வேதாகம வரலாறுகள்

ரூத்

தலைப்பு: 

பழங்கால பதிப்புகள் மற்றும் நவீன கால மொழிபெயர்ப்புகள் இப்புத்தகத்திற்கு தொடர்ச்சியாக தந்துள்ள தலைப்பு - ரூத் என்பதாகும். இவள் இலட்சிய மோவாபிய பெண் – இப்புத்தகத்தில் பெயர் சொல்லி 12 முறை அழைக்கப்பட்டுள்ளவள் (1:4 – 4:13). இவள் பெயர் இப்புத்தகத்திற்கு தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பழையஏற்பாட்டில் இரண்டே இரண்டு பெண்களின் பெயர் தான் புத்தகத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது, அவை – ரூத் மற்றும் எஸ்தர். பழைய ஏற்பாட்டின் வேறு எந்த பகுதியிலும் ரூத்திலிருந்து குறிப்பு எடுக்கப்படவில்லை; புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு இடத்தில் – அதாவது கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் மட்டும் ரூத் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது (மத்தேயு 1:5; உறுதிபடுத்தும் வார்த்தை ரூத் 4:18-22). மோவாபிய அல்லது எபிரேய மொழியில் வரும் “ரூத்” என்னும் வார்த்தைக்கு “நட்பு” என்று அர்த்தம். ரூத் பெத்லகேமுக்கு புறதேசத்தாளாக வந்தாள் (2:10), ஒரு வேலைக்காரியாக ஆனாள் (2:13), செல்வந்தன் போவாஸை மணந்தாள் (4:13), மேலும் கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்றாள் (மத்தேயு 1:5).

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி:

யூதர்களின் பாரம்பரியம் இதன் ஆசிரியர் சாமுவேல் ஆகத் தான் இருக்கவேண்டும் எனக்கூறி கௌரவிக்கிறது. தாவீதை தேவன் தெரிந்தெடுத்த ராஜாவாக அபிஷேகித்த (1சாமு.16:6-13) நாள் வரை சாமுவேல் மரிக்கவில்லை (1 சாமு.25:1) என்பதால் இது நம்பத்தகுந்தது. ஆனாலும், உள்ளடக்கங்களோ அல்லது வெளிப்புற சாட்சிகளோ இவர் தான்  ஆசிரியர் என முடிவாக அடையாளம் காட்டவில்லை. இஸ்ரவேலில் தாவீது அரசாட்சி செய்ய ஆரம்பித்த அல்லது செய்து கொண்டிருந்தபோது - இந்த நேர்த்தியான சம்பவம் நடந்திருக்கலாம் (கி.மு. 1011-971), ஏனென்றால் தாவீது (4:17,22) குறிப்பிடப்பட்டிருக்கிறார், ஆனால் சாலமோன் குறிப்பிடப்படவில்லை. கோட்டெ (Goethe),” இந்த - பெயர் அறியப்படமுடியாத ஆனால் ஈடுஇணையில்லாத இலக்கியபடைப்பினை, “சிறிய அளவில் படைக்கப்பட்ட அழகான, பூரணமான படைப்பு” எனக் குறிப்பிடுகிறார். சிலைக்கு வீனஸ் எப்படியோ, ஓவியத்திற்கு மோனாலிஸா எப்படியோ அப்படி – ரூத் இலக்கியத்திற்கு இருக்கிறது.

 பிண்ணனி மற்றும் அமைப்பு

பெத்லகேமைத் தவிர (1:1) மோவாப் மட்டுமே, (சாக்கடலுக்கு கிழக்கில் இருக்கிற மோவாப், இஸ்ரவேலின் நிரந்தர பகைஞராக இருந்தவர்கள்) - இப்புத்தகத்தில், பூகோள ரீதியான/ தேசத்தின் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது (1:1,2). லோத்து தன் மூத்த மகளிடம் உறவுமுறையற்று பெற்று – மோவாபிற்கு தகப்பன் ஆனான் (ஆதி.19:37). பல நூறாண்டுகளுக்குப் பின், பிலேயாம் தீர்க்கதரிசியின் மூலம் ஏற்பட்ட மோவாபின் ராஜா பாலாக்கின் எதிர்ப்பை யூதர்கள் சந்திக்க வேண்டியிருந்தது (எண்:22-25). நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலரை மோவாபியர் 18 ஆண்டுகாலம் ஒடுக்கினர் (நியா.3:12-30). சவுல் மோவாபியர் மீது வெற்றி சிறந்தான் (1சாமு.14:47), அதேவேளையில், தாவீது அவர்களோடு சமாதானமான உறவை கொண்டிருந்தான் (1சாமு.22:3,4). பின்னர், மோவாபின் ராஜா இஸ்ரவேல் ராஜாவிற்கு விரோதமாக கலகம் பண்ணினான் (2ராஜா.3:5-27; எஸ்றா 9:1). மோவாபியர் அருவருப்பாகிய காமேசு விக்கிரத்தை வணங்கினபடியால் (1ராஜா.11:7, 33; 2ராஜா. 23:13) அது இஸ்ரவேலுக்கு விரோதமாக இருந்தபடியால், தேவன் மோவாபியரை சபித்தார் (ஏசா15,16; எரே. 48; எசே. 25:8-11; ஆமோஸ் 2:1-3).

