வேதாகம வரலாறுகள்

பிரசங்கி

ஆசிரியர்
இந்த புத்தகம் நேராக ஆசிரியரைக் குறிப்பிடவில்லை. தன்னை பிரசங்கி என்று 1:1 ல் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன்னை தாவீதின் குமாரனான எருசலேமின் இராஜாவாகிய பிரசங்கி என்று சொல்லுகிறான். எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து அனேக நீதிமொழிகளை சேர்த்தேன் என்கிறான் (பிரசங்கி 1:1, 16; 12:9). இஸ்ரவேலை ஆட்சி செய்ய தாவீதுக்கு பிறகு சிங்காசனத்தில் சாலோமோன் உட்கார்ந்தான். (1:12) சாலோமோன் தான் ஆசிரியர் என்று சில காரியங்கள் இந்த புத்தகம் ஆதாரம் தருகிறது. சாலோமோன் மரணத்திற்கு பிறகு சில பகுதிகள் வேறு சிலரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 940 க்கும் 931 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம் சாலோமோனின் கடைசி நாட்களில், எருசலேமில் எழுதப்பட்டது.
 
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் மக்களுக்கும், வேதம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
 
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம் ஒரு சரியான எச்சரிப்பை நமக்கு தருகிறது. நோக்கமில்லாமல், தேவபயமில்லாமல் வாழ்வது, மாயையையும், காற்றை பின்தொடர்வதுபோல் இருக்கிறது. நாம் இன்பத்தை, பணத்தை, ஞானத்தை, புதிய காரியங்களை ஆராய்வதில், வாழ்ந்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு. கடைசியில் நாம் மாயையில் வாழ்ந்தோம் என்று எண்ணமே நமக்கு தோன்றுகிறது. நாம் தேவனுக்கு வாழும்போதுதான், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
 
மையக் கருத்து
தேவனைத் தவிர எல்லாம் மாயையே.
 
பொருளடக்கம்
1. முன்னுரை — 1:1-11
2. வாழ்க்கையின் பலபாகங்களும் மாயைதான் — 1:12-5:7
3 தேவனுக்கு பயந்து நடக்கவேண்டும். — 5:8-12:8
4 காரியத்தின் முடிவு — 12:9-14

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.