தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் வெளியீட்டுக்கொள்கை
தமிழ் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான கட்டுரைகளையும், புத்தகங்களையும், செய்திகளையும் வழங்கும் முயற்சியில் முன்னொக்கிச் செல்கிறது தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.
உலக அளவிலும், குறிப்பாக தமிழ் கிறிஸ்தவ வட்டத்திலும் இன்று மலிந்து கிடக்கும் கள்ள உபதேசங்களுக்கு மத்தியில், சரியான உபதேசத்தை அடையாளம் காட்டி, ஆழமான கிறிஸ்தவ சத்தியங்களை தமிழில் வழங்குவதும் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் உன்னத நோக்கங்களில் ஒன்றாகும்.
தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் இந்த தேவனுடைய ராஜ்ஜியத்தின் கட்டுமானப் பணிகளில் உங்களையும் இணைத்துக்கொளுங்கள்.
நீங்கள் கிறிஸ்தவ எழுத்தாளராக இருப்பின் உங்கள் ஆவிக்குறிய தமிழ் கிறிஸ்தவப் புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகள் மற்றும் படைப்புகளை இலவசமாக தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடலாம்.
படைப்புகள், ஆசிரியரின் முழு ஒப்புதலுடன் info[at]truthintamil[dot]com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆசிரியரின் பெயர் (ஆசிரியர் விரும்பினால்) புத்தகத்தின் அறிமுகப் பக்கத்திலோ அல்லது கட்டுரையில் அடிக்குறிப்பாகவோ வெளியிடப்படும்.
கீழ்க்கண்ட நிபந்தனைகள் எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும்
✔ வேத வசன அடிப்படையில் சமநிலையான உபதேசத்தில் இருத்தல் அவசியம்.
✔ மற்றவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
✔ கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்.
✔ வாசகர்களை சலிப்படைய செய்யாதவிதத்தில் நல்ல மொழி நடையில், ஆங்கிலம் கலவா தமிழில் இருத்தல் சிறப்பு.
✔ தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிட, உங்கள் படைப்பின் பதிப்புரிமையை நாங்கள் கோருவதில்லை. ஆகவே நீங்கள் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிட்டாலும், படைப்பின் பதிப்புரிமை அதன் ஆசிரியரிடமே இருப்பதால், படைப்புகளை அதன் ஆசிரியர் விரும்பும் எவ்விடத்திலும் மீண்டும் வெளியிட எங்களிடத்திலிருந்து எந்த அனுமதியும் பெறதேவையில்லை.
✔ உங்கள் புத்தகத்தையோ அல்லது படைப்புகளையோ ஏற்கனவே வேறொரு புத்தக வெளியீட்டாளர் மூலம் வெளியிட்டிருப்பீர்கள் என்றால், தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதற்கு முன் அந்த புத்தக பதிப்பாளர்/வெளியீட்டாளரிடமிருந்து அனுமதி பெறுதல் அவசியம்.
கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் உங்கள் படைப்புகள் இருக்கலாம்
✔ அவிசுவாசிகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தும் உபதேசமாயிருக்க வேண்டும்.
✔ வேத ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட படைப்புகள்.
✔ வேதாகம மற்றும் கிறிஸ்தவ வரலாறுகள்.
✔ வேத வினா-விடை.
✔ வாலிபர், சிறுவர், பெரியவர் மற்றும் முதியவர்களை மையப்படுத்தும், ஆவிக்குறிய வாழ்க்கைக்கு உற்சாகப்படுத்தும் படைப்புகள்.
கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் உள்ள படைப்புகள் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை.
✘ பரவச பெந்தேகோஸ்தே போதனைகளை மையப்படுத்தும் செய்திகள் மற்றும் படைப்புகள்.
✘ கள்ள உபதேசங்கள், வேதத்திற்கு எதிராக உள்ள போதனைகள்.
✘ சொந்த அனுபவங்களை மையப்படுத்தும் போதனைகள்.
