வேதாகம வரலாறுகள்

சாமுவேல் (1 மற்றும் 2)

தலைப்பு: 

பழைய எபிரேய கையெழுத்துப்பிரதிகளில் முதல் மற்றும் இரண்டாம் சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாகத்தான் கருதப்பட்டது. பின்நாட்களில் கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் செப்டுவாஜிண்ட் (LXX)-ல் இரண்டு புத்தகங்களாக பிரித்தனர். இப்பிரிவினை லத்தீன் வுல்கேட் (Vg), ஆங்கில மொழிபெயர்ப்புகள் மற்றும் நாகரீக எபிரேய மொழிபெயர்ப்புகளிலும் காண்கிறோம். இஸ்ரவேல் தேசத்தில் ராஜாக்களை அபிஷேகித்து அரசாட்சி ஏற்படுத்த தேவன் எடுத்துப் பயன்படுத்தின “சாமுவேல்” பெயரை - ஒரே புத்தகமாக இருந்த பழைய எபிரேய கையெழுத்துப்பிரதிகள் தலைப்பாக இட்டிருந்தன. பின்னர், எபிரேய நூல்களும் ஆங்கில பதிப்புகளும் பிரிக்கப்பட்ட புத்தகங்களை 1 மற்றும் 2 சாமுவேல் என அழைக்க ஆரம்பித்தன. LXX - இப்புத்தகங்களுக்கு “முதல் மற்றும் இரண்டாம் ராஜ்ஜியத்தின் புத்தகங்கள்” எனவும் வுல்கேட் “முதல் மற்றும் இரண்டாம் ராஜாக்கள்” என்றும் பெயரிட்டன. இதனால் அடுத்து வரும் 1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகங்களுக்கு “மூன்றாம் மற்றும் நான்காம் ராஜாக்கள்” என்ற பெயர் வழங்கப்பட்டது.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

யூதர்களின் பாரம்பரியம் “சாமுவேல்” புத்தகத்தை எழுதியது, சாமுவேல் எனக் குறிப்பிடுகிறது. தமிழ் வேதாகத்தில் 1 நாளா 29:30-ல் நாம் பார்க்கிற வார்த்தைகளின் அடிப்படையில் சாமுவேல், நாத்தான் மற்றும் காத் சேர்ந்து எழுதியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் சாமுவேல் ஆசிரியராக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவரது மரணம் 1சாமுவேல் 25:1 ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தாவீதின் ஆட்சிகால சம்பவங்கள் நடைபெறுவதற்கும் முன்னமே உள்ள காலகட்டத்தைப் பற்றியது. மேலும், நாத்தான் மற்றும் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளாக தாவீதின் நாட்களில் இருந்தனர். எனவே சாமுவேல் புத்தகம் எழுதும்போது இவர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த தீர்க்கதரிசிகளின் பிரபந்தங்களில் உள்ள தகவல்கள் 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகம் எழுத பயன்பட்டிருக்கலாம். உண்மையில் சாமுவேல் புத்தகம் எழுதிய மனிதர் யார் என்பது தெரியாததாக இருக்கிறது. இப்புத்தகம் பெயர் அறியப்படாத ஆசிரியர் எழுதியதாகவே நம் கரங்களில் இருக்கிறது. இதனை எழுதிய ஆசிரியர் கர்த்தருக்கென்று பேசுகிறார். மேலும் சொல்லப்படும் சம்பவங்களுக்கு தெய்வீகத்தன்மை வாய்ந்த விளக்கத்தை அவர் தருகிறார்.

