வேதாகம வரலாறுகள்

யோவேல்

தலைப்பு: 

கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட் (Vg.) எபிரேய மேசோரெடிக் (MT) உரையினைப் பின்பற்றி, தேவனிடத்தில் இருந்து தீர்க்கதரிசன செய்திதனைப் (1:1) பெற்ற தீர்க்கதரிசி யோவேலின் பெயரையே இதன் தலைப்பாக தந்துள்ளனர்.  இந்த பெயரின் அர்த்தம் “கர்த்தரே தேவன்”. இப்புத்தகம் பழைய ஏற்பாட்டில் உள்ள நபர்கள் 12 பேருக்கும் மேலானோரைக் குறிப்பிடுகிறது. யோவேலின் பெயர் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை (அப். 2:16 -21) குறிப்பிடப்படுகிறது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

“பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான  கர்த்தருடைய  வசனம் (1:1)” என்று தன்னைத் தான் அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த அறிமுகத்தைத் தவிர வேறு எந்த விஷயமும் தீர்க்கதரிசியைக் குறித்து குறிப்பிடப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் இவரது தகப்பனார் பெயரும் சொல்லப்படவில்லை. தேவாலயபலி செலுத்துதலில் இவர் மிகுந்த வைராக்கியத்தை காட்டினபோதிலும் (1:9; 2:13-16), போதகர் மற்றும் விவசாய வாழ்க்கை இவருக்கு பரிச்சயமாக இருந்தது மற்றும் ஆசாரியர்களிடம் இருந்து இவர் பிரிந்து இருந்தததைக் காணும் போது இவர் லேவியராக இருந்திருக்கக் கூடும் என தெரிகிறது. இவர் ரூபன் கோத்திரத்தில் இருந்து வந்தவர், ரூபன் மற்றும் காத் தேசம், சாகடலின் வடகிழக்கில் இருக்கிற பெத்தோம் அல்லது பெத்லகேம் ஊரைச் சேர்ந்தவர் என வேதாகமத்தில் இல்லாத பாரம்பரியம் கூறுகிறது. ஆனால், இவரது தீர்க்கதரிசன வார்த்தைகளப் பார்க்கும் போது, அதில் அன்னியர் போல் இவர் நடந்து கொள்ளாததால், இவர் எருசலேமுக்கு அருகில் இருக்கும் யூதேயாவில் இருந்து வந்தவர் என முடிவு செய்யலாம். 

இப்புத்தகம் வேதாகம புத்தகங்களின் வரிசையில் எங்கு அமைந்துள்ளது, வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் மொழியியல் கூறுகளை வைத்து மட்டுமே  இந்த புத்தகம் எந்த காலத்தில் எழுதப்பட்டது என்பதில் ஒரு முடிவுக்கு வரலாம். 1) பின்நாள் உலகப் பேரரசுகளான ஆன (அசீரியா, பாபிலோன் அல்லது பெர்சியா குறித்து எந்த குறிப்பும் இப்புத்தகத்தில் இல்லை; 2) யோவேலின் எழுத்து நடை, ஓசியா மற்றும் ஆமோஸ்  போல இருக்கிறது அல்லாமல், சிறையிருப்பில் இருந்து சொந்த தேசத்திற்கு திரும்பிய பின் எழுந்த தீர்க்கதரிசிகளின் எழுத்து நடைபோல் இல்லை; மற்றும் 3) இவருக்கு  முன் இருந்த  ஓசியா மற்றும் ஆமோஸின் (யோவேல் 3:16 / ஆமோஸ் 1:2; யோவேல் 3:18 / ஆமோஸ் 9:13) வாய்மொழிக்கு இணையானதாக இவருடைய வார்த்தை இருக்கிறபடியால், இந்த புத்தகம் யோவாஸ் ராஜா (கி.மு. 835-796) காலத்தில் - கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பொருத்தமானதாக இருக்கிறது. ஆனாலும், இப்புத்தகம் எழுதப்பட்ட தேதியை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை என்பது - இப்புத்தகத்திற்கு விளக்கம் அளிப்பதில் எந்தவித பாதிப்பையும் அதிகமாக ஏற்படுத்தவில்லை. யோவேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் காலங்களுக்கு அப்பாற்பட்டவை, இப்புத்தகத்தின் உபதேசங்கள் எந்த காலத்திற்கும் பொருத்தமானதும் பயன்படுத்த வல்லதாகவும் இருக்கின்றன. 

