வேதாகம வரலாறுகள்
3 யோவான்
ஆசிரியர்
யோவானின் மூன்று நிருபங்களும் நிச்சயமாக ஒரு மனிதனின் வேலையாக இருக்கின்றன, பெரும்பாலான அறிஞர்கள் அதை அப்போஸ்தலனாகிய யோவான் என்று முடிக்கிறார்கள். சபையில் அவரது ஸ்தானம், அவரது முதிர்ந்த வயது காரணமாக யோவான் தன்னை “மூப்பர்” என்று அழைத்துக் கொள்கிறார், மற்றும் நிருபத்தின் ஆரம்பம், நிறைவுசெய்தல், பாணி மற்றும் கண்ணோட்டம் ஆகியவை 2 யோவானுக்கு மிகவும் ஒத்திருக்கிறது என்பதால், அதே எழுத்தாளர் இரண்டு கடிதங்களையும் எழுதினார் என்பதில் சந்தேகமே இல்லை.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 85-95 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள எபேசுவிலிருந்து யோவான் இந்த நிருபத்தை எழுதினார்.
 
யாருக்காக எழுதப்பட்டது
3 யோவான் நிருபம் காயுவுக்கு எழுதப்பட்டது. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு நன்கு அறிமுகமாயிருந்த சபைகளில் ஒன்றில் இவர் ஒரு முக்கிய அங்கத்தினராக இருந்தார். காயு அவருடைய விருந்தோம்பலுக்காக அறியப்பட்டார்.
 
எழுதப்பட்ட நோக்கம்
உள்ளூர் திருச்சபையை நடத்துவதில் தன்னையே உயர்த்திக்கொள்வதற்கும் பெருமைகொள்வதற்கும் எதிராக எச்சரிப்பதற்கும், தனக்கும் மேலாக சத்தியத்தை போதிக்கும் ஆசிரியர்களின் தேவைகளை சந்திக்கும் காயுவை பாராட்டுவதற்காகவும் (வச 5-8), தியோத்திரேப்புவை அவன் தனது சொந்த தேவைகளை நிறைவேற்றுகிற இழிவான நடத்தைக்கு எதிராக எச்சரிக்கவும் (வச 9), பயணம் செய்யும் ஆசிரியரும் 3 வது யோவான் நிருபத்தை கொண்டு செல்பவருமான தேமேத்திரியுவை பாராட்டவும் (வச 12), யோவான் தன் வாசகர்களை விரைவில் சந்திக்க வருகிறார் என்று தெரிவிக்கவும் (வச 14) இந்த நிருபம் எழுதப்பட்டது.
 
மையக் கருத்து
விசுவாசிகளின் விருந்தோம்பல்
 
பொருளடக்கம்
1. அறிமுகம் — 1:1-4
2. பயண ஊழியர்களுக்கான விருந்தோம்பல் — 1:5-8
3. பொல்லாதவையல்ல, நல்லவைகளை பிரதிபலித்தல் — 1:9-12
4. முடிவுரை — 1:13-15

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.