சாமுவேல் புத்தகத்தில் அது தொகுத்து எழுதப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை. இஸ்ரவேல் மற்றும் யூதா என ராஜ்ஜியங்கள் பிரிக்கப்பட்ட கி.மு. 931-க்கு பின் எழுதப்பட்டது என்பது மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறது. காரணம், இஸ்ரவேல் வேறு யூதா வேறு என்று பிரித்து தெளிவான வேதாகம குறிப்புகள் பல பகுதிகளில் காணப்படுகின்றன (1சாமு.11:8; 17:52; 18:16; 2சாமு.5:5; 11:11; 12:8; 19:42-43; 24::9). “சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது” என நாம் 1சாமு 27:6-ல் காண்பது சாலமோன் காலத்திற்குப் பின் இப்புத்தகம் எழுதப்பட்டது என்பதற்கான மிகத்தெளிவான ஆதாரம். எவ்வளவு காலத்திற்குப்பின் எழுதப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரம் இல்லை. ஆனாலும், எபிரேயரில் எழுதப்பட்ட புனித புத்தகங்கள் என்ற வரிசையில் - யோசுவா, நியாயாதிபதிகள், 1 மற்றும் 2 ராஜாக்கள் உடன் 1 மற்றும் 2 சாமுவேல் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை தீர்க்கதரிகளின் புத்தகங்கள் ஓர் அணியில் சேர்க்கப்படுமானால், சாமுவேல் புத்தகம் இஸ்ரவேலர் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் (கி.மு 560-540) எழுதப்பட்டிருக்கும். ஆனாலும், சாமுவேல் புத்தகத்தின் எழுத்து நடை ராஜாக்கள் புத்தகத்தைவிட வேறுபட்டு இருக்கிறபடியால், ராஜ்ஜியங்கள் பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட காலகட்டத்திற்கு முன்பு எழுதப்பட்டிருகலாம் என கருதப்படுகிறது (கி.மு. 931 -722). பின்நாட்களில் முந்தையநாட்கள் தீர்க்கதரிசிகளின் தொகுப்புடன் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

பிண்ணனி மற்றும் அமைப்பு

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள், இஸ்ரவேல் தேசத்தின் மைய்ய மலைப்பகுதிகளில் நிறைவேறி இருக்க வேண்டும். இஸ்ரவேல் தேசம் என்பது வடக்கே எப்பிராயீம் மலைத்தேசத்தில் (1சாமு.1:1; 9:4) இருப்பது தெற்கே யூதா மலைப்பிரதேசம் (யோசுவா 20:7, 21:11) இடைப்பட்ட 90 மைல்கள், கிழக்கில் இருந்து மேற்கே 15 லிருந்து 35 மைல்கள் தூரம் இடைப்பட்ட பகுதி ஆகும். மைய்ய மலைப்பகுதிகள் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 1,500 லிருந்து 3,300 அடி வரை இருக்கும். 1 மற்றும் 2 சாமுவேலின் புத்தகங்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டணங்கள், சீலோ - ஏலியின் வீடு மற்றும் ஆசரிப்புக் கூடாரம் இருந்த இடம்; ராமா - சாமுவேலின் சொந்த பட்டணம். கிபியா - சவுலின் தலைநகரம்; பெத்லகேம் - தாவீது பிறந்த ஊர்; எபிரோன் - தாவீது யூதாவை அரசாண்ட நாட்களில் அவனது தலைநகரம். மற்றும் எருசலேம் - இறுதியான “தாவீதின் நகரம்”.

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் சாமுவேல் பிறந்த வருடம் கி.மு. 1105-ல் (1சாமு.1:1-28) இருந்து தாவீது தன் கடைசி வார்த்தைகள் (2சாமு.23:17) பேசிய வருடம் கி.மு. 971 வரை உள்ள நாட்களில் இந்த சம்பவங்கள் நிறைவேறின. ஆக, இந்த புத்தகம் ஏறக்குறைய 135 வருடங்கள் வரலாற்றை விவரிக்கிறது. இந்த ஆண்டுகளில், இஸ்ரவேல், ”நியாயதிகளின்” விசாரிப்பின் அடியில் ஒரு தளர்வாக பின்னப்பட்ட கோத்திரமாக இருந்து - மறுரூபமடைந்து மையப்படுத்தப்பட்ட ராஜாவின் அரசாட்சிக்குள் ஒன்று சேர்ந்த தேசமாக மாறி இருந்தது. அவர்கள் கி.மு.1105 -1030 வரை சாமுவேலை நோக்கிப் பார்த்தனர், பின்னர் கி.மு.1050 -1011 வரை சவுல் ஆட்சி செய்தார், அதற்கடுத்து தாவீது கி.மு.1011-971 வரை ஒன்று சேர்ந்த ஏகாதிபத்திய இராஜ்ஜியத்திற்கு ராஜாவாக வீற்றிருந்து ஆட்சி செய்தார்.

