வேதாகம வரலாறுகள்

கொலோசெயர்

ஆசிரியர்
கொலோசெயர் பவுலின் உண்மையான கடிதம் ஆகும் (1: 1). ஆரம்பகால சபையில், ஆசிரியரின் விஷயத்தில் பேசும் அனைவருமே பவுல் தான் ஆசிரியர் என்று தெரிவிக்கிறார்கள். கொலோசேயிலுள்ள சபை பவுலினால் நிறுவப்படவில்லை. பவுலின் சக ஊழியர்களில் ஒருவரான எப்பாப்பிரா முதலில் கொலோசெயில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருந்தார் (4: 12, 13). கள்ளப் போதகர்கள் கொலோசெக்கு விசித்திரமான, புதிய உபதேசங்களோடு வந்திருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவத்துடன் புறசாதி தத்துவம் மற்றும் யூத மார்க்கத்தையும் கலந்தார்கள். கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதைக் காட்டுவதன் மூலம் இந்தப் பொய் போதனைகளை பவுல் எதிர்த்தார். கொலோசெயர் நிருபமானது, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நிருபம் என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை வகிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60 க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
ரோமில் முதலாம் முறையாக சிறைச்சாலையில் இருக்கும்போது பவுல் அதை எழுதியிருக்கலாம்.
 
யாருக்காக எழுதப்பட்டது
“கொலோசெயாவில் கிறிஸ்துவில் பரிசுத்தவான்களுக்கும் உண்மையுள்ள சகோதரர்களுக்கும்” (1: 1-2) என்று எழுதப்பட்டபடி பவுல், எபேசுவிலிருந்து நூறு மைல் தூரத்திலிருந்த, லீகஸ் பள்ளத்தாக்கின் முக்கிய இடத்தில் இருந்த கொலோசேயிலுள்ள சபைக்கு எழுதினார். அப்போஸ்தலன் சபையை ஒருபோதும் சந்திக்கவில்லை (1: 4; 2: 1).
 
எழுதப்பட்ட நோக்கம்
கொலோசெயில் எழுந்திருந்த ஆபத்தான கருத்துக்களுக்கு எதிரான அறிவுரை கொடுப்பதற்காக பவுல் எழுதினார்: “அனைத்து படைப்புகளுக்கும் (1: 15; 3: 4), கிறிஸ்துவின் முழுமையான, நேரடி, தொடர்ந்து மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியதன் மூலம், (3: 5; 4: 6) கிறிஸ்துவின் கண்ணோட்டத்தில் வாழ்வதற்காகவும், ஒழுக்கமான கிறிஸ்தவ வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும், தவறான போதகர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக விசுவாசத்தில் அவர்கள் உறுதியையும் பராமரிக்கவும் சபையை ஊக்குவிக்கவும் (2: 2-5) எழுதினார்.
 
மையக் கருத்து
கிறிஸ்துவின் மேலாதிக்கம்
 
பொருளடக்கம்
1. பவுலின் வணக்கவுரையும் ஜெபமும் — 1:1-14
2. கிறிஸ்துவுக்குள் உள்ள நபருக்கு பவுலுடைய உபதேசம் — 1:15-23
3. தேவனின் திட்டத்திலும் நோக்கத்திலும் பவுலின் பங்கு — 1:24-2:5
4. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கை — 2:6-15
5. பவுல் மதவெறி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார் — 2:16-3:4
6. கிறிஸ்துவில் உள்ள புதிய மனிதனின் விளக்கம் — 3:5-25
7. பாராட்டுதல், இறுதி வாழ்த்து — 4:1-18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.