கவிதைகள்
ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவன் கொடுத்த 

இலவச தண்ணீரை-மனிதன்

பைகளில் அடைத்து

பணம் பண்ணுகிறான்

 

உடுப்பு கடைக்கு

உடையெடுக்கச் சென்றால்-வியாபாரி

உடுத்தி இருப்பதையும்

உருவப் பார்க்கிறான்

 

மழைக்குக் காரணமான

மரங்களை அழித்து விட்டு

மழைக்கு யாகம் பண்ணுகிறான்

மனிதன் மாயம் பண்ணுகிறான்

 

கார்ப்பரேட்டு களவாணிக்கு

காவல் பண்ணுகிறான் - அதுவே

ஏழைகள் என்றால் 

ஏளனம் பண்ணுகிறான்

 

மனசாட்சி செத்தவன்

மருத்துவன் ஆகிறான்

மருத்துவம்  வியாபாரமானதால்

மனித நேரத்தை மறந்து போகிறான்

 

மெய்யை மைய்யால் மறைத்து

பொய்யை பரப்புகிறான்

பத்திரிகை யாளன் -தன்

பையை நிரப்புகிறான் 

 

நவீன இசையுடன்

நயவஞ்கத்தை கலந்து

உலாவவிடுகிறான் - ஊடகத்தான்

ஊசியில் விஷம் ஏற்றுகிறான்

 

விளைச்சல் நிலங்களை

வீட்டு மனையாக்கிவிட்டு - வியாபாரி

விலைவாசி உயர்வு என்று

வேடம் போடுகிறான்

 

நலிந்தவன் நம்பிக்கையோடு

நீதிமன்றம் நாடுகிறான்

நீதியரசரோ வழக்கில்

நீசருக்கு துணைபோகிறான்

 

சாலையோர சிற்றண்டிகள்

சாகக்கிடக்குது-அந்நிய

மெக்டொனால்டும் கேஎப்சியும்

மொத்தத்தையும் வாரிச்சுருட்டுது

 

சமுதாயத்தின் அவலங்களை

சிந்திக்காத கிறிஸ்தவனே

சபையில் நிரம்பி வழிகிறான்

சவாலகளை சந்திக்க மறுக்கிறான்

 

சிந்திக்க மறுத்து கிறிஸ்தவன்

சீரழிந்து போகிறான்

சமூகத்தை மறந்து- சபையில்

சத்தம் போடுகிறான்

 

விசாவுக்கு ஜெபம்

வேலைக்கு ஜெபம் - என்று

கோபுரம் கட்டுகிறான்-மதவாதி

கல்லாவை நிரப்புகிறான்

 

கிறிஸ்தவன் திருந்துவது-எப்போது

கேடுகள் மறையும் அப்போது

சிந்தித்தால் மலரும் புதுயுகம்

சாதிக்க முயலுவோம் அனைவரும்

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.