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

 1சாமுவேல் புத்தகம் ஆரம்பிக்கும் வேளையில், இஸ்ரவேலர் ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகவும் மோசமான இடத்தில் இருந்தனர். ஆசாரியத்துவம் சிதைந்து போய் இருந்தது (1சாமு.2:12-17; 22-26). உடன்படிக்கைபெட்டி ஆசரிப்பு கூடாரத்தில் இல்லை (1சாமு.4:3-7:2). இஸ்ரவேலர் விக்கிரகாரதனையில் ஈடுபட்டிருந்தனர் (1சாமு.7:3,4). நியாயாதிபதிகள் நேர்மையற்றவர்களாக இருந்தனர் (1 சாமு.8:2,3). தேவபயத்துடன் இருந்த சாமுவேல் (1சாமு.12:23) மற்றும் தாவீதினால் (1 சாமு.13:14) நிலைமை மாறியது. இரண்டாம் சாமுவேல் புத்தகம் “கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின் மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது” (2 சாமு.24:25) என முடிவடைகிறது.

1 மற்றும் 2 சாமுவேல் விவரிக்கும் ஆண்டுகளில் பண்டைய உலகில் இருந்த சாம்ராஜ்ஜியங்கள் பெலவீனப்பட்டு இருந்தன. எகிப்து அல்லது மெசெபோத்தாமியா வல்லரசுகள், பாபிலோன் மற்றும் அசீரியா – ஆகிய எந்தவொரு தேசமும் இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இல்லை. இஸ்ரவேலருக்கு விரோதிகளாக - அதிகப்படியாக இருந்த இரண்டு தேசங்கள் – மேற்கில் பெலிஸ்தியர் (1சாமு.4:7, 13; 14; 17;23; 31; 1சாமு.5) மற்றும் கிழக்கில் அம்மோனியர்கள் (1சாமு.11: 2சாமு.10-12). அதிக எண்ணிக்கையிலான பெலிஸ்தியர் - ஏஜியன் தீவுகள், ஆசியா மைனர் பகுதிகளில் இருந்து 12-ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்திருந்தனர். எகிப்திற்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது அவர்கள் கானான் தேசத்து மத்தியதரைக்கடல் பகுதியில் ஏற்கெனவே இருந்த பெலிஸ்தியருடன் சேர்ந்து குடியேறினர். 

பெலிஸ்தியர் இரும்பை பயன்படுத்துவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இது அவர்களை இராணுவ மற்றும் பொருளாதார பெலத்தில் இஸ்ரவேலரைக் காட்டிலும் மேலாக வைத்தது (1சாமு.13:19-22). அம்மோனியர்கள் லோத்தின் வழிவந்தவர்கள் (ஆதி.19:38). இவர்கள் ஜோர்டான் பீடபூமி பகுதியில் வாழ்ந்தவர்கள் தாவீது இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றியிருந்த தேசங்களுடன் சேர்ந்து (2சாமு.8:2-14), பெலிஸ்தியர் (2சாமு.8:1) மற்றும் அம்மோனியரையும் மேற்கொண்டார் (2சாமு.12:29-31).

1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் நான்கு இறையியல் கருப்பொருட்கள் மேலோங்கி நிற்கின்றன. முதலாவது, தாவீதின் உடன்படிக்கை, அன்னாளின் ஜெபத்தில் சொல்லப்படும் “அபிஷேகிக்கப்பட்ட” ராஜா (1சாமு. 2:10) மற்றும் தாவீதின் பாடல்களை, (2சாமு:22:51) குறிப்பாக எடுத்துக்கொண்டு இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தேவனுக்கு விரோதமாக எழும்பும் தேசங்களை ஜெயிக்கும் ராஜாவாகிய மேசியாவை குறிக்கிறது (ஆதி.49:8-12; எண்.24:7-9; 17-19). கர்த்தருடைய வாக்குதத்தத்தின்படி, தாவீதின் வம்சத்தில் மேசியா வருவார்; வந்து தாவீதின் சிங்காசனத்தை சதாகாலத்திற்கும் நிலைப்படுத்துவார் (2 சாமு.7:12-16). சாமுவேல் புத்தகத்தில் குறித்து வைக்கப்பட்டுள்ள தாவீதின் வாழ்க்கை குறிப்புகள் எதிர்காலத்தில் அவரது வம்சவழியில் வரும் - அவரின் குமாரனுக்கு (அதாவது கிறிஸ்துவிற்கு ) நிழலாட்டமாக இருக்கின்றன. 