பின்னணி மற்றும் அமைப்பு

தீரு, சீதோன் மற்றும் பெலிஸ்தியா இஸ்ரவேல் தேசத்திற்குள் அடிக்கடி ஊடுருவல் மேற்கொண்டனர் (3:22). நீண்டகால வறட்சி, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பசுமை நிறைந்த தேசத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி, கடுமையான பொருளாதார அழிவை உண்டாக்கியது (1:7-20), இதனால், தென் தேசத்து ராஜ்யம் பலவீனமாகியது. இந்தபேரழிவு தேவனுடைய நியாயதீர்ப்பிற்குரிய விளக்கமாக யோவேல் தீர்க்கதரிசிக்கு இருந்தது. பாவத்திற்கு நியாயதீர்ப்பாக வெட்டுக்கிளிகளின் சேதத்தை காணும் போது, எதிர்வரும் ”கர்த்தரின் நாளின்” நியாயத்தீர்ப்புகள் இவற்றைக்காட்டிலும் கடுமையானதாக இருக்கும். அந்நாளில், தேவன் அவரது சத்துருக்களை நியாயம் தீர்த்து, தம்மிடம் பற்றுதியாக இருப்பவரை ஆசீர்வதிப்பார். இந்த நியாயதீர்ப்பில் இது என்று எந்தவொரு பாவமும் குறிப்பிடப்படவில்லை, அல்லது யூதா விக்கிரகாரதனைக்காக கண்டிக்கப்படவும் இல்லை. ஆனாலும், கசப்பான அலட்சியத்துடன் இருக்கும் ஜனங்களை உண்மையான மனந்திரும்புதலுக்கு தீர்க்கதரிசி அழைக்கிறார்; எப்படி என்றால் “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய  கர்த்தர்  இடத்தில் திரும்புங்கள் எனக்கூறி அழைக்கிறார் (யோவேல் 2 : 13).

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

”கர்த்தருடைய நாள்” என்பதே யோவேல் புத்தகத்தின் கருப்பொருள். யோவேலின் செய்தியின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவிச் செல்வதால், பழைய ஏற்பாடு முழுவதிலும் அதிகமாக இக்கருத்தை தக்கவைத்துள்ள புத்தகமாக யோவேல் இருக்கிறது (1:15; 2:1; 2:11; 2:31; 3:14). இந்த கருத்து 8 ஆசிரியர்களால் 19 முறை எடுத்தாளப்பட்டிருக்கிறது (ஏசா.2:12; 13:6,9; எசே.15:5; 30:3; யோவேல் 1:15; 2:1; 2:11; 2:31; 3:14; ஆமோஸ் 5:18 [2x], 20; ஒபதியா15; செப். 1:7, 14 [2x]; செப்.14:1; மல்கியா 4:5). காலவரிசைப்படியான ஒரு காலத்தினை இந்த வார்த்தைகள் குறிப்பிடவில்லை; கர்த்தர் அவர் ஒருவருக்கு மட்டுமே உரிய கோபாக்கினையும் நியாயத்தீர்ப்புமான நாள் ஒன்றினை குறிப்பிடுகின்றது எனலாம். தேவனுடைய குணாதிசயங்களான, வல்லமை, ஆற்றல் மற்றும் பரிசுத்தம் - தேவனுடைய சத்துருக்களுக்கு திகிலூட்ட வெளிப்படும்  பிரத்தியேகமான நாள் – கர்த்தருடைய நாள். கர்த்தருடைய நாள் என்பது எப்பொழுதும் கடைசிகால சம்பவங்களை மட்டும் குறிப்பதாக இல்லை. எசே.13:5-ல் நாம் காண்பது போல் பாபிலோனியர் வெற்றி பெற்று எருசலேமை அழித்துப் போட்ட நாள் போன்று, வரலாற்றில் தீர்க்கதரிசனம் நிறைவேறின நாட்களையும் குறிக்கும். தீர்க்கதரிசனங்களில் நாம் பொதுவாக எதிர்காலத்தில் என்ன/எப்படி நிறைவேறும், என்பதை சமீபமான காலத்தில் நிறைவேறின தீர்க்கதரிசனத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 

