கேள்வி பதில்கள்

பதில்: தவறில்லை. முழுவேதமும்,வேத அகராதிகளும் லேப் டாப்பில் காணப்படுகிறது. வாசிக்கிறதற்கு ஆராய்வதற்கு லேப்டாப் டேபிளில்,மொபைலில் உள்ள வேத புத்தகம் பிரயோஜனப்படுகிறது. பெரிய வேத புத்தகத்தில் எடுத்து செல்வதற்கு பதில் உள்ளங்கை அளவிலே உள்ள மொபைலில் முழுவேதமும் பெரிய எழுத்துகளின் அதை அகலப்படுத்தி வாசிக்கமுடிகிறது.

நவீன காலத்துக்கு ஏற்ப அப்படிப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது நல்லது. அந்த காலத்தில் பவுல் எருசலேம் முதல் இல்லிரக்கம் வரை நடந்து பிரயாணம் செய்து ஊழியம் செய்தான். இந்த காலத்திலும் இத்தனை வாகன வசதிகள் உள்ள காலத்தில் பவுலைப்போல நான் நடந்துதான் போய் ஊழியம் செய்வேன் என்பது முட்டாள்தனம். ஊழியத்துக்கு வாகனங்களை நவீன கருவிகளை பயன்படுத்துவதில் தவறில்லை.

ஆனால் மனிதர் பார்வையில் வேத புத்தகத்திலிருந்து தான் நான் பிரசங்கிக்கிறேன் என்று மக்கள் உணர லேப் டாப் உபயோகித்தாலும், அருகே வேத புத்தகத்தை மக்கள் பார்வையில் வைப்பது நல்லது என்னதான் நவீன கருவிகள் முழு வேதமும் கிடைத்தாலும் வேத புத்தகத்தை திறந்து வாசிப்பதுபோல் ஒரு சந்தோஷம். பயபக்தி,லேப்டாப்பிலோ, மொபையிலிலோ டேபிலட்டிலோ நிச்சயம் கிடைக்காது.

தயவுசெய்து புறமதத்தினர்களிடம் ஊழியத்துக்குபோகும்போது கை வேத புத்தகத்தை எடுத்துப்போவதே நல்ல சாட்சியாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.