இரண்டாவது, தேவனுடைய அரசாட்சி இப்புத்தகங்களில் மிகத் தெளிவாக காணப்படுகிறது. ஒரு உதாரணம், அன்னாளின் ஜெபம் கேட்டு பதிலாக சாமுவேல் பிறந்தது (1சாமு.9:17; 16:12,13) கூடவே, தாவீது இஸ்ரவேலரை ஆட்சி செய்ததை வைத்துப் பார்க்கும்போது, தேவனுடைய திட்டத்தை எதுவும் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது. 

மூன்றாவது, தேவன் நியமித்த பணிகளை செய்யும் மனுஷருக்கு அதிகாரம் அளிப்பதில் பரிசுத்த ஆவியானவர் இறங்கிச் செயல்படுவதைக் காண்கிறோம். சவுலும், தாவீதும் ராஜாக்களாக அபிஷேகிக்கப்பட்டவுடன் கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள் இருவர் மீதும் இறங்கினதைக் காண்கிறோம் (1சாமு.10:10; 16:13). பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களுக்கு தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைத்தது (1சாமு.10:6), உடன் யுத்தத்தில் அவர்களுக்கு ஜெயத்தைத் தந்தது. (1சாமு.11:6).

நான்காவது, சாமுவேல் புத்தகங்கள் தனிப்பட்ட நபர் அல்லது தேசத்தின் பாவத்தினால் விளையும் விளைவுகளை நிரூபிக்கிறது. ஏலி மற்றும் அவனது குமாரர்களின் பாவங்கள் அவர்களின் மரணத்திற்கு காரணமாகியது (1சாமு.2:12-17; 22-25; 3:10-14; 4:17-18). உடன்படிக்கைப் பெட்டியினிடத்தில் அதற்குரிய பயபக்தியை செலுத்தாதபடியால், அனேக இஸ்ரவேலர்கள் மரித்துப் போக காரணமானது எனவும் காண்கிறோம் (1சாமு.6:19; 2சாமு.6:6,7). சவுலின் கீழ்ப்படியாமை, இஸ்ரவேலின் ராஜ்ஜியபாரத்தில் இருந்து, அவரை நிராகரிக்கப்பண்ணி, கர்த்தரை நியாயம் தீர்க்க்கும்படிச் செய்தது (1சாமு.13:9; 13:14; 15:8,9,20-2). தாவீது செய்த விபச்சாரம் மற்றும் கொலை குற்றத்தை அவர் உணர்ந்து, அறிக்கை செய்தபடியினால் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டார். எனினும், அப்பாவத்தின் தவிர்க்கமுடியாத மற்றும் அழிவுகரமான விளைவினை அவர் சந்திக்கத்தான் வேண்டி இருந்தது (2சாமு.12 :14).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

சாமுவேலின் புத்தகங்களில் விளக்கம் அளிப்பதில் அனேக சவால்கள் இருக்கின்றன. அவைகளை இங்கே விரிவாக காணலாம்.