கர்த்தருடைய நாள் என்பது அதிக அளவில் நிலநடுக்க தொந்தரவுகள் (உதாரணம் 2:1-11; 2:31; 3:16) கொடூரமான தட்பவெட்பநிலை (எசே. 13:5), மேகங்கள் சூழ்ந்த அடர்ந்த இருள் (2:2; செப்பனியா 1:7) பிரபஞ்ச எழுச்சி (2:3,30) மற்றும் கர்த்தருடைய நாள்  பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும் (2:11). அந்த நாள் 1:15-ல் நாம் காண்பது போது ”அது சங்காரம்போல சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது”. யோவேல் புத்தகத்தில், இரண்டாம் பாதி கர்த்தருடைய நாளுக்கு பின், தொடர்ந்து வரும் நாட்களில் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் குறித்து பேசுகிறது. 2:28,29 வசனங்கள் “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; 2:28,29 வசனங்கள் - அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள் என்ற வாக்குத்தத்தத்தை அளிக்கிறது. எலியாவின் வருகையைக் குறித்துபேசுவது கிறிஸ்துவின் தரிசனத்தை நினைகூருதலாக (Epiphany) இருக்கிறது. இது – மீட்டெடுக்கப்படுதலையும் நம்பிக்கையையும் ஜனங்களுக்குத் தருகிறது (மல்கியா 4:5,6).  கர்த்தருடைய நாளின் விளைவாக, பொருளாதார ஆசீர்வாதாங்கள், பலன்கள் நிறைந்த வாழ்க்கை மற்றும் செழிப்பு உண்டாயிருக்கும் ( 2:221; 3:16-21). அந்த நாள் பாவிகள் மீது நியாயத்தீர்ப்பு செலுத்தப்படும் நாள் அதன் தொடர்ச்சியாக மனம் திரும்பினோர் மீது ஆசீர்வாதங்களும், தேவன் அவருடைய ஜனத்தாருடன் உடன்படிக்கையினை மீண்டும் உறுதிபடுத்திய நாள் ஆகவும் அந்நாள் இருக்கும்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

”பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது என அதிகாரம் 1 விவரிக்கும் தேசத்தின் சங்காரத்தை நீங்கள் எடுத்து வாசித்தால் நலமாகும். அதிகாரம் 2-ல் புதிய விளக்கத்தை வாசிப்பவர் காணலாம். இங்கு வெட்டுக்கிளிகளின் சேதாரத்தைக் காட்டிலும் மேலாக சேதத்தினையும் மனம்திரும்பவேண்டியதன் உடனடி அவசியத்தையும் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசி சுட்டிக்காட்டும் உருவகங்கள்: உதாரணமாக, அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது (2:4); அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும் (2:7) போன்றவற்றை இன்னும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின் சேதாரத்தை எடுத்துக்காட்ட பயன்படுத்துகிறார் கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? (2:11) எனக் கேட்கும் அளவிற்கு அது கொடியதும் பயங்கரமுமான நாள் என்று அறிகிறோம். 

சிலர், அப்போஸ்தலர் 2:16-21-ல் பேதுரு மேற்கோள் காட்டும் யோவேலில் (2:28-32) உள்ள வசனங்கள், கி.பி. 70-ல் எருசலேம் தகர்க்கப்பட்ட நாளில் நிறைவேறிற்று என்றனர். மற்றும்ம் சிலர், கர்த்தரின் பயங்கரமும் கொடியதுமான நாள் இன்னும் நிறைவேறவில்லை அது இறுதி நாளில் தான் நிறைவேறும் என்கின்றனர்; இறுதி நாட்கள் என கர்த்தருடைய நாளைத்தான் யோவேல் குறிப்பிடுகிறார் என்பதை நாம் வசனத்தை காணும்போது புரிந்துகொள்கிறோம். பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டது, இவ்வார்த்தைகள் நிறைவேறின நாட்கள் அல்ல; இவ்வார்த்தைகள் மேசியாவின் ராஜ்யத்திற்குப் பின் வரும் கர்த்தருடைய நாட்கள், ஊற்றப்படவுள்ள பரிசுத்த ஆவியாவனவரின் வல்லமை மற்றும் செயல்களுக்கு முன்னோட்டமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

