வர வேண்டும் என்றெல்லாம் கேட்கக்கூடாது . அதற்காக ஜெபிக்கவும் கூடாது என்கிறேன். ஏன் கேட்கக்கூடாது என்பதற்கு விளக்கம் முன்பகுதியில் எழுதியிருக்கிறேன்.
வரம் கொடுக்கப்படவேண்டியது, கேட்கப்படகூடியது அல்ல.

தோமாவுக்கு அந்த நாட்டுக்கு உடனே சுவிசேஷம் அறிவிக்க மலையாள பாஷை வரம் உடனே தேவைப்பட்டது. கர்த்தர் கொடுத்தார் தோமா பேசினார். அவ்வளவே!. அப் 2ம் அதிகாரத்தில் சீஷர்கள் தனக்கு தெரியாத பல மொழிகளில் ஒரே வாய் வழியாக பேசினார்களே எப்படி? அதுதான் ஆவியானவரால் அருளப்படும் வரம். அந்த பாஷை வரம் அங்கு தேவைப்பட்டது. ஆவியானவர் கொடுத்தார், சீஷர்கள் பாஷைகளில் பேசினார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.