✘ ஜெபத்தில் பெயர் அழைத்தல், தீர்க்கதரிசனம் சொல்லுதல், அந்நிய பாஷை மற்றும் அற்புத சுகமளிக்கும் செய்திகள் மற்றும் படைப்புகளை தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை. (நாங்கள் தேவன் அளிக்கும் அற்புத சுகத்தை விசுவாசிப்பவர்கள்தான் என்றாலும், இன்றைய நாட்களில் கள்ள உபதேசிகள் நடத்தும் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களையும் செய்திகளையும் நம்புவதில்லை!)
Summary in English: Publish your Tamil Christian books, articles, messages, literature freely online in Tamil Christian Resources.
மேலும் விவரங்களுக்கு எங்களை info[at]truthintamil[dot]com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொள்ளலாம்.
தமிழில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிஷேசத்தை அறிவிக்கவும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய வாழ்க்கைக்கு பங்களிக்கவும் முனையும் தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ள அழைக்கிறோம்.
மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தும் அல்லது மற்றவர்களது ஆவிக்குறிய வாழ்க்கைக்கு உதவும் தமிழ் கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள், புத்தகங்களை உங்கள் சொந்த படைப்பையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதிய படைப்பையோ (எழுதியவரின் முழு அனுமதியுடன்) எங்களுக்கு அனுப்பினால், அது சம நிலையான போதனையுடன் இருக்கும்பட்சத்தில் அதை தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தில் இலவசமாக வெளியிட ஆயத்தமாயிருக்கிறோம்.
தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம் குறிப்பாக சீர்திருத்த போதனைகளையும், அதனுடன் ஒத்துப்போகும் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட முன்னுரிமை அளிக்கிறது. பரவச பெந்தேகோஸ்தே கிறிஸ்தவத்தின் அனுபவங்களான அந்நியபாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் சொல்லுதல், செழிப்பு உபதேசங்கள், அற்புத அடையாளங்கள், தரிசனங்கள் அல்லது சொந்த அனுபவங்களை மையப்படுத்தும் படைப்புகளைத் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கும் எமது வெளியீட்டுக்கொள்கையைக் காணவும். தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தை மேம்படுத்த உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பிரதான நோக்கம், இணையத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியை அறியாத மக்களுக்கு பிரசங்கிப்பதும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிறந்த ஆவிக்குறிய புத்தகங்கள், செய்திகள் மற்றும் படைப்புகளை பகிர்ந்துகொள்ளுவதும் ஆகும். குறிப்பாக, தேவனுக்கு சித்தமானால், ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை, படைப்புகளை தமிழாக்கம் செய்து இணையத்திலும், புத்தக வடிவிலும் வெளியிடுவதும் எங்கள் நோக்கம்.
தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் இன்று மலிந்து கிடக்கும் கள்ள உபதேசங்களை அடையாளம் காட்டி, அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலலித்து, சரியான உபதேசத்திற்கு நேராக கிறிஸ்தவ மக்களை தேவனுடைய கிருபையினால் வழி நடத்திச் செல்ல முனைகிறது தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்...
தமிழ் கிறிஸ்த்வக் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! பெயருக்கேற்ப கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள், செய்திகள், வேத ஆராய்ச்சிகள், கட்டுரைகள், பாடல்கள், பாடல் பிறந்த கதைகள், பொன்மொழிகள், பல்வேறு தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள், கேள்வி-பதில்கள் மற்றும் வேதாகம வினா-விடைகளை இங்கே தொகுத்து வழங்க விரும்புகிறோம். தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடப்படும் படைப்புகள் கள்ள உபதேசக் கலப்பின்றி சமனிலையான வேதாகம போதனையுடன் ஒத்திருக்கிறதா என்பதை உறுதிசெய்த பின்னரே வெளியிடுகிறோம். இந்த உன்னத ஊழியத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.