சுருக்கம்

வசனம் 1:1-ஐத் தொடர்ந்து புத்தகத்தின் உள்ளடக்கங்கள் 3 அடிப்படை பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பிரிவில் (1:2–20), தீர்க்கதரிசி தன்னுடைய காலத்து கர்த்தருடைய நாளைக் குறித்து விவரிக்கிறார். தேசம் வெட்டுக்கிளிகளாலும் வறட்சியினாலும் மிகப்பெரிய அளிவில் அழிவை சந்தித்திருந்தது. பேரழிவின் விளக்கம் (1:2-12) ஜனங்கள் மத்தியில் வருத்ததிற்கும் சீர்திருத்தத்திற்கும் அழைப்பை விடுகிறது (1:13-20). இரண்டாவது பிரிவு (2:1-17), வரலாற்றில் வெட்டுக்கிளிகளால் வந்த பேரழிவை குறித்து பேசிய அதிகாரம்; ஒன்றிலிருந்து கர்த்தருடைய நாளில் உண்டாகும் கடைசிகால சம்பவங்களாக மாறும் முறையை குறித்து வசனம் 2:18 – 3:21 பேசுகிறது. வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பேரழிவிற்கு ஆட்பட்ட நிலையின் பின்னணியில், தீர்க்கதரிசி, உயர்ந்த ஆவலுடன், மிகவும் தெளிவாக மற்றும் வலியுறுத்தி வரவிருக்கும் கர்த்தரின் வருகையை குறித்து (2:1-11) பேசுகிறார். உடன் வெளிப்படையாக தெரியும் வார்த்தைகளை உபயோகித்து, விடாப்பிடியாக மனந்திரும்புதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார் (2:12-17).

மூன்றாம் பிரிவில் (2:18-3:21) கர்த்தர் நேரடியாகப் பேசுகிறார், அவர் தமது ஜனங்களிடம், அவரது பிரசன்னம் அவர்கள் மத்தியில் இருக்கிறது என்ற நிச்சயத்தைத் தருகிறார் (2:27; 3:17,21). இந்த இடத்தில் மனந்திரும்புதல் கோரப்பட்டது என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது (2:!2-17) எனவும், அவர்களுடைய ஜெபத்திற்கு தேவன் அளித்த பதில் இது என விவரிக்கிறது (2:18,19 முற்பகுதி). யோவேல் 2:18-20 புலம்பலும், ஐயோ என்ற நிலையில் இருந்தும் ஏற்படும் மாற்றத்தை – தேவனுடைய பிரசன்னம் அவர்கள் மத்தியில் இருக்கின்றது என்பதற்கான தெய்வீக நிச்சயத்தையும் குறித்தும், 2:19பின்பகுதி, 20 இந்த திருப்பத்தின் சாராம்சத்தை அறிமுகம் செய்யும் வசனங்களாக இருக்கின்றன. மனம் திரும்பினவர்களுக்கு மூன்று வாக்குதத்தங்களை தேவன் தருகிறார்.  1. அவர்கள் தேசத்திற்கு தெய்வீக ஷேமம்; 2. அவர் ஜனங்கள் நடுவில் பொருத்தமான அவரது பிரசன்னம் குறித்த நிச்சயம்; 3. அவருடைய ஆவியை ஊற்றுவதால் உண்டாகும் ஆவிக்குரிய மீட்டமைப்பு. இதனை குறித்து இந்த வசனங்களில் நாம் வாசித்து பயன்பெறலாம். (யோவேல் 2:21-27; 2:28-32; 3:1-21).

1. நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. 

2.நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.  

3.அதற்கு பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; 

I. வரலாற்றுப்படி: கர்த்தருடைய நாளின் விளக்கம்  (1:1-20)
அ. செய்தியின் ஆதாரம் (1:1)
ஆ. அழிவினைக் குறித்து சிந்திக்க கட்டளை (1: 2 - 4)
இ. அழிவின் பூரணம் (1:5 -12)II. (4:1 – 6:3)
ஈ. அழிவின் தீவிரத்தை உணர்ந்து மனம் திரும்ப அழைப்பு (4:1 -7:28)
 
II. கர்த்தருடைய நாள் விவரிக்கப்படுகிறது : இடைநிலை காலம் (2:1-17)
அ. எச்சரிக்கை மணி ஒலித்தல். (2:1)
ஆ. படை -படையெடுத்து வருதல் (2:2-11)
இ. மனம் திரும்ப அறிவுரை (2:12-17)
 
III. கர்த்தருடைய நாள் விவரிக்கபடுகிறது : (காலயியல் அடிப்படையில்) (2:18 – 3:21)
அ. அறிமுகம் (2:18-20)
ஆ. பொருட்கள் திரும்ப மீட்டமைக்கப்படுதல் (2:21-27)
இ. ஆவிக்குரிய மறுமலர்ச்சி (2:28–32)
ஈ. தேசம் திரும்ப பழைய நிலைக்கு மீட்டுஅமைக்கப்படுதல் (3:1-21)
 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.