ரூத்தின் சரித்திரத்தின் காலம் “நியாயாதிபதிகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வரும்” (1:1). கி.மு. 1370 லிருந்து கி.மு. 1041 (நியா. 2:16-19) நாட்களில் சம்பவித்தது – இதனால் நியாயதிபதிகளுக்கும் இஸ்ரவேலரை ராஜா ஆண்டகாலத்திற்கும் இடைபட்ட காலத்திற்கு இது ஒரு பாலமாக அமைந்துள்ளது. “யூதா தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” (1:1) என்னும் நிகழ்வைக் கொண்டு ரூத் சம்பவங்களை தேவன் தொடங்கி வைக்கிறார். ஆனால், இந்த பஞ்சத்தை குறித்து நியாயாதிபதிகளின் புத்தகத்தில் எந்த குறிப்பும் இல்லாதபடியால், ரூத் சரித்திர சம்பவங்களின் தேதியை அறுதியிட்டுச் சொல்வது கடினமாக இருக்கிறது. தாவீது அரசாண்ட (கி.மு. 1011-971) தேதியில் இருந்து – ஆண்டுகளை நாம் பின்னோக்கி கணக்கிடுவோமானால், ரூத் சம்பத்தின் நாட்கள் அதிகபட்சமாக யாவீர் (கி.மு.1126 - 1105) நியாயம் விசாரித்த நாட்கள் ஆக இருந்திருக்கலாம் (நியா. 10:3-5). 

ரூத் சரித்திரம் கீழ்க்காணும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது 11 அல்லது 12 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும்: 1) 1:1-18 மோவாபில் 10 வருடங்கள் (1:4); 2) 1:19 – 2:23, அனேக மாதங்கள் (ஏப்ரல் மத்தியில் இருந்து ஜூன் மத்தியில் வரை) போவாஸின் வயல்வெளியில் (1:22; 2:23); 3) பெத்லகேமில் ஒரு நாள் வாற்கோதுமை தூற்றும் இடத்தில் ஓர் இரவு (3:1-18); 4) ஏறக்குறைய ஓர் ஆண்டு பெத்லகேமில் இருந்தாள் (4:1-22). 

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

ரூத் புத்தகத்தின் - மொத்த (85) வசனங்களும் புனிதபுத்தக வரிசையில் வருவதாக யூதர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உன்னதப்பாட்டு, எஸ்தர், பிரசங்கி மற்றும் புலம்பல் என்னும் வரிசையில் – ரூத் - மெகிலோத் அல்லது “ஐந்து தோல்சுருள்கள்” என்று அழைக்கப்படும் பழையஏற்பாட்டு புத்தகங்களோடு இருக்கிறது. வருடத்தின் ஐந்து விசேஷ நாட்களில் ரபீமார்கள் / யூதகுருமார்கள் தேவாலயத்தில் இந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பார்கள். ரூத் புத்தகத்தின் 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்களில் அறுவடை சம்பவங்கள் வருவதால், ரூத் புத்தகத்தை பெந்தெகோஸ்தே காலத்தில் வாசிப்பார்கள்.

வம்சவரலாற்றை குறித்து பார்க்கும்போது, ரூத் புத்தகம் ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முந்தைய யாக்கோபின் காலத்தை குறிப்பிடுகிறது. எதிர்காலத்தை குறித்து பேசும் போது 100 ஆண்டுகளுக்கு பின் வரும் தாவீதின் அரசாட்சியை குறிப்பிடுகிறது (4:17,22). யோசுவா மற்றும் நியாயாதிபதிகளின் புத்தகம் தேசத்தின் பரம்பரையை குறித்து கவனம் செலுத்தும் வேளையில், ரூத் புத்தகம் தாவீதின் வம்சவரலாற்றில் கவனம் செலுத்தி அவனது பரம்பரையின் வேர் ஐந்து ஆகம காலத்தில் இருக்கிறது என்கிறது. 

