இணை வசன வேதாகமம்

லேவியராகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:யாத் 19:3 யாத் 24:1 யாத் 24:2 யாத் 24:12 யாத் 29:42 யோவா 1:17
2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.லேவி 22:18 லேவி 22:19 ஆதி 4:3 ஆதி 4:5 1நாளா 16:29 ரோம 12:1 ரோம 12:6 எபே 5:2
3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,லேவி 6:9-13 லேவி 8:18 லேவி 8:21 ஆதி 8:20 ஆதி 22:2 ஆதி 22:8 ஆதி 22:13 யாத் 24:5 யாத் 29:18 யாத் 29:42 யாத் 32:6 யாத் 38:1 எண் 23:3 எண் 23:10 எண் 23:11 எண் 23:19 எண் 23:23 எண் 23:24 எண் 23:27 எண் 23:30 எண் 29:8-11 எண் 29:13-11 ஏசா 1:11 எபிரெ 10:8-10
4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,லேவி 3:2 லேவி 3:8 லேவி 3:13 லேவி 4:4 லேவி 4:15 லேவி 4:24 லேவி 4:29 லேவி 8:14 லேவி 8:22 லேவி 16:21 யாத் 29:10 யாத் 29:15 யாத் 29:19 எண் 8:12 ஏசா 53:4-6 2கொரி 5:20 2கொரி 5:21
5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.லேவி 1:11 லேவி 3:2 லேவி 3:8 லேவி 3:13 லேவி 16:15 2நாளா 29:22-24 மீகா 6:6
6பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.லேவி 7:8 ஆதி 3:21
7அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,லேவி 6:12 லேவி 6:13 லேவி 9:24 லேவி 10:1 1நாளா 21:26 2நாளா 7:1 மல்கி 1:10
8அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.லேவி 8:18-21 லேவி 9:13 லேவி 9:14 யாத் 29:17 யாத் 29:18 1இரா 18:23 1இரா 18:33
9அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.லேவி 1:13 லேவி 8:21 லேவி 9:14 சங் 51:6 எரே 4:14 மத் 23:25-28
10அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,லேவி 1:2 ஆதி 4:4 ஆதி 8:20 ஏசா 53:6 ஏசா 53:7 யோவா 1:29
11கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.லேவி 1:5 யாத் 40:22 எசே 8:5
12பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
13குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
14அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.லேவி 5:7 லேவி 12:8 மத் 11:29 லூக் 2:24 2கொரி 8:12 எபிரெ 7:26
15அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,லேவி 5:8 சங் 22:1 சங் 22:21 சங் 69:1-21 ஏசா 53:4 ஏசா 53:5 ஏசா 53:10 மத் 26:1-27 1யோவா 2:27
16அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,லூக் 1:35 1பேது 1:2
17பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.ஆதி 15:10 சங் 16:10 மத் 27:50 யோவா 19:30 ரோம 4:25 1பேது 1:19-21 1பேது 3:18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.