வேதாகம வரலாறுகள்

2 பேதுரு

ஆசிரியர்
1 பேது 1:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 பேதுருவின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவார். 2 பேதுரு 3:1 ல், 2 பேதுருவின் ஆசிரியர் இயேசுவின் மறுரூப நிலைக்கு சாட்சியாக இருப்பதாக கூறுகிறார் (1:16-18). ஒருநோக்கு சுவிசேஷ புத்தகங்கள் கூறுகிறபடி, பேதுரு, இயேசுவோடு இருந்த மூன்று சீடர்களில் ஒருவராக இருந்தார் (மற்ற இரண்டு பேரும் யாக்கோபும் யோவானும் ஆவர்). 2 பேதுருவின் ஆசிரியர், இரத்தசாட்சியாக மரிக்கவேண்டும் என்ற உண்மையை (1:14) அவர் குறிப்பிடுகிறார் என்பதையும்; யோவான் 21:18-19 ல் இயேசு, பேதுரு கைதியாகக் கட்டப்பட்டப்பின் இரத்தசாட்சியாக மரிப்பார் என்று முன்னறிந்தார்.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 65-68 க்கு இடையில் எழுதப்பட்டது.
இதை அப்போஸ்தலன் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களில் ரோமிலிருந்து எழுதியிருக்கலாம்.
 
யாருக்காக எழுதப்பட்டது
முதல் பேதுருவைப் போலவே இது வடக்கு ஆசியா மைனரிலிருந்த அதே வாசகர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம்.
 
எழுதப்பட்ட நோக்கம்
கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையை நினைவூட்டுவதற்காக (1:12-13, 16-21), விசுவாசத்தின் எதிர்கால தலைமுறையினரை அறிவுறுத்துவதற்காக (1:15) அதன் அப்போஸ்தல பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதற்காக (1:13-14; 2:1-3) பேதுரு எழுதினார், தனது நாட்கள் குறுகியது என்று அவர் அறிந்ததினாலும், தேவ மக்கள் அநேக ஆபத்துக்களை சந்திக்கிறதினாலும் பேதுரு இதை எழுதினார். தேவனுடைய வருகையை மறுதலிக்கிற கள்ளப் போதகர்களின் வருகையைக் குறித்து தன்னுடைய வாசகர்களை எச்சரிக்கும்படி பேதுரு எழுதினார் (2:1-22) (3:3-4).
 
மையக் கருத்து
தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை
 
பொருளடக்கம்
1. வாழ்த்துரை — 1:1, 2
2. கிறிஸ்தவ நல்லொழுக்கங்களில் வளர்ச்சியடைதல் — 1:3-11
3. பேதுருவின் செய்தி நோக்கம் — 1:12-21
4. தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை — 2:1-22
5. கிறிஸ்துவின் வருகை — 3:1-16
6. முடிவுரை — 3:17, 18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.