  1. அசல் கையெழுத்துப்பிரதியுடன் பண்டைய காலத்து பிரதிகளில் எந்த பிரதி மிக நெருக்கமான அர்த்தத்தை தருகிறது? எபிரேய (மேசேரெட்டிக்) என்னும் உரைமூலம் ஒப்பிட்டுபார்ப்போமானால், மிகவும் தரம் குறைந்த நிலையில் ஆவணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால், LXX மொழிபெயர்ப்பு அதிக இடங்களில் வேறுபடுகிறது. ஆக, மூல மொழியில் என்ன அர்த்தத்தில் எழுதியிருப்பார்கள் என்று உறுதியாக தீர்மானிக்கமுடியாமல் போய்விட்டது (1சாமுவேல்13:1 ஐ பார்க்கவும்). NKJV மொழிபெயர்ப்பு மேசோரெட்டிக் என்னும் - யூத புனித புத்தக உரையை எடுத்துப் பயன்படுத்துகிறது. எங்கெல்லாம் அதிகப்படியான மாறுதல் வருகிறதோ, அதை புத்தகத்தின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறது. மிகப்பெரிய இலக்கண அல்லது கூறப்படும் சூழலில் அசாத்தியாமான செய்திகளில் வேறுபாடு  இல்லாத போது – மேசேரட்டிக் உரையே மூல மொழி கூறும் செய்தி என்று அப்படியே எடுத்தாளப்படுகிறது. அனேக இடங்களில் உள்ள மொழிபெயர்ப்பு வித்தியாசத்திற்கான காரணம் இதில் இருந்து விளங்குகிறது. 
  2. சாமுவேல் இஸ்ரவேலில் மனுஷரை ராஜாவாக அமர்த்துவதில் தெளிவற்றவராக இருந்தாரா? 1சாமு.9-11ல் ராஜாவை ஏற்படுத்துவதில் அவர் உடன்பட்டு இருந்தார் எனக் காண்கிறோம். அதேவேளையில் 1 சாமு. 8 மற்றும் 12 அரசாட்சிக்கு விரோதமாக பேசுகிறது. இந்த புத்தகம் மனுஷரை ராஜாவாக அமர்த்தி, ஆட்சிபுரிய வைப்பது குறித்து ஒரு சமன்செய்து பார்க்கும் பார்வையைக் கொண்டிருக்கிறது எனலாம். இஸ்ரவேலில் ராஜா வேண்டும் என விரும்பினது - ஏற்றுக் கொள்ளப்பட்டது (உபா.17:15), ஆனால், அவர்கள் ராஜா வேண்டும் எனக் கேட்டதற்கான காரணம் கர்த்தரிடத்தில் அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்பதைக் காட்டியது.
  3. தீர்க்கதரிசிகளின் தெளிவற்ற நடவடிக்கைகள் குறித்து எப்படியாக ஒருவர் விளக்கம் தரமுடியும்? 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்கள்  தீர்க்கதரிசிகளை களிப்பூட்டும் பேச்சாளர்கள், மேலும் புறஜாதிகளின் விக்கிரக ஆராதனை செய்யும் தீர்க்கதரிசிகளைப்போல தெளிவற்ற நடத்தை கொண்டவர்களாக சித்தரிக்கிறது என்பது பொதுவான, தவறான எண்ணம். வேதாகமத்தில் இந்த கருத்திற்கு மாறாக தான் இருக்கிறது. எந்தவொரு இடத்திலும் தெய்வீக வெளிப்படுத்தலைச் சொல்லுவதைத் தவிர வேறு விதமாக தீர்க்கதரிசிகள் நடந்து கொள்வதையோ அல்லது ஓர் இசைக் கருவியை வைத்துக் கொண்டு மக்களை களிப்பூட்டுவதாகவோ தீர்க்கதரிசிகளை குறித்து இந்த புத்தகத்தில் எங்கும் காணவில்லை.
  4. பெந்தெகோஸ்தே நாட்களுக்கு முன் எப்படி பரிசுத்த ஆவியானவர் எப்படி செயல்படலாம்? பரிசுத்த ஆவியானவர் இறங்கி செயல்பட்டார் என நாம் 1சாமு.10:6,10; 11:6; 16:13,14; 19:20,23; 2சாமு.23:2 வசனங்களில் காண்பது, புதியஏற்பாட்டில் ஆவியானவர் இரட்சிப்புக்கு விளக்கம் தருவது போன்ற செயல் அல்ல. மாறாக, அவரது சேவைக்கு கர்த்தர் தாமே அதிகாரம் அளித்து அவர்களை நியமிப்பது போன்றதாக இருந்தது. (நியா 3:10; 6:34; 11:29; 13:25; 14:6; 15:14).
  5. "கர்த்தரால் அனுப்பிவிடப்பட்ட பொல்லாத ஆவி (1சாமு.16:14)” என்பதன் அடையாளம் என்ன? அது தனிப்பட்ட நபரைப்பொறுத்ததா? அதாவது, ஒரு பிசாசு அல்லது ஒரு பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி இருதயத்தில் தேவனால் உண்டுபண்ணப்பட்டதா? (நியா.9:23). பாரம்பரிய வழக்கமாக, இது ஒரு பிசாசு என்று பார்க்கப்படுகிறது.
  6. 1சாமு.28:3-5-ல் எப்படி சாமுவேல் தோன்றினார்? சாமுவேலைப்போன்ற தோற்றம் சவுலுடன் பேசும்படிக்கு தோன்றியது, மரித்த சாமுவேலே வந்து பேசுவது போல் காட்சி அளித்தது. 
  7. 2சாமு.7:12-15-ல் தாவீதின் கர்ப்ப பிறப்பாகிய சந்ததி என்று சொல்லப்பாட்டு இருப்பது யாருக்கு அடையாளம்? பொதுவாக இது சாலமோனைக் குறிக்கிறது என எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தைகள் எபிரேயர் 1:5-ல் இயேசுவை, தேவனுடைய குமாரனைக்  குறிக்கின்றன என்கிறது.  

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.