ஏறக்குறைய ஏழு பெரிதான இறையியல் கருப்பொருட்கள் – ரூத் புத்தகத்தில் வெளிப்படுகின்றன. முதலாவது, மோவாபிய பெண்ணான ரூத்தின் சரித்திரம் குறித்து இப்புத்தகம் பேசுவதால், தேவன் தமது மீட்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் அப்பால் புறஜாதியாருக்கும் இடம் அளித்துள்ளார் என்பது வெளிப்படுகிறது (2:12). இரண்டாவது, தேவனின் இரட்சிப்புக்கும் கிருபைக்கும் - பெண்களும் உடன் - சுதந்திரவாளிகள் என்பதை நிரூபிக்கிறது (கலா.3:28). மூன்றாவது, நீதிமொழிகள் 31:10 சித்தரித்துக் காட்டும் குணசாலியான பெண்ணை நமக்கு படம்பிடித்து காட்டுகிறது (3:11). நான்காவது, அற்பமான ஜனங்களிடம் முக்கியமற்ற வேளையில் தேவனின் இறையாட்சி (1:6; 4:13) மற்றும் தேவைகளை சந்தித்தல் (2:3) நிறைவேறுவதும், பின்னர் அதுவே தேவனுடைய சித்தம் நிறைவேற்றுவதில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறினது என்பதையும் நிரூபிக்கிறது. ஐந்தாவது, ரூத் தாமார் (ஆதி.38), ராகாப் (யோசுவா 2) மற்றும் பத்சேபாள் (2சாமு.11,12) உடன் மேசியாவின் வம்சவரலாற்று வரிசையில் வருகின்றாள் (4:17,22 மத்தேயு 1:5 உறுதிபடுத்துகிறது). போவாஸ், ரூத்தின் உறவினனும், மீட்பனுமாகி, கிறிஸ்துவைப் போன்றவன் என ஆகிறான் (4:1-12). இறுதியாக, இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு உரிய தாவீதின் உரிமை (இதனால் கிறிஸ்துவின் உரிமை) யூதாவின் வழியாக நிலைநாட்டப்படுகிறது (4:18-22; ஆதியாகமம் 49:8-12)     

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

ரூத்தின் சரித்திரம் உண்மையில் வரலாற்றில் நடந்த சம்பவம் என அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். நியாதிபதிகள் மற்றும் 1 மற்றும் 2 சாமுவேலின் புத்தகத்துடன் இணக்கமாக இருப்பதுடன் ரூத் புத்தகத்தில் காணப்படும் சார்ந்திருக்கக் கூடிய உண்மைகள் ரூத் சரித்திரம் உண்மையாக நிறைவேறின ஒன்று என உறுதிப்படுத்துகிறது. ஆனாலும், சிற்சில கடினமான பகுதிகளை புரிந்துக்கொள்ள தனிப்பட்ட கவனம் அவசியம். 

முதலாவது, உபாகமம் 23:ல் மோவாபியர் பத்து தலைமுறை மட்டும் சபைக்குள் வரக்கூடாது என வெளிப்படையாக தடைசெய்திருக்கும் பொழுது, ரூத் சீலோவில் இருந்த (1 சாமு.4:4) ஆசரிப்புகூடாரத்தில் எப்படி ஆராதிக்க முடிந்தது? யூதர்கள் தேசத்தில் பிரவேசித்தது கி.மு. 1405 மேலும் ரூத் கி.மு. 1150  வரை பிறந்திருக்கவில்லை, இதைவைத்து பார்க்கும் போது, அவள் குறைந்த பட்சம் 11-வது தலைமுறையினரை (அல்லது அதற்கு பின் உள்ளவர்களை) பிரதிநிதித்துவம் செய்தாள். “பத்து தலைமுறைகள்” என்பது நெகேமியா 13:1 தெரிவிப்பது போல “என்றைக்கும்” என்று அர்த்தப்படுத்துகிறது என்று எடுத்துக் கொண்டால், ஏசாயா 56:1-8-ல் அந்நியபுத்திரன் ஒருவன் ஆண்டவரிடத்தில் சேர்க்கப்பட்டுக்  கொண்டான் என நாம் காண்பது போல், ரூத் அந்நியதேசத்து புத்திரியாக சங்கத்திற்குள் பிரவேசிக்க அனுமதி பெற்றிருப்பாள்.

இரண்டாவது, போவாஸும் ரூத்தும் திருமணத்திற்கு முன் இரவு நேரத்தில் ஒன்றாக இருந்தது (3:3-18) நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது. யெகோவா தேவன் இஸ்ரவேல் மீது வஸ்திரத்தை மூடி எப்படி உடன்படிக்கை செய்து கொண்டாரோ அப்படி (எசே.16:8), கிழக்கத்திய நாடுகளின் வழக்கத்தின்படி எப்படி தான் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் மீது வஸ்திரத்தை வீசி நிச்சயித்துக் கொள்வது போல், போவாஸ்-ரூத் திருமண நிச்சயம் நடந்திருந்தது. இந்த வேதாகம பகுதி “விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து (3:14)” என்று விளக்கம் அளிப்பதில் இருந்து இதில் எந்த விதத்திலும் நன்னெறி கெடவில்லை என அறிகிறோம். இவ்வாறாக, தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என போவாஸ் தாமே வேண்டிக்கொண்டது போல போவாஸ் ரூத்திற்கு தேவனின் அளித்த பதிலாக இருந்தான்.

மூன்றாவது, உபாகமம் 25:5,6-ல் நாம் காண்பது போல், “சகோதரனின் விதவையை மணக்கும்” பழக்கம், நெருங்கிய உறவினருக்கு ஏற்கெனவே விவாகம் உண்டாயிருந்தால், நெருங்கிய உறவுகளுக்குள் மணம் / பல தார மணம் போன்ற ஒழுக்க குறைபாடுகளுக்கு வழிநடத்தினதா? மரண தண்டனைக் கேதுவான ஒழுக்கக்கேட்டை தேவன் ஒருபோதும் வடிவமைக்க மாட்டார். உபாகமம் 25:5,6-ஐ நன்றாக கவனித்தோமானால் - நெருங்கிய உறவினர்களுக்குள் விவாகம் என்றாலும் அவர்களுக்கு இடையில் விவாகம் செய்வதற்கான தகுதி மற்றும் ஏனைய பிரமாணங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே மணம்புரிதல் வேண்டும் என்று இருப்பதை அறிந்துக்கொள்ளலாம்.

நான்காவது, மோவாபியருடன் விவாகத்தில் இணைக்கப்படுதல் நியாயபிரமாணத்தின்படி கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது அல்லவா? இஸ்ரவேல் தேசத்தார் மேற்கொண்டு சுதந்தரிக்கும் தேசங்கள் அல்லது ஜனங்களுடன் தான் விவாகம் செய்யக்கூடாது என தடைசெய்யப்பட்டிருந்தது - இதில் மோவாப் தேசம் இல்லை (யாத்.34:16; உபா.7:1-13; யோசுவா:23:12). மேலும், போவாஸ் - “யெகோவா தேவன் என் தேவன்” என ஏற்றுக் கொண்ட (1:16,17), மோவாபியர் வழிபடும் அருவருப்பான காமோசுக்கு பின்செல்லாத, ஒரு பெண்ணைத் தான் மணம் முடித்தார் (பின்னர், மோவாபியரின் இந்த பிரதான தேவர்கள் பிரச்சினைக்குள்ளாகுவதை எஸ்றா 9:1-2 மற்றும் நெகேமியா 13:23-25 ல் காண்கிறோம்).

சுருக்கம்
I எலிமெலேக்கு இறந்து போனான் மற்றும் நகோமி தனித்தவளானாள் (1:1-5)
II: நகோமியும் ரூத்தும் பெத்லகேமிற்கு திரும்புகிறார்கள் (1:6-22)
III. போவாஸ் வயல்வெளியில் காணும் ரூத்தை ஏற்றுக் கொள்கிறான் (2:1-23)
IV. போவாஸ் ரூத் காதல்வயப்படுதல் (3:1-18)
V. போவாஸ் ரூத்தை மீட்டெடுத்தல் (4:1-12)
VI. போவாஸ் ரூத் தம்பதியினருக்கு  தேவன் ஒரு மகனை பரிசாக அளிக்கிறார் (4:13-17). 
VII. இஸ்ரவேலின் அரியணை ஏறும் உரிமையை தாவீது பெறுகிறார். (4:18-22)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.